முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாநிலங்களவையின் 264-வது அமர்வின் நிறைவில் அவைத் தலைவர் ஆற்றிய உரை

மாநிலங்களவையின் 264-வது அமர்வின் நிறைவில் அவைத் தலைவர் ஆற்றிய உரை

மாநிலங்களவையின் 264-வது அமர்வின் நிறைவுக் கட்டத்திற்கு நாம் வந்துள்ளோம். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் உரையுடன் இந்த அமர்வு தொடங்கியது. இது அரசின் செயல்திட்டங்களை எடுத்துரைக்கும் ஒரு முக்கியமான பாரம்பரியமாகும்.

அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராக பதவியேற்ற மாண்புமிகு பிரதமர் தமது அமைச்சரவையை அவையில் அறிமுகப்படுத்தியதை நாம் பார்த்தோம்.

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் 76 உறுப்பினர்கள் 21 மணி நேரத்திற்கும் மேலாக ஆர்வத்துடன் பங்கேற்றனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 19 உறுப்பினர்களின் முதல் பேச்சும் சபையில் இடம்பெற்றது.

இந்த விவாதத்தில் பங்கேற்று அதற்குப் பதிலளித்து பிரதமர்  உற்சாகமாக உரையாற்றினார்.

அவை ஒத்திவைக்கப்பட்டதன் காரணமாக 43 நிமிடங்களை இழந்த போதிலும், மதிய உணவு இடைவேளையின் போது தொடர்ந்து விவாதம் செய்ததன் மூலமும், திட்டமிடப்பட்ட நேரத்திற்கு அப்பால் அவை நடவடிக்கைகள் நடைபெற்றதன் மூலமும் நேரம் ஈடுசெய்யப்பட்டது. நீட்டிக்கப்பட்ட அமர்வு காரணமாக, மொத்த அலுவல் நேரம் இறுதியாக திட்டமிடப்பட்ட நேரத்திற்கு மேல் மூன்று மணி நேரம் நீட்டிக்கப்பட்டது. இதனால் அவையின் செயல்திறன் 100 சதவீதத்துக்கும் அதிகமாகவே இருந்தது.

ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி தரப்பில் இருந்தும் உறுப்பினர்கள் தீவிரமாக விவாதங்களில் பங்கேற்ற அதே வேளையில், அவை நடவடிக்கைகளில் ஏற்பட்ட இடையூறுகள் குறித்து சில கடுமையான கருத்துக்களை நான் கூற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அனுபவம் வாய்ந்த உறுப்பினர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வது மிகவும் வருத்தமளிக்கிறது. இடையூறுகளை ஏற்படுத்துவது திட்டமிடப்பட்ட அவை நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருப்பது மட்டுமல்லாமல், இந்த மதிப்புமிக்க அவையின் கௌரவத்தையும் குறைக்கிறது என்பதை நான் மீண்டும் எடுத்துரைக்க விரும்புகிறேன்.


எதிர்க்கட்சித் தலைவர் கூட சபையின் மையப்பகுதிக்கு வந்த்து நாடாளுமன்ற நடைமுறைக்கும் ஒழுங்கு முறைக்கும் குந்தகம் ஏற்படுத்தும்  விஷயமாகும்.

இந்த அவையின் உறுப்பினர்கள் தங்கள் நடவடிக்கைகளை முன்மாதிரியாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். இதன் மூலம் இது விவாதம், ஆலோசனை, உரையாடலுக்கான இடமாக இது மாறும்.

இன்று எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தது மிகவும் வேதனையாக இருந்தது. இது ஒரு வரலாற்று நிகழ்வு. அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி நடைபெற்று வருகிறது.

எதிர்க்கட்சியினர் அரசியலமைப்பு செயல்பாடுகளில்  இருந்து விலகிச் சென்றுள்ளனர். இது ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரான ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை அமைத்துள்ளது.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எனக்கு பலம் அளித்து, அவையின் நடவடிக்கைகளில் தமது புத்திசாலித்தனமான ஆலோசனையால் என்னை வழிநடத்திய  அவையின் துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவையின் நடவடிக்கைகளை நடத்த எனக்கு உதவியதற்காக துணைத் தலைவர்கள் குழுவில் உள்ள உறுப்பினர்களும் நன்றி தெரிவிக்கிறேன். அவர்களில் 50 சதவீதம் பேர் இந்த அவையின் பெண் உறுப்பினர்கள் ஆவார்கள்.

அவை முன்னர், எதிர்க்கட்சித் தலைவர், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் வழங்கிய ஒத்துழைப்புக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அமர்வின் போது நடவடிக்கைகளை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்வதற்காக செயலாளர் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் ஆற்றிய அயராத பணிகளை நான் பாராட்டுகிறேன்.

நன்றி. எனத் தெரிவித்தார். நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசும் போது, பாரதிய ஜனதா கட்சியையும் பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாகவே விமர்சித்தார். நீட் தேர்வு முதல் மணிப்பூர் விவகாரம் வரை விமர்சித்த ராகுல்காந்தி பாரதிய ஜனதா கட்சியினரை கடும் கோபத்தில் ஆழ்த்தியது. ராகுல் காந்தி பேசினார். "இங்கு ஒரு மதம் மட்டுமே தைரியத்தை கூறவில்லை. அனைத்து மதங்களும் தைரியத்தைப் பற்றி பேசுகின்றன. இஸ்லாம், சீக்கியம் என அனைத்து மதங்களும் தைரியத்தை வலியுறுத்துகின்றன. உண்மையான ஹிந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை. பாஜகவினர் சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்களாக இருக்கிறார்கள். பிரதமர் மோடியும், பாஜகவும் மட்டுமே ஒட்டுமொத்த இந்துக்களில்லை. அயோத்தி பற்றி பேசத் தொடங்கியதும் மைக் அணைக்கப்பட்டது ஏன்? ராமர் பிறந்த அயோத்தியிலேயே பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டார்கள்" என்று ராகுல் காந்தி பேசினார். ராகுல் காந்தி பேசும் போதே இடைமறித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "ஹிந்துக்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது" என்று காட்டமாகக் கூறினார். இதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ராகுல்காந்திக்கு எழுந்து நின்று கடுமையான பதிலடி கொடுத்தார்.

அமித் ஷா பேசுகையில் "ஹிந்து என்று சொல்லிக்கொள்பவர்கள் வன்முறையைப் பேசுகிறார்கள், வன்முறை செய்கிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுகிறார். கோடிக்கணக்கான மக்கள் தங்களை ஹிந்துக்கள் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்வது அவருக்குத் தெரியாது போல. வன்முறையை எந்த மதத்துடனும் இணைப்பது தவறு. ராகுல் காந்தி இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று வலியுறுத்தினார் எந்த மதத்துடனும் இணைப்பது தவறு. ராகுல் காந்தி இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றும் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசும் போது, பிரதமர் நரேந்திர மோடி முதல் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பல்வேறு அமைச்சர்கள் இடைமறித்தனர். மொத்தம் 50 முறைக்கு மேல் ராகுல் காந்தியின் பேச்சு இடைமறித்துள்ளனர். அதனை இப்போது பார்ப்போம். பிரதமர் மோடி இரண்டு முறையும் , உள்துறை அமைச்சர் அமித்ஷா நான்கு முறையும், அமைச்சர் ராஜ்நாத் சிங் நான்கு முறையும் இடைமறித்தாக சமூக ஊடகங்களில் காங்கிரஸ் கட்சியினர் விமர்சிக்கிறார்கள்

இதேபோல் மத்திய அமைச்சர்கள் கிரண் ராஜூ ஆறு முறையும், சிவராஜ் சிங் சௌகான் மூன்று முறையும், அனுராக் தாகூர் ஆறு முறையும், அஸ்விணி வைஸ்ணவ் நான்கு முறையும். நிக்ஷீகாந்த் துபே பத்துக்கும் அதிகமான முறையும், பூபேந்தர் யாதவ் ஐந்து முறையும் பேசும் போது குறுக்கிட்டதாகக் கூறுகின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...