உத்தரப் பிரதேச பெண்ணை கொலை செய்த வழக்கில் கிளி சொன்ன சாட்சியால் இருவருக்கு ஆயுள் தண்டனை
. உத்தரப் பிரதேசம் ஆக்ரா நகரில் விஜய் சர்மா மனைவி நீலம் சர்மா. 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதியில் கணவர் பிள்ளைகளுடன் வெளியே சென்ற நிலையில், தனியாக இருந்த நீலம் சர்மா கொலை செய்யப்பட்டார். கணவர் திரும்பி வந்து பார்த்த போது கொலை செய்தவர்கள் வீட்டிலிருந்து எந்தப் பொருட்களையும் திருடவில்லை அதுசந்தேகத்தை அதிகப்படுத்திய.நிலையில் விஜய் சர்மா வீட்டில் அவரது மனைவி நீலம் வளர்த்த கிளி, அவர் இறந்த பின் சாப்பிடாமல் அமைதியாக இருந்ததைக் கவனித்த விஜய் சர்மா ஒருவேளை கிளி கொலையாளியை நேரில் பார்த்திருக்கலாமோ என சந்தேகப்பட்டு .கொலை தொடர்பாக தான் சந்தேகப்படும் சில நபர்களின் பெயர்களை கிளியிடம் ஒவ்வொன்றாக கூறியுள்ளார். தன்து மருமகன் பெயரைக் கூறியபோது கிளி ஆவேசமடைந்து ஆசு, ஆசு எனக் கத்தியதாம் இதுகுறித்து விஜய் சர்மா காவல்துறை விசாரணையில் தெரிவித்துள்ளார்.
அப்போதும் அந்த கிளி ஆசு பெயரை சொல்லும் போது மட்டும் ஆவேசத்துடன் கத்தியதையடுத்து காவல் நிலையத்தில் ஆசுவிடம் விசாரணை மேற்கொண்டனர்.அதில் தன் நண்பர் ரோணியுடன் சேர்ந்து நீலம் சர்மாவைக் கொலை செய்ததை குற்றவாளி ஒப்புக்கொண்டார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முகமது ரஷீப், குற்றம் சாட்டப்பட்ட ஆசு, ரோணிக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூபாய். 72 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்திய சாட்சியச் சட்டம், 1872 ன் கீழ் சாட்சிகளுக்கான வகுமுறை விதிகளாக 167 பிரிவுகள் உள்ளன. செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி 1872 ஆம் வருடம் அமுலுக்கு வந்தது இந்தச் சட்டம். அதன் படி கிளி சாட்சியாக முடியுமா என்பது எழு வினா ?
இருந்தாலும் இந்திய மத நம்பிக்கை படி இறைவன் சிவன் சாட்சி சொன்ன வரலாறு திருவிளையாடல் புராணத்தில் உண்டு அதாவது கண்ணீர் வடியக் கதறிய ரத்னாவளிக்கு .. “ஈசனே...இது என்ன சோதனை..? இப்போது எனக்காக இங்கு சாட்சி சொல்ல வருவது யார்..? சொல் இறைவா..சொல்....?”
ரத்னாவளி பெரும் குரலெடுத்துக் கதறியழ ...அந்த அழுகையை நிறுத்தியது அங்கே கேட்ட ஒரு குரல் :
"நாங்கள் சாட்சி.."
குரல் வந்த திசையில் கூட்டத்தினர் அனைவரும் திரும்பிப் பார்க்க....
ஈசன் அங்கே எழுந்தருளி நின்றாராம்..!
“ ஆம்...இவர்கள் திருமணம் நடந்தது உண்மைதான்.
ரத்னாவளி கல்யாணத்துக்கு சாட்சியாக ,கல்யாணம் நடந்த இடமான திரும்புறம்பயத்திலிருந்த வன்னிமரமும், கிணறும், லிங்கமும் , இன்று முதல் ,இந்த மதுரை ஆலயத்தில், என் சந்நிதிக்கு ஈசான்ய மூலையில் சாட்சியாக இருக்கும்..” என்று சொல்லி மறைந்தாராம் ஈஸ்வரன்...!
. அப்போது பார்த்தவர் அனைவரும் பரவசப்பட்டுப் போனார்களாம்..!
இப்போதும் , மதுரையில் அருள்மிகு சொக்கநாத சுவாமி சன்னதிக்கு வெளிப் பிரகாரத்தில் சிவன் சன்னதி மூலையில்...
வன்னி மரம் , கிணறு, சிவலிங்கம் ஆகிய மூன்றும் இருக்கிறது...!
கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல்
“இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை..”
.'திருவிளையாடல்' படத்தில் வரும் பாடலில்
“சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ - மாமன்
திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?”
பாடலின் இடையில் வரும் வரிகள் இவை ...!
இத்தனை வருடங்களாக இந்த பாடல் வரிகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோமே....
அது என்ன சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை..? என யாரும் கேள்வி கேட்கவில்லை
சிவனின் திருவிளையாடல்களில் அதுவும் ஒன்று.
.காவிரிபூம்பட்டினத்தை சேர்ந்த வணிகன் ஒருவன் ....அவன் பெயர் அரதன குப்தன் ....மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு , மதுரையிலேயே வாழ்ந்தானாம்.
காவிரிபூம்பட்டினத்தில் வசித்து வந்த , அவன் தங்கைக்கும் , தங்கையின் கணவருக்கும்
தங்கள் மகள் ரத்னாவளியையும் அரதன குப்தனுக்கே மணம் முடித்து விட மனதுக்குள் ஆசை.
எதிர்பாராமல் ஒரு நாள் , அரதன குப்தனின் தங்கையும் , அவள் கணவரும் இறந்துவிட்டதாக காவிரிபூம்பட்டினத்திலிருந்து தகவல் வரவே
உடனே புறப்பட்ட அரதன குப்தன், காவிரிபூம்பட்டினம் சென்று தங்கையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு விட்டு , திரும்பும்போது தாய் தகப்பனை இழந்து நின்ற ரத்னாவளியையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு புறப்பட்டான் வரும் வழியில் திரும்புறம்பயம் என்ற இடத்திலே... ஒரு புன்னைவனம் ..
அதில் ஒரு வன்னிமரம் ..அருகில் ஒரு சிவலிங்கம்..
சற்றுத் தள்ளி ஒரு கிணறு...
கட்டுசோறை பிரித்து சாப்பிட்டு விட்டு ..
அங்கேயே தங்கி விட்டார்கள் இருவரும்..!
காலையில் கண் விழித்த ரத்னாவளி பதறிப் போனாள்... கதறி அழுதாள் ...
காரணம்...?
அசைவற்றுக் கிடந்தான் அரதன குப்தன்.
நள்ளிரவில் நல்ல பாம்பு வந்து கடித்திருக்கிறது.!
தற்செயலாக அந்த வழியாக வருகிறார் திருஞானசம்பந்தர் .
நடந்ததை அறிந்து அவர் , ஈசனிடம் முறையிட.
உயிரோடு எழுந்தான் அரதன குப்தன்..
சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் ரத்னாவளியிடம் கேட்டுப் புரிந்து கொண்டாராம் சம்பந்தர்.... அப்புறம் சொன்னாராம் : “ஈசனுக்கு முன்பாகவே இந்தப் பெண்ணுக்கு ஒரு தாலியைக் கட்டி ,
இவளை உன் மனைவியாகவே ஊருக்கு அழைத்துக் கொண்டு போ..”
மறு பேச்சுப் பேசாமல் மணம் செய்து கொண்டான் அரதன குப்தன்..
இந்த கல்யாணத்திற்கு சாட்சிகள் .
அங்கே இருந்த ஒரு வன்னிமரமும், கிணறும் , சிவலிங்கமும்தான் ...!
இருவரும் மதுரை வந்து சேர்ந்தார்கள்.
கணவனோடு இன்னொரு பெண்ணைக் கண்டு கோபம் கொண்ட முதல் மனைவி , கொதித்துப் போனாளாம்... ரத்னாவளி நடந்த விஷயங்களை , உள்ளது உள்ளபடியே சொல்ல... அதை கொஞ்சமும் நம்பவில்லையாம் முதல் மனைவி..!
வழக்கு சபைக்கு வந்தது...
திருமணம் நடந்ததற்கு சாட்சி என்ன என்று எல்லோரும் கேட்டார்கள்...
“மனிதர்கள் யாரும் இல்லை. சிவலிங்கமும், வன்னிமரமும், கிணறும்தான் சாட்சி..” என்று கூறினாள் ரத்னாவளி...
முதல் மனைவி கேலியாக கேட்டாளாம் இப்படி ஒரு கேள்வி : .. “ஓஹோ...அந்த சிவலிங்கம் இங்கே வந்து சாட்சி சொல்லுமா?”
கூடி இருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்களாம்....
கூனிக்குறுகிப் போன ரத்னாவளி , கைகூப்பி அழுதாள் ...தொழுதாள்....!
கண்களில் கண்ணீர் வடிய கதறினாளாம் ரத்னாவளி.... “ஈசனே...இது என்ன சோதனை..? இப்போது எனக்காக இங்கு சாட்சி சொல்ல வருவது யார்..? சொல் இறைவா..சொல்....?”
ரத்னாவளி பெரும் குரல் எடுத்து கதறி அழ ...அந்த அழுகையை நிறுத்தியது அங்கே கேட்ட ஒரு குரல் :
"நாங்கள் சாட்சி.."
குரல் வந்த திசையில் கூட்டத்தினர் அனைவரும் திரும்பிப் பார்க்க....
ஈசன் அங்கே எழுந்தருளி நின்றாராம்..!
“ ஆம்...இவர்கள் திருமணம் நடந்தது உண்மைதான்...
ரத்னாவளி கல்யாணத்துக்கு சாட்சியாக ,கல்யாணம் நடந்த இடமான திரும்புறம்பயத்தில் இருந்த வன்னிமரமும், கிணறும், லிங்கமும் , இன்று முதல் ,இந்த மதுரை கோவிலில், என் சந்நிதிக்கு ஈசான்ய மூலையில் சாட்சியாக இருக்கும்..” என்று சொல்லி மறைந்தாராம் ஈஸ்வரன்...!
பார்த்தவர் அனைவரும் பரவசமானார்களாம்..!
இப்போதும் , மதுரையில் அருள்மிகு சொக்கநாதர் சுவாமி சன்னதிக்கு வெளி பிரகாரத்தில் சிவன் சன்னதி மூலையில்.வன்னி மரம் , கிணறு, சிவலிங்கம் ஆகியவை இருக்கிறது !
கும்பகோணத்திலிருந்து சாட்சி சொல்ல மதுரை வந்த “சாட்சி நாதர்” என்றும் “ஸ்ரீ சாட்சிநாதசுவாமி” என்ற பெயர் கிடைத்தது திரும்புறம்பயம் கோவில் சிவனுக்கு...!
கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தூரத்தில் இந்த திரும்புறம்பயம் ஸ்ரீ சாட்சிநாதசுவாமி கோவில் இருக்கிறது கல்கியின்
“பொன்னியின் செல்வன்” நாவலில் திரும்புறம்பயம் பள்ளிப்படைக்கோவில் பற்றி எழுதிய து உண்டு இருந்தாலும் மன்னர் ஆட்சியில் அது காதை ஆனால் மக்கள் ஆட்சியில் இந்திய சாட்சிகள் சட்டம் கிளியின் சாட்சியை எந்தப் பிரிவின் கீழ் கொண்டு வருகிறார்கள் என்று ஒருவர் கேட்டுள்ளார். அதுசரி கிளி ஜோசியம் சொல்வதை நம்பும் மக்கள் உள்ள நாட்டில் கிளி சாட்சியம் சொல்வதை நம்பித்தான் ஆகவேண்டும்
கருத்துகள்