வீட்டில் வேலை செய்தவர்களை சித்ரவதை செய்ததாக பதிவு செய்த வழக்கின் விசாரணை முடிவில் ஹிந்துஜா குடும்பத்தினர் நான்கு நபருக்கு ஸ்வீஸர்லாந்து நீதிமன்றம், சிறைத் தண்டனை விதித்துள்ளது.
இருவருக்கு 52 மாதங்களும், மற்ற இருவருக்கு 46 மாதங்களும் சிறை தண்டனை விதித்துள்ளது
பிரிட்டனில் வசித்து வரும் இந்திய வம்சாவளியான கோபிசந்த் ஹிந்துஜா, வங்கி, எண்ணெய், வர்த்தகம் உள்ளிட்ட பல தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இவரின் சகோதரர்களில் ஒருவரான பிரகாஷ், ஹிந்துஜா குழுமத்தின் பல்வேறு பணிகளைக் கவனித்து வருகிறார்.
ஐரோப்பிய நாடான ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இவர்களுக்கு சொகுசு மாளிகையும் உள்ளது. இங்கு பணியாற்றிய இந்தியப் பணியாளர்களை பிரகாஷ் ஹிந்துஜா (வயது 78), அவரின் மனைவி கமல் ஹிந்துஜா (வயது75), மகன் அஜய், மருமகள் நம்ரதா ஆகியோர் கொத்தடிமைகளைப் போல நடத்தியதாகவும், அவர்களின் கடவுச்சீட்டு அதாவது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ததுடன், குறைந்த சம்பளம் வழங்கியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
அதுவும் ஸ்வீஸ் நாணயத்தில் வழங்காமல், இந்திய ரூபாயின் மதிப்பில் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டதாகவும், ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை பார்க்கும் படி கட்டாயபடுத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. அது தொடர்பான வழக்கு ஜெனிவாவில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையில், ஆட்கடத்தல் வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், இந்தியப் பணியாளர்களைக் கொடுமைப்படுத்திய வழக்கில், அவர்கள் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்ததுடன், பிரகாஷ் மற்றும் கமல் ஹிந்துஜாவுக்கு தலா 4 -1/2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அஜய் மற்றும் நம்ரதா ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. தீர்ப்பு வழங்கப்பட்ட போது இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக ஹிந்துஜா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்