முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சஞ்சய் கிஷோர் எழுதிய "எம் வெங்கையா நாயுடுவின் வாழ்க்கை மற்றும் பயணம்" என்ற நூல் உள்ளிட்ட தொகுப்பு பிரதமர் வெளியிட்டு உரை

 முன்னாள் குடியரசுத் துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடுவின் வாழ்க்கைப் பயணம் குறித்த மூன்று நூல்களைப் பிரதமர் வெளியிட்டார்

"நாட்டின் முன்னேற்றத்திற்கான திரு எம் வெங்கையா நாயுடுவின் தொலைநோக்குப் பார்வையும் ஆர்வமும் போற்றப்படுகிறது"

"அவரது இந்த 75 ஆண்டுகள் வாழ்க்கைப் பயணம் அசாதாரணமான மற்றும் அற்புதமான நிகழ்வுகளை உள்ளடக்கியது"

"வெங்கையா நாயுடுவின் வாழ்க்கை, சிறந்த சிந்தனைகள், தொலைநோக்குப் பார்வை மற்றும் ஆளுமை ஆகியவற்றின் மிகச் சிறந்த கலவையாகும்"


"வெங்கையா நாயுடுவின் அறிவாற்றல், விரைவான செயல்திறன் ஆகியவற்றுக்கு யாராலும் ஈடுகொடுக்க முடியாது"

"வெங்கையா நாயுடு கிராமங்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு சேவை செய்ய விரும்பினார்"


"வெங்கையா நாயுடுவின் வாழ்க்கைப் பயணம் இளைய தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கும் ஆதாரமாக உள்ளது"

முன்னாள் குடியரசுத் துணைத்தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடுவின் வாழ்க்கைப் பயணம் குறித்த மூன்று புத்தகங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி அவரது 75-வது பிறந்தநாளை முன்னிட்டு காணொலிக் காட்சி மூலம் இன்று (30-06-2024) வெளியிட்டார்.


 (i) தி இந்து நாளிதழின் ஹைதராபாத் முன்னாள் ஆசிரியர் திரு எஸ் நாகேஷ் குமார் எழுதிய "வெங்கையா நாயுடு – சேவையில் வாழ்க்கை"

(ii) "இந்தியாவின் 13-வது குடியரசுத் துணைத்தலைவர் எம் வெங்கையா நாயுடுவைக் கொண்டாடுதல்" என்ற தலைப்பில் குடியரசுத் துணைத்தலைவரின் முன்னாள் செயலாளர் டாக்டர் ஐ.வி.சுப்பாராவ் தொகுத்த புகைப்படத் தொகுப்பு நூல்

 (iii) திரு சஞ்சய் கிஷோர் எழுதிய "எம் வெங்கையா நாயுடுவின் வாழ்க்கை மற்றும் பயணம்" என்ற தெலுங்கு சுயசரிதை ஆகிய 2 நூல்களைப் பிரதமர் வெளியிட்டார்.


நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், திரு எம். வெங்கையா நாயுடு நாளை ஜூலை 1-ஆம் தேதியன்று 75 ஆண்டுகளை நிறைவு செய்வதைக் குறிப்பிட்டார். இந்த 75 ஆண்டுகள் அசாதாரணமானவை என்றும் திரு. எம். வெங்கையா நாயுடுவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட புத்தகங்களை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் பிரதமர் தெரிவித்தார். இந்த புத்தகங்கள் மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் ஆதாரமாக அமையும் என்றும், தேசத்திற்கு சேவை செய்வதற்கான சரியான பாதையை இது காட்டும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


முன்னாள் குடியரசுத் துணைத்தலைவருடன் தமக்கு இருந்த நீண்டகால உறவை நினைவுகூர்ந்த பிரதமர், திரு வெங்கையா நாயுடுவுடன் நீண்ட காலம் பணியாற்றும் வாய்ப்பு தனக்குக் கிடைத்ததாகக் கூறினார். பாரதிய ஜனதா கட்சியின் (பிஜேபி) தேசியத் தலைவராக திரு வெங்கையா நாயுடு இருந்த காலத்தில் இந்த நட்பு தொடங்கியது என்று அவர் கூறினார். அதைத் தொடர்ந்து அமைச்சரவையில் அவர் வகித்த பொறுப்புகள், நாட்டின் குடியரசுத் துணைத்தலைவராக அவரது பதவிக்காலம், மாநிலங்களவைத் தலைவராக அவர் பதவி வகித்தது போன்றவற்றையும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.  ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை வகித்துள்ளதாகவும் மிகப் பெரிய அனுபவத்தை அவர் கொண்டிருப்பதாகவும் பிரதமர் கூறினார். திரு வெங்கையா நாயுடுவிடம் இருந்து தாம் நிறைய கற்றுக் கொண்டிருப்பதாகப் பிரதமர் மேலும் கூறினார்.


திரு வெங்கையா நாயுடுவின் வாழ்க்கை, சிறந்த சிந்தனைகள், தொலைநோக்குப் பார்வை மற்றும் ஆளுமை ஆகியவற்றின் சிறந்த கலவை என்று திரு நரேந்திர மோடி தெரிவித்தார். ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் பிஜேபி-யின் தற்போதைய நிலை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், பல ஆண்டுகளுக்கு முன்பு வலுவான அடித்தளம் இல்லாமல் இருந்தது என்று கூறினார். திரு வெங்கையா நாயுடு "தேசமே முதன்மையானது" என்ற சித்தாந்தத்துடன் ஏபிவிபி அமைப்பில் இணைந்து செயல்பட்டதாகவும்  அவர் கூறினார். திரு வெங்கையா நாயுடு அவசரநிலைக் காலத்தில் சுமார் 17 மாதங்கள் சிறையில் இருந்ததைக் குறிப்பிட்ட பிரதமர், 50 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் அமல்படுத்தப்பட்ட அவசர நிலையை எதிர்த்து கடுமையாகப் போராடியதற்காக அவரைப் பாராட்டினார். அவசர நிலையின் போது சிறப்பாகச் செயல்பட்ட துணிச்சலான மனிதர் திரு வெங்கையா நாயுடு என்றும் திரு நரேந்திர கூறினார்.

அதிகாரம் என்பது வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்துவது இல்லை என்றும் அது, சேவையின் மூலம் திட்டங்களை நிறைவேற்றும் சாதனமாக இருக்கிறது என்றும் பிரதமர் கூறினார்.  அடல் பிகாரி வாஜ்பாய் அரசில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றபோது திரு வெங்கையா நாயுடு தன்னை நிரூபித்தார் என்றும், அவர் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக மிகச் சிறப்பாகச் செயல்பட்டார் என்றும் பிரதமர் கூறினார். வெங்கையா நாயுடு கிராமங்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு சேவை செய்ய விரும்பினார் என்று திரு நரேந்திர மோடி தெரிவித்தார். தமது அமைச்சரவையில் மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக திரு வெங்கையா நாயுடு பணியாற்றியதைக் குறிப்பிட்ட பிரதமர், நவீன இந்திய நகரங்கள் குறித்த அவரது உறுதிப்பாட்டையும் தொலைநோக்குப் பார்வையையும் பாராட்டினார். தூய்மை இந்தியா இயக்கம், பொலிவுறு நகரங்கள் இயக்கம் மற்றும் திரு வெங்கையா நாயுடு தொடங்கிய அம்ருத் திட்டம் ஆகியவற்றைப் பிரதமர் குறிப்பிட்டார்.

முன்னாள் குடியரசுத் துணைத் தலைவரின் மென்மையான குணம், சொற்பொழிவுத்திறன் மற்றும் புத்திசாலித்தனத்தைப் பாராட்டிய பிரதமர், வெங்கையா நாயுடுவின் அறிவுத்திறன், இயல்பான தன்மை மற்றும் விரைவான செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு யாராலும் ஈடுகொடுக்க முடியாது என்று தெரிவித்தார். அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் கூட்டணி அரசு அமைக்கப்பட்டபோது வெங்கையா நாயுடுவின் செயல்பாடுகளைத் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார், இது ஒரு கையில் கட்சியின் கொடியையும் மறு கையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல் திட்டத்தையும் கொண்டு அவர் செயல்பட்டதாகப் பிரதமர் தெரிவித்தார். திரு வெங்கையா நாயுடுவின் வார்த்தைகளில் ஆழம், தீவிரம், தொலைநோக்கு, துடிப்பு, துள்ளல் மற்றும் விவேகம் இருப்பதாகவும் அவரது சிந்தனைகளால் தான் ஆச்சரியம் அடைந்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

திரு வெங்கையா நாயுடு மாநிலங்களவைத் தலைவராக இருந்தபோது உருவாக்கிய நேர்மறையான சூழலைப் பாராட்டிய பிரதமர், அவரது பதவிக் காலத்தில் அவர் எடுத்த பல்வேறு முக்கிய முடிவுகளையும் எடுத்துரைத்தார். மக்களவையில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு, மாநிலங்களவையில் 370-வது பிரிவை ரத்து செய்வதற்கான மசோதா அறிமுகப்படுத்தப்பட்டதை நினைவு கூர்ந்த பிரதமர், அவையின் கண்ணியத்தை பராமரித்து இதுபோன்ற உணர்வுப்பூர்வமான மசோதாக்களை நிறைவேற்றியதில் திரு வெங்கையா நாயுடுவின் அனுபவம் மிக்க செயல் திறனுக்குப் பாராட்டுத் தெரிவித்தார். திரு வெங்கையா நாயுடு நீண்ட ஆயுளுக்கு, சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வாழ்த்துவதாகப் பிரதமர் கூறினார்.

வெங்கையா நாயுடுவின் உணர்வுபூர்வமான தன்மையை எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, அவரது முடிவெடுக்கும் திறனைப் பாராட்டினார். எளிமையான வாழ்க்கை முறையையும், மக்களுடன் தொடர்பில் இருப்பதில் சிறப்பான வழிகளை அவர் கையாண்டதையும் பிரதமர் எடுத்துரைத்தார். பண்டிகைகளின் போது வெங்கையா நாயுடுவின் இல்லத்தில் தாம் நேரத்தை செலவிட்டதையும் பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார். இந்திய அரசியலுக்கு திரு வெங்கையா நாயுடு போன்ற ஆளுமைகள் ஆற்றிய பங்களிப்புகளை பிரதமர் சுட்டிக் காட்டினார். இன்று வெளியிடப்பட்ட மூன்று நூல்கள் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், இவை வெங்கையா நாயுடுவின் வாழ்க்கைப் பயணத்தை சித்தரிப்பவை என்றும், இவை இளைய தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கும் ஆதாரமாக உள்ளன என்றும் கூறினார்.

திரு வெங்கையா நாயுடு, வாழ்க்கைப் பயணத்தின் 75 ஆண்டுகளை நிறைவு செய்வதை முன்னிட்டு திரு நரேந்திர மோடி மீண்டும் ஒருமுறை அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா சுதந்திரத்தின் நூற்றாண்டைக் கொண்டாடும் என்றும், வெங்கையா நாயுடுவும் நூற்றாண்டு மைல்கல்லைக் கொண்டாடுவார் என்றும் திரு நரேந்திர மோடி தெரிவித்தார். மாநிலங்களவையில் ஒருமுறை திரு வெங்கையா நாயுடுவுக்காகக் கூறப்பட்ட ஒரு கவிதையின் சில வரிகளை நினைவுகூர்ந்து பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு