முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓய்வு நீதிபதி சந்துரு கமிஷன் ஒரு நபர் அறிக்கை சமூக நீதியை முழுமையாக காத்திடுமா அல்லது ஒரு தலைப்பட்சமா என்பதே மக்கள் முன் எழும் விவாதம்

கல்வி நிறுவனங்களில் ஜாதிய வன்முறைகளைத் தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் அமைந்த ஒரு நபர் குழு


தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆதி திராவிட நலத்துறை உள்பட எந்த நிறுவனம் சார்ந்த ஜாதிய அடையாளமும் இருக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளதுபள்ளி, கல்லூரிகளில் ஜாதிய வன்முறைகள் நடப்பதைத் தடுப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குழு தமிழ்நாடு அரசுக்குப் பரிந்துரைகளை வழங்கியுள்ளதில் கூறப்பட்டு இருப்பதாவது: அரசு பள்ளிகளின் பெயர்களில் எந்த ஜாதிய அடையாளங்களும் இருக்கக் கூடாது. ஆதி திராவிட நலத்துறை உள்பட எந்த ஜாதி அடையாளமும் இருக்கக் கூடாது. இதேபோல் தனியார் பள்ளிகளில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்க வேண்டும். ஜாதி அடையாளங்கள் இருக்கக் கூடாது என்ற உறுதிமொழி பெற்ற பின்னரே புதிய பள்ளிகள் தொடங்குவதற்கு அனுமதியளிக்க வேண்டும்.

குறிப்பிட்ட ஜாதி ஆதிக்கமாக உள்ள அந்தப் பகுதிகளில் இருக்கும் பள்ளிக்கூடங்களில் அதே சமூகத்தினரைச் சேர்ந்தவரை தலைமையாசிரியராக நியமனம் செய்யக் கூடாது. ஆசிரியர்களை தேர்வு செய்யும் போது சமூக நீதி சார்ந்த அவர்களின் நிலைப்பாட்டினைத் தெரிந்துகொள்ள வேண்டும். கைகளில் வண்ணக்கயிறுகள், நெற்றியில் திலகம் மற்றும் சிலுவை, குல்லா போன்றவற்றிற்கு தடை விதிக்க வேண்டும். மாணவர்களின் வருகைப் பதிவேட்டில் எக்காரணம் கொண்டும் ஜாதிப் பெயர் இடம்பெறக்கூடாது. மாணவர்களின் ஜாதி விவரங்களை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.       மேலும்              தற்போதுள்ள தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம், 1975ஐத் திருத்தம் செய்து, கல்வி நிறுவனத்தைத் தொடங்க விரும்பும் ஒரு சங்கம், தங்கள் நிறுவனத்தின் பெயரில் எந்த ஜாதி மேல்முறையீடுகளையும் சேர்க்கக் கூடாது என்ற விதியைச் சேர்க்க, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இருக்கை அமைப்பு

அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள ஒவ்வொரு வகுப்பறையிலும் மாணவர்களின் இருக்கை ஏற்பாடுகள் கண்டிப்பாக அகர வரிசையின் அடிப்படையில் (அவர்களின் பெயர்கள்) இருக்க வேண்டும் என்று குழு பரிந்துரைக்கிறது.

பள்ளி மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்துவதைத் தடை செய்வதில் மாநில அரசும் பள்ளிக் கல்வித் துறையும் "நியாயமானவை" என்று அறிக்கை கூறினாலும், பள்ளி வளாகங்களில் மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்துவதைத் தடை செய்வதைக் கண்டிப்பாக அமல்படுத்துவது முக்கியம் என்று குழு கூறியது.அளவிலான நிர்வாகங்கள் (ஊராட்சி ஒன்றியங்கள்) பள்ளிகளின் மீது முழுக் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். .

"பாடத்திட்டம் மற்றும் தரநிலைகள் தொடர்பான வழிகாட்டுதல்களை வகுத்தல் மற்றும் வாரியத் தேர்வுகளை நடத்துதல் ஆகியவை பள்ளிக் கல்வி இயக்குநரகம் மற்றும் மாநில அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு உண்மையான தன்னாட்சி அதிகாரங்களை வழங்குவதற்கான புதிய சட்டத்தை அரசாங்கம் உருவாக்க வேண்டும், மேலும் 1994 ஆம் ஆண்டின் தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தை திருத்துவதன் மூலம் கல்வியை மேலும் மக்கள் சார்ந்ததாக மாற்ற வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.               இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளதுஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையிலான அமைந்த ஒரு நபர் குழுவானது கடந்த 2.5.2023 முதல் பொறுப்பேற்றதுடன் கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறன்களை மேம்படுத்த ஏதுவாக பொதுமக்களின் கருத்துக்களும் கோரப்பட்டது. அதோடு மட்டுமல்லாது மேற்படி ஒரு நபர் குழுவானது மாநிலத்தில் செயல்பட்டுவரும் அனைத்து கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றை நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டது கடந்த 11.04.2023 அன்று இளைஞர் நீதி அமைப்பின் கீழ் செயல்பட்டுவரும் கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறன்களை மேம்படுத்தும் பொருட்டு, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து அரசு ஆணையிட்டது. இந்த நிகழ்வின் போது, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, சமூக நலத்துறை ஆணையர் (பொறுப்பு) வே. அமுதவல்லி, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு அவர்களின் மகள் சக்தி ஆகியோர் உடனிருந்தனர்,            மற்றும் இந்த நிலையில். 3 ஆம் வகுப்பு பள்ளி பாடப்புத்தகத்திலேயே மத அடையாளங்கள் இருக்கும் நிலையில், பள்ளியில் ஜாதிய அடையாளங்கள் இருக்கக்கூடாது என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?


தேனி ஊராட்சிக் குழு கூட்டத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் அறிக்கையை கிழித்தெரிந்த ஊராட்சி குழு துணைத் தலைவர்  ராஜபாண்டி    

கள்ளர் பள்ளியை மட்டுமே சுட்டிக்காட்டிய நீதிபதி சந்துரு கிறிஸ்துவப் பள்ளியின் பெயர்களை பற்றி எதுவும் கூறவில்லையே. அது எந்த நீதியில் வரும் அவரது தனிப்பட்ட பாசமா? என்பதே பலரது எழு வினா?  இந்த நிலையில்               


சென்னையில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மையக் குழுக் கூட்டத்துக்குப் பின் தமிழிசை சௌந்தரராஜனுடன் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, "முன்னாள் நீதிபதி சந்துரு வழங்கிய அறிக்கையின் பரிந்துரைகள் சர்ச்சைக்குரியதாகவும், ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையிலும் இருக்கிறது.

இந்த அறிக்கையை மாநில அரசு முழுவதுமாக நிராகரிக்க வேண்டும். ஹிஜாப் அணியத் தடைவிதித்தால் அது தவறு, ஹிஜாப் அணிய அனுமதி வேண்டும் என்று கூறும் ஒரு குழு இன்று, இந்துப் பெண்கள் நெற்றியில் பொட்டு வைத்து வரக் கூடாது, கைகளில் கயிறு கட்டக் கூடாது என்கிறது. எப்படி நெற்றியில் திலகம் வைக்கக் கூடாது என்று கூறலாம். எனவே ஒரு குறிப்பிட்ட மதத்தைக் குறிவைக்கும் விதமாக இந்த அறிக்கை இருக்கிறது.

ஏதோ உள்நோக்கத்துடன் இந்த அறிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. மாநில அரசு இதை ஏற்கக் கூடாது என்று மைய குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது."

என்றார்.                                                இதில் பொதுவாக உள்ள நீதி யாதெனில் நீதிபதி சந்துரு கம்யூனிஸ சித்தாந்தம் கொண்டவராவார், அவரது தலைமையில் குழு அமைத்தால் அவர் அவரது கொள்கைகளையும், சித்தாந்தம் நெறிமுறைகளையும் புகுத்துவார் புகுத்துவார் என்பதே உண்மை. அதை அவர் செம்மையாகவே செய்து முடித்துள்ளார்.ஜாதியின் பெயரால் ஒரு சாரார் சலுகையும் இட ஒதுக்கீடும் பெறும் போது ஒரு பிரிவு எந்த சலுகையும் இல்லாத நிலையில் நீதிபதி சந்துரு சலுகைகள் எதுவுமே கூடாது என்று சொல்லியிருந்தால் நல்ல பரிந்துரை .

இது ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தலைமையை திருப்திபடுத்தக் கொடுத்த பரிந்துரையா? என அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கேட்பதில் நியாயம் உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு