முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருமணமான பெண்களுக்கு வேலை தர மறுக்கும் ஃபாக்ஸ்கான்

இந்திய அரசியலமைப்புச் சட்டம். ஆண், பெண், ஜாதி, மதமென எந்தப் பாகுபாடுமில்லாமல் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்பட வேண்டுமென்பதே வேலைவாய்ப்பைப் பெறுவது என்பது ஜனநாயக நாட்டில் ஒருவரின் அடிப்படை உரிமையாகிறது.


தமிழ்நாட்டில் செயல்படும் பன்னாட்டு நிறுவனம் ஒன்று, Foxconn in sriperumpudur நிறுவனம் திருமணமான பெண்களுக்கு வேலை தர மறுக்கிறது எனும் குற்றச்சாட்டு எழுந்ததால் பரபரப்பாகிறது.

தைவான் நாட்டைச் சேர்ந்த `டெக் ஜயன்ட்'டான `ஃபாக்ஸ்கான்’ (Foxconn), ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனைத் தயாரிக்கிறது. இந்த நிறுவனத்தின் தொழிற்சாலை சென்னை அருகில் ஶ்ரீபெரும்புதூரில் உள்ளது.



இந்த நிறுவனத்தில் திருமணமான பெண்களுக்கு வேலை தரப்படுவதில்லை என்பது கேள்விப்பட்ட பலரும் உள்ள நிலையில், 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் வேலை உள்ளதாக வாட்ஸ்அப் மூலம் வந்த விளம்பரத்தைப் பார்த்த பார்வதி மற்றும் ஜானகி ஆகிய இரு சகோதரிகள் வேலை கேட்டு அந்த நிறுவனத்துக்கு

சுமார் 20 வயதுள்ள இருவரும் தொழிற்சாலையை அடைந்தபோது, அதன் முன் கேட்டிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். அங்கிருந்த செக்யூரிட்டி அலுவலர், `உங்களுக்குத் திருமணமானதா?'' எனக் கேட்டிருக்கிறார்.


அந்தப் பெண்களும் `ஆம்' என பதில் கூறவே அந்த செக்யூரிட்டி அலுவலர், ``கல்யாணமாகியிருந்தா இங்கே வேலை தர மாட்டாங்க. நீங்க கிளம்புங்க'' எனச் சொல்லி திருப்பியனுப்பியிருக்கிறார்  ஶ்ரீபெரும்புதூர் முழுக்கவே இந்தத் தகவல் அனைவருக்கும் நன்றாகவே தெரிந்திருக்கிறது


ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் வேலை கேட்டு வந்த இந்த இரு பெண்களும் ஶ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்தில் இறங்கி, ஃபாக்ஸ்கான் நிறுவனத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என ஆட்டோ ஓட்டுனரிடம் கேட்டிருக்கிறார்கள். ஃபாக்ஸ்கானுக்கு அழைத்துச் செல்ல வந்த ஆட்டோ ஓட்டுனர், ``உங்களுக்குக் கல்யாணமாச்சா?'' எனக் கேட்டிருக்கிறார். அதற்கு அவர்களும் ``ஆம்'' என்று சொல்ல, ``கல்யாணமான பெண்களுக்கு அங்கு வேலை தரமாட்டங்களே, எனச் சொல்லி இருக்கிறார். ஆனால், நேரடியாகப் போய் கேட்டுத்தான் பார்ப்போமே என ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைக்கு வந்தபோது தான் செக்யூரிட்டி அலுவலர் ''வேலை இல்லை'' என்று சொல்லி அனுப்பினர்.  அதற்கு அவர்கள் தெரிவிக்கும் காரணமாக 

திருமணமாகாத பெண்களைவிட, திருமணமான பெண்களுக்கு குடும்பப் பொறுப்புகள் அதிகமென்பதே முக்கியமான காரணமென ஃபாக்ஸ்கான் நிர்வாகம் நினைக்கிறது.

அது குறித்து ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் மனிதவளத் துறை அலுவலராக இருந்து, அதிலிருந்து வெளியேறியவர் அது உண்மை என விளக்கம் தந்துள்ளார்.


``பொதுவாக, திருமணமான பெண்களைக் கலாசார சிக்கல்கள் மற்றும் சமூக அழுத்தங்கள் காரணமாக ஃபாக்ஸ்கான் வேலைக்கு அமர்த்துவதில்லை. பெண்களுக்குத் திருமணமாகி விட்டால் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாக நிர்வாகம் நினைக்கிறது’’ என்று அவர் சொல்லி இருக்கிறார்.


உதாரணமாக, குடும்ப வேலைகள், குழந்தைப் பேறு மற்றும் அதிக விடுப்பு போன்ற காரணங்களால் திருமணமான பெண்கள் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்க்கப்படுவதில்லை என்கிறார்கள்.


இன்னொரு வித்தியாசமான காரணத்தையும் சொல்கிறார்கள். திருமணமான பெண்கள் அணியும் நகைகளால் இங்கு உற்பத்தி செய்யப்படும் செல்போன்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதே அந்தக் காரணம். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஃபாக்ஸ்கான் ``2022-ஆம் ஆண்டில் பணியமர்த்தல் நடைமுறைகளில்  குறைபாடுகள் இருந்தன. ஆனால், அவற்றை நீக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துவிட்டோம்'' எனச் சொல்லி இருக்கிறது. இந்த விவகாரம் இப்போது பெரிதாகிறது. தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்தெரிவித்துள்ள மகளிர் ஆணையத்தின் கடிதம் கூறுவது  "ஸ்ரீபெரும்புதூரிலுள்ள ஃபாக்ஸ்கான், திருமணமான பெண்களுக்கு வேலை, திருமணம் மற்றும் மகப்பேறு விடுப்பு ஆகியவற்றை மறுத்து பாரபட்சமாக நடந்து கொள்வதாக கூறப்படுகிறது. ஒப்பந்தங்களை நிறுத்துதல் மற்றும் கழிப்பறையைப் பயன்படுத்துதல் போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்தல் ஆகியவை குற்றச்சாட்டுகளில் அடங்கும். இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையம் விசாரித்து, பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...