காசி விஸ்வநாதர் ஆலயத்தில், பிரதமர் வழிபாடு மற்றும் பூஜை மேற்கொண்டார்
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (18-06-2024) வழிபாடு மற்றும் பூஜை மேற்கொண்டார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு:
"இந்தியாவின் முன்னேற்றத்திற்காகவும், 140 கோடி இந்தியர்களின் செழிப்புக்காகவும் காசி விஸ்வநாதர் கோவிலில் நான் பிரார்த்தனை செய்தேன். மகாதேவனின் ஆசீர்வாதம் எப்போதும் நமக்குக் கிடைக்கட்டும். அனைவரும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க அவரது ஆசிகள் கிடைக்கட்டும்."உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தஷாஷ்வமேத் படித்துறையில், பிரதமர் கங்கா பூஜை மேற்கொண்டார்
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள தஷாஷ்வமேத் படித்துறையில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (18-06-2024) கங்கா பூஜை மேற்கொண்டார். கங்கா ஆரத்தியையும் அவர் பார்வையிட்டார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
"காசியில் உள்ள அன்னை கங்கையின் கரையில் இருந்து பதிவிடுகிறேன். 140 கோடி இந்தியர்களின் அமைதி, செழிப்பு மற்றும் நல்வாழ்வுக்காகப் பிரார்த்திக்கிறேன்"
பிரதமர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில் கூறியிருப்பதாவது:
"காசியில் கங்கா ஆரத்தியைக் காண்பது மனதை மயக்கும் அனுபவம். புனித கங்கையின் அழகு, அதனைச் சுற்றியுள்ள பிரகாசம் மற்றும் பக்தி ஆகியவை அதை மேலும் சிறப்பானதாக்குகின்றன."
கருத்துகள்