ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக இருந்த சி.பி. இராதாகிருஷ்ணன்,
மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். கோயம்புத்தூரில் இருந்து இரண்டு முறை நாடாளுமன்ற மக்களவைக்குத் தேர்வானவர்.
பரேலி தொகுதியில் தொடர்ந்து 6 முறை வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சந்தோஷ் கங்வார் ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் ஆளுநராக அசாம் மாநிலத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் . ராமன் தேகா நியமிக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநில சட்டசபையின் முன்னாள் சபாநாயகரும் பாரதிய ஜனதா கட்சியின்
ராஜஸ்தானின் மூத்த பாஜக தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவையின் முன்னாள் உறுப்பினருமான ஓம் பிரகாஷ் மாத்தூர் சிக்கிம் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.பஞ்சாப் ஆளுநர் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர் திரு பன்வாரிலால் புரோஹித்தின் ராஜினாமாவை இந்திய குடியரசுத்தலைவர் ஏற்றுக்கொண்டார்.
2. கீழ்க்கண்ட ஆளுநர்களை நியமிப்பதில் குடியரசுத்தலைவர் மகிழ்ச்சி அடைகிறார்:-
(i) ஸ்ரீ ஹரிபாவ் கிசன்ராவ் பாக்டே, ராஜஸ்தான் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
(ii) தெலங்கானா ஆளுநராக திரு ஜிஷ்ணு தேவ் வர்மா நியமிக்கப்பட்டார்.
(iii) திரு ஓம் பிரகாஷ் மாத்தூர், சிக்கிம் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
(iv) திரு. சந்தோஷ் குமார் கங்வார், ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
(v) சத்தீஸ்கர் ஆளுநராக திரு. ராமன் டேகா நியமிக்கப்பட்டார்.
(vi) திரு சி.ஹெச்.விஜயசங்கர், மேகாலயா ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
(vii) ஜார்க்கண்ட் ஆளுநர் திரு சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, தெலங்கானா ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது, மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
(viii) அசாம் ஆளுநர் திரு. குலாப் சந்த் கட்டாரியா , பஞ்சாப் ஆளுநராகவும், சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
(ix) சிக்கிம் ஆளுநர் திரு லக்ஷ்மன் பிரசாத் ஆச்சார்யா, அசாம் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார், மேலும் மணிப்பூர் ஆளுநரின் கூடுதல் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
3. மேற்கண்ட நியமனங்கள் அவரவர் பொறுப்பேற்கும் தேதிகளில் இருந்து நடைமுறைக்கு வரும். புதுச்சேரி துணைநிலை ஆளுநராக திரு. கே. கைலாஷ்நாதனை குடியரசுத்தலைவர் நியமித்துள்ளார். பதவி ஏற்கும் நாளிலிருந்து அவர் இந்த பொறுப்பை வகிப்பார்.
கருத்துகள்