பீடி / சுண்ணாம்புக்கல் & டாலமைட் சுரங்கங்கள்/ திரைப்படத்துறை தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை
மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் சென்னை மண்டல தொழிலாளர் நல அமைப்பு, பீடி / சுண்ணாம்புக்கல் & டாலமைட் சுரங்கங்கள்/ திரைப்படத்துறை தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் தொழில்நுட்பப் பட்டப்படிப்பு வரை பயில்வோருக்கு, அவர்கள் பயிலும் வகுப்புகளுக்கேற்ப, ரூ. 1000 முதல் ரூ. 25 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.
இந்தக் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் அனுப்புவதற்கான புதிய நடைமுறைகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. அதன்படி, 2024-25 கல்வி ஆண்டு முதல் ஒருமுறை பதிவு செய்யும் முறை (OTR) அமலுக்கு வந்துள்ளது. ஒருமுறை பதிவுக்கு, மாணவர்களின் ஆதார் கட்டாயமாக்கப்பட்டிருப்பதுடன், அவர்களுக்கான உதவித்தொகையும் ஆதார் அடிப்படையிலான பணப்பட்டுவாடா முறை (APB) வாயிலாகவே வழங்கப்படும். வழக்கமான வங்கிக்கணக்கு வாயிலாக வழங்கப்படமாட்டாது.
எனவே, விருப்பமுள்ள மாணவர்கள் உதவித்தொகையைப் பெற்று பலனடையுமாறு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல தொழிலாளர் நல துணை நலவாழ்வு ஆணையர் கே ஏ செபஸ்டியான் கேட்டுக்கொண்டுள்ளார்.
விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்பட்டால், கீழ்காணும் தேசிய கல்வி உதவித்தொகை இணைய தளம்
1) For the Student: https://scholarships.gov.in/studentFAQs
2) For the institute: https://scholarships.gov.in/public/FAQ/INSTITUTE_FAQ_21122023_UPDATED.pdf
3) For SNO/DNO: https://scholarships.gov.in/public/FAQ/DNO_SNO_FAQs_21122023_updated.pdf
கருத்துகள்