மூன்று குற்றவியல் நடைமுறைச் சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டுமென உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்
அந்தக் கடிதத்தில், மத்திய அரசு நிறைவேற்றிய கடிதங்கள் குறித்து போதிய அவகாசம் தரப்படவில்லை என்று முதல்வர் முக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார் .பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்சய சட்டம் ஆகிய மூன்று குற்றவியல் சட்டங்களும் கடந்த ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் சாட்சிய சட்டங்களுக்கு மாற்றாக இந்த புதிய சட்டங்களை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு இந்த மூன்று சட்டங்களிலும் பல புதுமையான யோசனைகள் உள்ளதாக தெரிவித்துள்ள மத்திய அரசு வரும் ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் இந்தச் சட்டம் அமல்படுத்தப்படுமெனக் கூறியது.
3 குற்றவியல் நடைமுறை சட்டங்களான
பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்சய சட்டம் ஆகிய மூன்று குற்றவியல் சட்டங்களும் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்ட நிலையில், புதிய குற்றவியல் சட்டங்களை தமிழ்நாட்டில் அமல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:- மத்திய அரசு நிறைவேற்றிய முன்று சட்டங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்க அவகாசம் தரப்படவில்லை. குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதில் மாநிலங்கள் சிக்கல்களை எதிர்கொள்கின்றன. மூன்று குற்றவியல் சட்டங்களில் சில அடிப்படையான பிழைகள், முரண்பாடுகள் உள்ளன. அனைத்துத் துறைகளுடனும் ஆலோசித்து அமல்படுத்த போதிய கால அவகாசம் தேவை. சட்டங்கள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் பெயரிடபட்டுள்ளன. சட்டத்தின் பெயர் ஆங்கிலத்தில் இருப்பது அவசியம். சமஸ்கிருதத்தில் சட்டத்தின் பெயர்கள் இருப்பது அரசியல் அமைப்புச் சட்டம் விதி 348 ஐ மீறுவதாகும். சட்டங்களை நடைமுறைப்படுத்த கல்வி நிறுவனங்களுடன் விவாதம் செய்து சட்டப் பாடங்கள் மாற்றியமைக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்