முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய நாடாளுமன்றத்தின் வரலாற்றில் மூன்றாவது முறையாக. நடக்கும் சபாநாயகர் தேர்தல்

இந்திய நாடாளுமன்றத்தின் வரலாற்றில் மூன்றாவது முறையாக. நடக்கும் சபாநாயகர் தேர்தலில்

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மீண்டும் ஓம் பிர்லாவும், இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் காங்கிரஸ் கட்சியின் கொடிகுன்னில் சுரேஷும் போட்டியிடுகின்றனர். நடந்து முடிந்த 18 வது நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி அமைத்ததன் மூலம் நரேந்திர மோடி 3-வது முறையாகப் பிரதமரானார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் பதவி ஏற்பதற்கும், புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கும் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் கடந்த 24- ஆம் தேதி தொடங்கியதில் முதலில் இரண்டு நாட்களும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

நாடாளுமன்ற மக்களவைக்கு  சபாநாயகரை பொறுத்த வரை, சுதந்திர இந்தியாவில் இதுவரை ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் இணைந்து ஒருமனதாகவே தேர்வு செய்து உள்ளனர் எனக் கூறுவது தவறு.  உண்மை யாதெனில்    நாடாளுமன்ற சபாநாயகர் தேர்தல் மூன்றாவது முறையாக நடக்கிறது .1952.  1976  மற்றும் 2024 . ஆம் ஆண்டுகளில் நடைபெற்றது 

இது முதல் முறை அல்ல . மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஏகமனதாக அனைத்து கட்சி ஆதரவுடன் சபாநாயகர் தேர்வு செய்ய முயன்றனர் மற்றும் கட்சி விரும்பியது.   எனவே எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெறுவதற்காக அவர்களிடம் பேசுவதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அரசின் பிரதிநிதியாக நியமித்த நிலையில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தையை நடத்தி வந்தார். அப்போது துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க வேண்டுமென காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நிபந்தனைகள் விதித்தனர்.

துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்குவது என்ற நாடாளுமன்ற மரபை அரசு பின்பற்றினால் சபாநாயகர் தேர்வு நியமனத்தில் ஆளுங்கட்சி நிறுத்தும் வேட்பாளரை நாங்கள் ஆதரிக்கத் தயார் என்றும் கூறினர். ஆனால் துணை சபாநாயகர் பதவியில் மத்திய அரசு எந்த விதமான பிடியும் கொடுக்காத நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேற்றுக் காலையிலும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசினார். சபாநாயகர் பதவிக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஓம் பிர்லாவை மீண்டும் நிறுத்துவதாகவும் அவரை ஆதரிக்குமாறும் அவர் கேட்டுக்‌கொண்டார். அவருடன் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜே.பி.நட்டா, கிரண் ரிஜிஜு ஆகியோரும் உடனிருந்தனர்.

பின்னர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், தி.மு.க வின். டி.ஆர்.பாலு ஆகியோரை தனது அலுவலகத்துக்கு அழைத்து ராஜ்நாத் சிங் பேசினார். அப்போதும் துணை சபாநாயகர் விவகாரத்தில் எந்த உறுதியையும் ராஜ்நாத் சிங் வழங்கவில்லை. இதனால் ஓம் பிர்லாவை ஆதரிக்கும் கடிதத்தில் கையெழுத்துப் போடாமல் கே.சி.வேணுகோபால் மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோர் ராஜ்நாத் சிங் அலுவலகத்திலிருந்து வெளியேறினர்.

அதைத்தொடர்ந்து சபாநாயகர் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளரை நிறுத்துவதென எதிர்க்கட்சிகள் முடிவு செய்ததன்படி கேரளாவைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரான கொடிக்குன்னில் சுரேஷ் (வயது 66) ஐ வேட்பாளராக அறிவித்தனர். அவரை ஆதரித்து மூன்று வேட்புமனுக்களும்  தாக்கல் செய்யப்பட்டன. ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் ஓம் பிர்லாவுக்கு ஆதரவாக 10 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன, இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அதன் மூலம் நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் தேர்தல் இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. 543 உறுப்பினர் உள்ள மக்களவையில் ஆளும் பா.ஜனதா கட்சி கூட்டணிக்கு 293 உறுப்பினர்கள் உள்ளதால் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் ஓம் பிர்லா வெற்றி பெறுவார் என நம்பப்படுகிறது.

ஓம் பிர்லா வெற்றி பெற்றால், கடந்த 25 ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டு முறை சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டவராவார். இவர் ராஜஸ்தானின் கோட்டா தொகுதியிலிருந்து 3-வது முறையாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்டவராவார்.

 இவரை எதிர்த்துப் போட்டியிடும் கொடிக்குன்னில் சுரேஷ் 8 முறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராவார். பட்டியல் பிரிவைச் சேர்ந்தவர் கேரளாவின் மாவேலிக்கரை தனித்தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் திருவனந்தபுரம் கொடிக்குன்னில் பகுதியில் 1962-ஆம் ஆண்டு பிறந்தவர். கடந்த 1989-ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சபாநாயகர் பதவிக்கு இந்தியா கூட்டணி வேட்பாளர் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தாலும், பாரதிய ஜனதா கட்சியின் முடிவுக்காக காத்திருப்பதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க பாரதிய ஜனதா கட்சி முன்வந்தால், ஆளுங்கட்சியின் வேட்பாளர் ஓம் பிர்லாவை ஆதரிப்போம் என்று கட்சியின் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் கூறினார்.

ஒருவேளை சபாநாயகர் பதவிக்கு இன்று தேர்தல் நடந்தால் அது சுதந்திர இந்திய வரலாற்றில் மூன்ட முறையாக இருக்கும். ஏனெனில் நாடாளுமன்ற சபாநாயகர் தேர்தல் மூன்றாவது முறையாக நடக்கிறது .1952.  1976 & 2024 . ஆம் ஆண்டுகளைத் தவிர்த்து சபாநாயகரை ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஒருமனதாகவே தேர்ந்தெடுத்துள்ளனர்.இந்த நிலையில் நாடாளுமன்ற சபாநாயகர் தேர்தலில் வேட்பாளராக சுரேஷ் முன்னிறுத்தப்பட்டது தொடர்பாக, கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் கலந்து ஆலோசிக்கவில்லையென திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் அபிஷேக் பானர்ஜி தெரிவித்தார். எந்த ஒரு ஆலோசனையும் இன்றி சுரேஷை வேட்பாளராக தேர்வு செய்துள்ளனரென்றும் இது துரதிர்ஷ்டவசமான நிகழ்வென்றும் அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு