முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக சி ஜி கர்ஹட்கர் பொறுப்பேற்றார்

கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக  சி ஜி கர்ஹட்கர்  பொறுப்பேற்றார்


கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக திரு சி ஜி கர்ஹட்கர்  பதவியேற்றார். இதற்கு முன் இந்த பொறுப்பிலிருந்த புகழ் பெற்ற விஞ்ஞானி முனைவர் பி வெங்கட்ராமன் பணி நிறைவுப் பெற்றதையடுத்து திரு கர்ஹட்கர் புதிய இயக்குநராகப் பொறுப்பேற்றார்.

இவர் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் அணு உலைக் குழுமத்தில் புகழ்பெற்ற விஞ்ஞானி மற்றும் இயக்குநராக உள்ளார். இவர் 1987-ம் ஆண்டு இயந்திரப் பொறியாளர் இளநிலைப் பட்டப்படிப்பை முடித்தார். மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையப் பயிற்சிப் பள்ளியிலும் பட்டம் பெற்றார். 1988-ம் ஆண்டு இம்மையத்தின் அணு உலை செயல்பாட்டுப் பிரிவில் பணியில் சேர்ந்தார். கடந்த 36 ஆண்டுகளில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றியுள்ளார்.

பாபா அணு ஆராய்ச்சி உலை குழுமத்தின் இயக்குநரான இவர், அணு உலைகளின் பாதுகாப்பான மற்றும் திறமையான இயக்கம், பயன்பாடு, அணு உலை நீக்கம், புதிய அணு உலைகளுக்கான திட்டமிடல் ஆகியவற்றின் ஒட்டுமொத்தப் பொறுப்பாளராக செயல்பட்டார். துருவா அணு உலையின் எரிபொருள் செயல் திறனை மேம்படுத்துவதில் அதிக அளவு பங்களிப்பு செய்துள்ளார். தொடர்டைய பொருட்களை மேம்படுத்துவதற்காக தேசிய விற்பனையாளர்களுடன் கலந்துரையாடுவது, உற்பத்தி முறையை ஆராய்ந்து மேம்படுத்துவது, இறுதியாக துருவா அணு உலை நீடித்த வகையில் முழு ஆற்றலுடன் இயங்குவதற்கு மிகவும் பொறுப்பாக இருந்தார். இவர் பல்வேறு பாதுகாப்பு மேம்படுத்துதலுக்கு வழிகாட்டி செயல்படுத்தியுள்ளார். ஆராய்ச்சி அணு உலைகளின் தற்போதைய பாதுகாப்புத் தர நிலைகளை மேம்படுத்துதல் மற்றும் அணு உலைகளுக்கான இருப்பு மற்றும் திறன் காரணிகளை சமரசம் செய்யாமல் 2018-ம் ஆண்டில் நீண்ட காலமாக நிறுவுவதற்கு தேவையான சில பழுதுபார்ப்புகளை புதுமையான முறையில் அணு உலை கருவை இறக்காமல் செய்ததன் மூலம் வருடம் முழுவதும் அணு உலை செயலிழப்பு தவிர்க்கப்பட்டது.

இவரது கவனமான திட்டமிடல் மற்றும் தலைமைத்துவம் காரணமாக 75 நாட்கள் கால அவகாசம் இருந்த போதும் 10 நாட்கள் முன்பாகவே பணி முடிக்கப்பட்டது. இதன் காரணமாக ஓரகத் தனிமங்களின் விநியோகம் விரைவாக மீண்டும் தொடங்கப்பட்டது. 123 புரிந்துணர்வு காரணமாக சைரஸ் அணு உலை, 2010 டிசம்பர் மாதம் நிறுத்தப்பட்டது. இதற்குப் பின் மருத்துவத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக விரைவாக அணு உலையில் நிறைய பொறியியல் மாற்றங்களை செய்து தொழில் துறையில் ஆராய்ச்சி அணு உலைகளின் பயன்பாட்டுத் திட்டங்களைத் துவக்கினார்.

அவரது தலைமையின் கீழ் கதிர்வீச்சின் விளைவு மற்றும் நிதி ஒதுக்கீட்டின் சமநிலையை வைத்து நாட்டிலேயே முதல் முறையாக சைரஸ் போன்ற பெரிய அணு உலைக்கானத் திட்டம் தயாரிக்கப்பட்டது. பொருட்களின் கதிர்வீச்சு பண்புகளுக்கான தரவுத்தளத்தை உருவாக்குவதற்கு சைரஸ் அணு உலையிலிருந்து தரவுச் செயலாக்கத்திற்கான ஒரு செயல்முறையை நிறுவுவதில் இவர் முக்கியப் பங்கு வகித்தார். புதிய அணு உலைகளை வடிவமைக்கவும் மற்ற இயக்கத்தில் உள்ள அணு உலைகளின் ஆயுட்காலத்தை அதிகரிக்கவும் இது பயனுள்ளதாக இருக்கும்.

பழைய அப்சரா அணு உலை சர்வதேச உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக 2009-ல் மூடப்பட்டது. அப்சரா-யு, 2 மெகாவாட் அணு உலை இவரது தலைமையின் கீழ் வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டது. பழைய அப்சரா அணு உலையை அருங்காட்சியகமாக மாற்ற வாய்ப்புள்ளது. அணுசக்தித் துறையின் சாதனைகள் மற்றும் வரலாற்றை முன்னிலைப்படுத்தும் பல காட்சிக் கூடங்களை நிறுவ அரும்பணியாற்றியுள்ளார். இந்தக் கண் காட்சி மையம் விழிப்புணர்வுக்கு ஒரு முக்கியமான இடமாக இருக்கும். கொவிட்-19-ன் போது பயணக் கட்டுபாடுகள் காரணமாக அலுவலகத்திற்குச் செல்ல முடியாத பணியாளர்களுக்குப் பதிலாக துருவா அணுஉலை 24 மணி நேரமும் அதிகாரிகள் உதவியுடன் இயக்கப்படுவதை உறுதி செய்தார். இதன் மூலம் ஓரகத் தனிமங்கள் விநியோகம் தடையின்றி கிடைத்தது.

திரு கர்ஹட்கர், பல நிர்வாக, நிதி, தொழில்நுட்ப மற்றும் ஒழுங்குமுறை குழுக்களுக்கு தலைமை வகித்துள்ளார். கொள்முதல் நடைமுறைகளை சீர்திருத்துவதில் அவர் முக்கியப் பங்காற்றினார், கொள்முதல் நடைமுறைகளை எளிதாக்கியதால் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் திட்டங்கள் விரைவாக செயல்படுகிறது. இம்மையத்தின் பல உத்திக் குழுக்களின் உறுப்பினராக உள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்