முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரதமர் தலைமையில் நித்தி ஆயோக்கின் 9-வது நிர்வாகக் குழுக் கூட்டம்

நித்தி ஆயோக்கின் 9-வது நிர்வாகக் குழுக் கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்



மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகள் வளர்ந்த பாரதத்தின் தொலைநோக்கு பார்வையை நனவாக்க வழிவகுக்கும்: பிரதமர்

வளர்ந்த பாரதம் என்ற தொலைநோக்கு பார்வையை வளர்ந்த மாநிலங்கள் மூலம் நனவாக்க முடியும் என்று பிரதமர் கூறினார். வளர்ந்த பாரதம் @ 2047 ஐ நிறைவேற்ற ஒவ்வொரு மாநிலமும், மாவட்டமும் தொலைநோக்கை உருவாக்க வேண்டும்



முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலீட்டுக்கு உகந்த சாசனத்தை தயாரிக்குமாறு நிதி ஆயோக்கிற்கு பிரதமர் அறிவுறுத்தினார்

நீர் ஆதாரங்களை திறம்பட பயன்படுத்த மாநில அளவில் நதி தொகுப்புகளை உருவாக்க பிரதமர் அறிவுறுத்தினார்

எதிர்காலத்தில் மக்கள் தொகை மூப்படைதல் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண மக்கள்தொகை மேலாண்மைத் திட்டங்களை தொடங்குமாறு மாநிலங்களை பிரதமர் கேட்டுக்கொண்டார்

வேலைவாய்ப்புக்கு தயார் செய்யும் வகையில் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிப்பதை பிரதமர் வலியுறுத்தினார்

வளர்ந்த பாரதத்தின் முன்னுரிமையாக வறுமை இல்லாத நிலையை நாம் இலக்காகக் கொள்ள வேண்டும்: பிரதமர்

இந்தக் கூட்டத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஆலோசனைகளை ஆய்வு செய்யுமாறு நித்தி ஆயோக்கிற்கு பிரதமர் அறிவுரை 


நித்தி ஆயோக்கின் 9-வது நிர்வாகக் குழுக் கூட்டம் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதில் 20 மாநிலங்கள் மற்றும் 6 யூனியன் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலமைச்சர்கள் / துணைநிலை ஆளுநர்கள் கலந்து கொண்டனர்.

வளர்ந்த பாரதம் @2047 என்ற தொலைநோக்கு பார்வையை அடைய அனைத்து மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் ஒத்துழைப்பு மற்றும் கூட்டு முயற்சி குறித்து பிரதமர் வலியுறுத்தினார்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா நிலையான வளர்ச்சியை அடைந்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். 2014-ம் ஆண்டு உலகின் 10-வது இடத்தில் இருந்த இந்தியப் பொருளாதாரம், 2024-ம் ஆண்டில் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. தற்போது உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதே அரசு மற்றும் அனைத்து குடிமக்களின் கூட்டு நோக்கம் என்று அவர் மேலும் கூறினார்.

சமூக மற்றும் பொருளாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தியதன் மூலம் கடந்த பத்து ஆண்டுகளில் நமது நாடு ஏற்கனவே நிறைய முன்னேற்றங்களை அடைந்துள்ளது என்று பிரதமர் கூறினார். இறக்குமதியை பிரதானமாகக் கொண்ட நாடாக இருந்த இந்தியா, தற்போது உலகிற்கு பல பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. பாதுகாப்பு, விண்வெளி, ஸ்டார்ட் அப், விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் நாடு உலக அரங்கில் தனது முத்திரையை பதித்துள்ளது. 140 கோடி குடிமக்களின் நம்பிக்கை மற்றும் உற்சாகத்தை அவர் பாராட்டினார், இதுவே நமது நாட்டின் முன்னேற்றத்திற்கான உந்து சக்தியாக உள்ளது என்றார் அவர்.

இந்த தசாப்தம் மாற்றத்தின் தசாப்தம் என்றும், பல்வேறு துறைகளில் ஏராளமான வாய்ப்புகளை கொண்டு வந்துள்ளது என்றும் பிரதமர் கூறினார். இந்த வாய்ப்புகளை மாநிலங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்றும், கொள்கை உருவாக்கம் மற்றும் அமலாக்கத்தில் புதுமையான அணுகுமுறைகள் மூலம் வளர்ச்சிக்கு உகந்த நிர்வாகத் திட்டங்களைத் தொடங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

வளர்ந்த பாரதம் என்ற தொலைநோக்கு பார்வை வளர்ந்த மாநிலங்கள் மூலம் நனவாகும் என்றும், வளர்ந்த பாரதம் இயக்கத்தின் லட்சியம் அடிமட்ட அளவில், அதாவது ஒவ்வொரு மாவட்டம், வட்டாரம் மற்றும் கிராமம் சென்றடைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்காக, ஒவ்வொரு மாநிலமும் மாவட்டமும் வளர்ந்த பாரதம் @ 2047 ஐ உணர 2047 க்கான ஒரு பார்வையை உருவாக்க வேண்டும்.

நித்தி ஆயோக்கினால் உருவாக்கப்பட்ட முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டத்தைப் பாராட்டிய பிரதமர், அளவிடக்கூடிய அளவீடுகளை தொடர்ச்சியாகவும், இணையதளம் மூலமாகவும் கண்காணித்ததே இந்த திட்டத்தின் வெற்றிக்கு முக்கியமானதாக இருந்தது என்று குறிப்பிட்டார். பல்வேறு அரசுத் திட்டங்களில் மாவட்டங்களின் செயல்திறனை மேம்படுத்த மாவட்டங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டிக்கு இது வழிவகுத்தது என்றார்.

திறன் வாய்ந்த மனித வளத்திற்கான இந்தியாவை உலகம் சாதகமாக நோக்குவதால், வேலைவாய்ப்புக்கு தயார் செய்யும் வகையில் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிப்பதை பிரதமர் வலியுறுத்தினார்.

முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை உருவாக்குமாறு மாநிலங்களை அவர் கேட்டுக் கொண்டார். முதலீடுகளை ஈர்ப்பதற்கான கொள்கைகள், திட்டங்கள், செயல்முறைகள் அடங்கிய முதலீட்டுக்கு உகந்த வழிமுறைகளை உருவாக்குமாறு நித்தி ஆயோக்கிற்கு அவர் அறிவுறுத்தினார். முதலீடுகளை ஈர்ப்பதில் மாநிலங்களுக்கிடையே ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிப்பதற்காக இந்த அளவீடுகளை மாநிலங்கள் எட்டியுள்ளனவா என்பதைக் கண்காணிக்கலாம் என்று அவர் யோசனை தெரிவித்தார். முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஊக்கத்தொகைகள் அளிப்பதைவிட சட்டம் ஒழுங்கு, நல்லாட்சி, உள்கட்டமைப்பு ஆகியவையும் முக்கியம் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

நீர் ஆதாரங்களை திறம்பட பயன்படுத்த மாநில அளவில் ஆற்றுப்படுகை கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான முன்னுரிமை செயல்திட்டமாக வறுமை இல்லாத நிலையை அடைவதை நாம் முக்கிய இலக்காகக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். வறுமையை திட்ட அடிப்படையில் ஒழிக்காமல், தனிநபர் அடிப்படையில் ஒழிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். வறுமையை அடிமட்டத்தில் இருந்து அகற்றுவது நமது நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

வேளாண் துறையில் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், வேளாண்மையைப் பன்முகப்படுத்தவும், விவசாயிகளுக்கு சந்தைத் தொடர்புகளை ஏற்படுத்தவும் அனைத்து மாநிலங்களும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். மண் வளத்தை மேம்படுத்தவும், விவசாயிகளுக்கு சிறந்த வருமானத்தை உறுதி செய்யவும், வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு உலகளாவிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தவும், இயற்கை விவசாய நடைமுறைகளை பரவலாகப் பின்பற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

எதிர்காலத்தில்  முதுமையடைந்த மக்கள் தொகை தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண மக்கள்தொகை மேலாண்மைத் திட்டங்களைத் தொடங்குமாறு மாநிலங்களைப் பிரதமர் அறிவுறுத்தினார்.

அனைத்து நிலைகளிலும் உள்ள அரசு அதிகாரிகளின் திறன் மேம்பாட்டில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதமர், அதற்காக திறன் மேம்பாட்டு ஆணையத்துடன் ஒத்துழைத்து செயல்படுமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தினார்.

2047-ஆம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை எட்ட முதலமைச்சர்கள், துணைநிலை ஆளுநர்களுக்குப் பல்வேறு பரிந்துரைகளை அவர் வழங்கினர். மேலும் மாநிலங்களில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. விவசாயம், கல்வி, திறன் மேம்பாடு, தொழில்முனைவோர், குடிநீர்,  ஆளுகை, டிஜிட்டல்மயமாக்கல், பெண்களுக்கு அதிகாரமளித்தல், இணையப் பாதுகாப்பு போன்ற துறைகளில் சில முக்கிய பரிந்துரைகளும் சிறந்த நடைமுறைகளும் முன்னிலைப்படுத்தப்பட்டன. 2047-ம் ஆண்டிற்கான மாநில தொலைநோக்குத் திட்டத்தை உருவாக்குவதற்கான தங்கள் முயற்சிகளை பல மாநிலங்களும் பகிர்ந்து கொண்டன.

இந்தக் கூட்டத்தின்போது மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தெரிவித்த ஆலோசனைகளை ஆய்வு செய்யுமாறு நித்தி ஆயோக்கிற்குப் பிரதமர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் பங்கேற்றுத் தங்கள் கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்ட அனைத்து முதலமைச்சர்களுக்கும் துணைநிலை ஆளுநர்களுக்கும் பிரதமர் தமது நன்றியைத் தெரிவித்தார். கூட்டுறவு கூட்டாட்சியின் வலிமையின் மூலம் 2047ஆம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை எட்டும் பாதையில் இந்தியா முன்னேறி வருகிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். நித்தி ஆயோக் என்பது 

முன்னாள்  திட்டக் குழு தான் இன்று நித்தி ஆயோக்  எனப்படுகிற

சூப்பர் கேபினட் கூட்டம் நேற்று முன்தினம் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பின்னர் வெளியேறியதோடல்லாமல் தனது மைக்கை நிறுத்தி விட்டார்கள் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.  ஆனால் அவரோடு  வந்த மேற்குவங்காள உயரதிகாரிகள் கூட்டம் முடியும் வரை அங்கேயே இருந்தனர்.


அதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது :

"மம்தா பானர்ஜி மாலை தான் பேசுவதற்கான அனுமதி தரப்பட்டிருந்தது. ஆனால் அவர் கொல்கத்தாவிற்கு செல்ல வேண்டி இருப்பதால் தன்னை முன்பே அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டதால் அனுமதி வழங்கப்பட்டது.

அவ்வாறு உரிய நேரம் வழங்கப்பட்டு அவர் பேசியதெல்லாம் மானிட்டர் திரையில் ஒளிபரப்பப்பட்டு அவருக்கு கொடுத்த நேரம் வரை அவர் பேசியுள்ளார்  என்பதற்கெல்லாம் கூட பதிவுகள் உள்ளன. இப்படி எல்லாம் இருக்கையில் தன்னைப் பேசவிடவில்லை என அவர் மனப்போக்கில் குற்றம் சாட்டுகிறார்.

இந்த நித்தி ஆயோக் எனும் சூப்பர் கேபினட் மத்திய திட்டக்குழு என்பது அரசியல் சாசனத்தில் அதிகாரப்பூர்வமாக சொல்லப்படவில்லை. நிதி ஆணையத்தினுடைய அதிகாரங்கள் மட்டும் தான் அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ளன.

ஆனால் அவை தொடர்ந்து நாட்டின் அவ்வப்போதைக்கான பொருளாதார மாற்றங்களுக்கேற்ப நடந்து கொண்டிருக்கிறது. அவற்றில் முதல் கூட்டத்தில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ளவுமில்லை. ஏன் கலந்து கொண்டு பேச வேண்டியது தானே? எதற்கு வெளியேற்றம் ஆங்கிலத்திலும்  வங்கத்திலும் பேசிக் கூட சிறப்புப் பொருளாதாரங்கள்  பற்றிய தன்னுடைய நீண்ட அனுபவங்களைச் சொல்ல வேண்டியது தானே! இப்படித்தான் காங்கிரஸ் காலத்திய திட்டக்குழு (planing commission)க் கூட்டத்திலிருந்து ஒரு முறை காலஞ்சென்ற முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா தன்னைப் பேச விடவில்லை என 2012 ஆம் ஆண்டில் கூறி வெளியேறினார்.

அதில் முக்கியமான விஷயம் இன்றைய மாநில முதலமைச்சர்கள் பலருக்கு பொருளாதாரம் பற்றிய கூர்ந்த அறிவோ அல்லது தெளிவோ இருப்பதில்லை! என்பதே உண்மை.

இனத்தையோ ஜாதியோ எதையோ  ஓட்டுக்குப் பணம் எனப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்து விடுகிறார்கள். ஆனால் பன்னாட்டு உள்நாட்டு பொருளாதாரங்களில் நுட்பமான அறிவு அவர்களுக்கு போதவில்லை என்பதைத் தான் இது காட்டுகிறது.

இன்றைய தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினும் கலந்து கொள்ளவில்லை. அவர் ஏற்கனவே கடந்த இரண்டு நித்தி ஆயோக் கூட்டங்களில் கலந்து கொள்ள வில்லை. பெருந் தேசம் மற்றும் மாநில தேசம் பற்றி எல்லாம் பேசுகிறவர்கள் சர்வ தேச ஒருங்கிணைந்த பொருளாதார மண்டலங்கள் பற்றிய அறிவை பெறத் தவறி விடுகிறார்கள். என்பதே எதார்த்த நிலை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...