முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இட ஒதுக்கீட்டில் சமூகநீதி காக்க ஜாதி வாரிக் கணக்கெடுப்பு தேவை எனக் கேட்கும் பாமக

ஜாதி வாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தேவை என


முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர்  ச.ராமதாஸ் வழங்கிய கடிதம்.:       

   அன்புள்ள தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு,

வணக்கம்!

பொருள்: தமிழ்நாட்டில் சமூக நீதியைக் காக்க மாநில அளவிலான ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசே நடத்தக் கோருதல் -தொடர்பாக

சமூகநீதியின் தொட்டில் என்று போற்றப்படும் தமிழ்நாட்டில், சமூக நீதியைப் பாதுகாப்பதற்காக  அவசரமாகவும், அவசியமாகவும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக தமிழ்நாட்டின் முதலமைச்சராகிய தங்களுக்கு இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன்.

தமிழ்நாட்டில் ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது 83 ஆண்டு காலக் கோரிக்கை ஆகும். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1881 ஆம் ஆண்டில் தொடங்கி 1931 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஒருமுறை ஜாதி வாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்தது. இரண்டாம் உலகப்போர் காரணமாக 1941 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதிவாரியாக நடத்தப்படாத நிலையில், அப்போதிலிருந்தே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான கோரிக்கைகள் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

1980 ஆம் ஆண்டு வன்னியர் சங்கம் உருவாக்கப்பட்ட நாளில் தொடங்கி 43 ஆண்டுகளாக ஜாதி வாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்காக நான் குரல் கொடுத்து வருகிறேன். அதன்பிறகு  1989, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதற்கான சூழல் ஏற்பட்டது. ஆனால், நல்வாய்ப்புக்கேடாக அந்த வாய்ப்புகள் தவறவிடப்பட்டன.

இந்தியாவில் தமிழ்நாட்டுக்கு இணையாக சமூகநீதியைப் பாதுகாக்கும் மாநிலங்களில் ஒன்றான  பிஹாரில் ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் விவரங்கள் மஹாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளான கடந்த அக்டோபர் மாதம் 2 ஆம் நாள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு ஆதரவான குரல்கள் எழுந்துள்ளன. தமிழ்நாட்டின் முதலமைச்சராகிய தாங்களும் ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு ஆதரவான நிலையையே எடுத்து வந்திருக்கிறீர்கள்.  அத்தகைய கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தும் என்று எண்ணி காத்திருப்பதா? தமிழ்நாடு அரசே அதன் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்துவதா? என்பது தான் நமக்கு இடையே உள்ள மாறுபட்ட கருத்து நிலைப்பாடுகள் ஆகும்.


சமூகநீதியைக் காக்க இந்தியா முழுவதும் 2021 ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகைகா கணக்கெடுப்பை ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் நாள் இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தீர்கள். தேசிய அளவில்  கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியதன் தேவை குறித்தும் அதில் குறிப்பிட்டிருந்தீர்கள். அவற்றில் மாற்றுக்கருத்துகளுக்கு இடமில்லை. தேசிய அளவில் 2021 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பாக நடத்துவதை பாட்டாளி மக்கள் கட்சியும் ஆதரிக்கிறது. அதற்கான பல்வேறு தருணங்களில் பா.ம.க. குரல் கொடுத்திருக்கிறது. ஆனால், இன்றைய சூழலில் அதற்கு வாய்ப்பில்லை என்பதால், மாற்று ஏற்பாடாக மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தும்படி பா.ம.க. வலியுறுத்துகிறது.


2021ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று கோரி, இந்தியப் பிரதமருக்கு தாங்கள் கடிதம் எழுதி 70 நாட்களாகி விட்ட நிலையில், அது தொடர்பாக மத்திய அரசிடமிருந்து சாதகமான பதில் எதுவும் வரவில்லை. அதேநேரத்தில், பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் பல்வேறு மேடைகளில் ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு எதிராகப் பேசி வருகின்றனர். அதனால் தான், ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை தமிழக அரசே சொந்தமாக நடத்த வேண்டும் என பா.ம.க. வலியுறுத்தி வருகிறது.


தமிழ்நாட்டில் ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதற்கான தேவை கடந்த காலங்களில் இருந்ததை விட இப்போது அதிகரித்திருக்கிறது. தமிழகத்தின் சமூக நீதி சிறப்புகளில் முதன்மையானது 69 சதவீத இட ஒதுக்கீடு ஆகும். அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 2010-ஆம் ஆண்டில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ‘‘69 சதவீதம் இடஓதுக்கீடு செல்லும்; ஆனால், ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீட்டின் அளவை உறுதி செய்ய வேண்டும்’’ என்று ஆணையிட்டது. ஆனால், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படாததால் 69 சதவீதம் இடஓதுக்கீட்டுக்கு எதிராக மீண்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் விவரங்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாவிட்டால், 69 சதவீதம் இட ஒதுக்கீட்டைக் காப்பாற்ற முடியாது என்பது தான் உண்மை.

பிஹார் உள்ளிட்ட சில மாநிலங்களில் இடஒதுக்கீட்டின் அளவு 70 விழுக்காட்டைக் கடந்து விட்ட நிலையில், தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவை அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக உயர்த்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.   இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டுமானால், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட  மக்கள் தொகையை ஜாதிவாரியாகக் கணக்கிட வேண்டும். அதற்கு ஜாதிவாரிக் கணக்கெடுப்பு அவசியம்.


நாடாளுமன்றத்தில் 2008 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்திய புள்ளிவிவர சேகரிப்பு சட்டத்தின் படி  (The Collection of Statistics Act, 2008) தமிழ்நாட்டில் ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை தமிழக அரசே அதன் பணியாளர்களைக் கொண்டு நடத்த முடியும். சுமார் ஒரு மாத கால அவகாசத்தில்  ரூபாய்.300 கோடி செலவில் ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை மிக எளிதாக நடத்த முடியும்.

ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்த சட்டப்படி எந்தத் தடையும் இல்லை. பிஹாரில் ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் அம்மாநில உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு குறித்த கூடுதல் விவரங்களை வெளியிடக்கூடாது என்று கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் நாள் தொடரப்பட்ட புதிய வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அதனால், இன்றைய சூழலில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தடைகள் இல்லை.


எனவே, தமிழ்நாட்டின் தேவையையும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் தமிழக அரசின் சார்பில் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முன்வர  வேண்டும். அதற்கான கால அட்டவணையை உடனடியாக வெளியிட வேண்டும் என கோருகிறேன்.

 மிக்க நன்றி  எனத் தெரிவித்துள்ளார்.பீஹார் மாநிலத்தின் புதிய ஜாதிவாரிக் கணக்கெடுப்பின்படி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - 36.01 சதவீதம், 

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - 27.12 சதவீதம், 

பட்டியல் ஜாதி - 19.65 சதவீதம், 

இடஒதுக்கீடு இல்லாத உயர் ஜாதியினர் - சுமார் 15.52 சதவீதம் 

பட்டியல் பழங்குடி மக்கள் - 1.68 சதவீதம் 

ஜாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பில் கிடைத்திருக்கும் தரவுகளின் படி, மத நம்பிக்கைகளின் அடிப்படையில் பீஹாரில் இந்துக்கள் அதிகம் உள்ளனர். மாநிலத்தில் ஹிந்துக்களின் மக்கள் தொகை சுமார் 82 சதவீதம் 

அதேசமயம்,   இஸ்லாமியர்கள் - 17.7 சதவீதம், கிறிஸ்தவர்கள் - 0.05 சதவீதம், பௌத்தர்கள் - 0.08 சதவீதம், சீக்கியர்கள் - 0.01 சதவீதமாகவும், 

இவர்கள் தவிர, சமணர்கள் மற்றும் வேறு சில மதத்தினரும் பிஹாரில் உள்ளனர். எந்த மதத்தையும் பின்பற்றாதோர் 2,146 பேர் அதாவது 0.0016 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர்.

பிஹாரின் முக்கிய உயர் ஜாதியினரைப் பற்றி நாம் பேசினால், மாநிலத்தில் பிராமணர்களின் அதிக மக்கள் தொகை உள்ளது.

பிராமணர் மக்கள் தொகை - 3.65 சதவீதம், இராஜபுத்திரர் மக்கள் தொகை - 3.45 சதவீதம், பூமிஹார் மக்கள் தொகை - 2.86 சதவீதம், இந்தக் கணக்கெடுப்பில், பீஹாரில் திருநங்கைகளின் மொத்த எண்ணிக்கை 825 நபர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.     இந்த நிலையில்    காங்கிரஸ் கட்சியின் பல பெரிய தலைவர்கள் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரத்தை சமீபகாலமாக உரக்கவே எழுப்பி வருகின்றனர். ஜாதிவாரிக் கணக்கெடுப்புடன், 'எண்ணிக்கை அதிகமாக இருந்தால், பங்கு அதிகம்' என்ற கோஷமும் எழுப்பப்படுகிறது.

2011-ஆம் ஆண்டு ஜாதிவாரிக் கணக்கெடுப்பு விவரங்களை வெளியிடவும், பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினருக்கு அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்கவும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பலமுறை கோரிக்கை விடுத்துள்ளார்.

உண்மையில், ஜாதி எண்களின் அடிப்படையில் இடஒதுக்கீடு கேட்பதன் மூலம், எதிர்க்கட்சிகள் ஆதிதிராவிடர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பெரும் வாக்குகளை தனக்கு ஆதரவாகக் கொண்டுவர விரும்புகின்றன. இது பாரதிய ஜனதா கட்சியின் ஹிந்து வாக்கு வங்கியையும் பலவீனப்படுத்தும் என நம்பப்படுகிறது. அதனால் தான் பல மாவட்டங்களிலும் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடந்த இயலாத நிலையில் உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் பல சமஸ்தானத்தின் ஒருங்கிணைப்புப் பணிகள் முடிந்து, புதிய முன்னேற்றங்கள் நிகழ்ந்தன. ஜாதி அடிப்படையிலான வேலைகளை இட ஒதுக்கீட்டால் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் என்ற பட்டியல்களுடன் முறைப்படுத்தப்பட்டது. 1950 ஆம் ஆண்டு முதல், நாடு அதன் குறைந்த ஜாதி மக்களின் சமூக பொருளாதார நிலைமைகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் பல சட்டங்களையும் சமூக முயற்சிகளையும் இயற்றியுள்ளது. ஜாதிய அமைப்பு ஹிந்துக்களை நான்கு முக்கிய வகைகளாகப் பிரிக்கிறது - 

அவை வர்ணாசிரம மனு தர்மப்படி சுதந்திர காலத்திற்கு முன்பே வேத காலம் தொட்டே மன்னர் ஆட்சியில் அந்தணர்கள், (FC அல்லது OC) க்ஷத்திரியர்கள், (OC,BC மற்றும் MBC /DNC) வைசியர்கள் (OC,BC). மற்றும் இதில் அகில இந்திய ஒதுக்கீடுகள் OBC என்று தான் கணக்கிடப்படும். சூத்திரர்கள் (DNC,SC,ST )என ஹிந்து படைப்புக் கடவுளான பிரம்மாவிடமிருந்து நான்கு குழுக்கள் தோன்றியதாக மனு வழியில் இன்னும் பலர் நம்புகிறார்கள். அதனடிப்படையில் தான் தற்போது நான்கு பிரிவுகளில் இட ஒதுக்கீடுகள் நடக்கிறது,  காங்கிரஸ் கட்சியின் பல பெரிய தலைவர்கள் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரத்தை சமீபகாலமாக உரக்க எழுப்பி வருகின்றனர். ஜாதிவாரிக் கணக்கெடுப்புடன், 'எண்ணிக்கை அதிகமாக இருந்தால், பங்கு அதிகம்' என்ற கோஷமும் எழுப்பப்படுகிறது.

2011-ஆம் ஆண்டு ஜாதிவாரிக் கணக்கெடுப்பு விவரங்களை வெளியிடவும், பிற்படுத்தப்பட்டோர், பட்டியலில் உள்ளவர் மற்றும் பழங்குடியினருக்கு அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்கவும் ராகுல் காந்தி பலமுறை கோரிக்கை விடுத்துள்ளார்.

உண்மையில், ஜாதி எண்களின் அடிப்படையில் இடஒதுக்கீடு தருவதன் மூலம், எதிர்க்கட்சிகள் பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பெரும் வாக்கு வங்கிகளை தனக்கு ஆதரவாகக் கொண்டுவர விரும்புகின்றன. இது பாரதிய ஜனதா கட்சியின் ஹிந்து வாக்கு வங்கியையும் பலவீனப்படுத்தும் என நம்பப்படுகிறது. அதனால் தான் இதில் தேக்கநிலை உள்ளது. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு