முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நித்தி ஆயோக் கூட்டத்தில் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கருத்து:

டில்லி நித்தி ஆயோக் கூட்டத்தில் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கருத்து:

நதி நீர் இணைப்பு போன்றவை எல்லாம் outdated concept என்று தான் நினைக்க தோன்றுகிறது. மழை நன்றாகவே பெய்கிறது. ஆனால் சேமிப்பில் கோட்டை விட்டு விடுகிறோம். இந்தியாவின் பிரச்சினை பிரிட்டிஷ் பாராளுமன்றத் தேர்தல் முறை உள்ளதை ஓரம் கட்டிவிட்டு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ளது போன்று அதிபர் தேர்தல் முறைகளைக் கொண்டு வந்து


அரசியலுக்கு  வந்து "சேவை செய்யக்" காத்திருக்கும் தற்குறிகளை ஒழித்தாலே போதும், பல சீரிய பொருளாதார சமூக மேம்பாடுகளை கொண்டு வர முடியும். இந்த நாட்டின் மிகப் பெரிய முட்டுக் கட்டை ஒழுக்கமற்ற அரசியல் ஜனநாயகம் தான். 

செல்வக் குவிப்பைத் தீர்க்க 'பி4' மாதிரியை முதல்வர் சந்திரபாபு நாயுடு பரிந்துரைக்கிறார்

ஆந்திர முதல்வர் வேலை உருவாக்கம் தேசிய முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.

மேலும்  பொது-தனியார்-மக்கள் கூட்டாண்மையை (PPPs) குறிக்கும் 'பி4' மாதிரியை ஏற்றுக்கொள்வதன் மூலம் இந்தியா எதிர்கொள்ளும், அதிகரித்து வரும் செல்வச் செறிவு ( concentration of wealth )  குறித்து தனது கவலையைப் பகிர்ந்து கொண்டார்.


 "பூஜ்ஜிய வறுமை", மாநிலங்கள் தங்களின் சொந்த மக்கள்தொகை மேலாண்மைத் திட்டங்களை வகுத்தல் மற்றும் நதிகளை இணைப்பது குறித்து சந்திரபாபு நாயுடுவின் சில பரிந்துரைகள், மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் இறுதிக் கருத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மக்கள்தொகை ஈவுத்தொகை குறையும் என்பதால், நதிகளை இணைக்கும்  வரைபடத்தை மத்திய அரசு தயாரிக்க வேண்டுமென்றும் மாநிலங்கள் அந்தந்த மக்கள்தொகை மேலாண்மைத் திட்டங்களைக் கொண்டு வர வேண்டுமென்றும் சந்திரபாபு நாயுடு பரிந்துரைத்தார்.

இந்தியாவின் வளர்ச்சியின் பெரும்பகுதி வரலாற்று ரீதியாக PPP - Public private partnership போன்ற முயற்சிகள் மூலம் உருவானவை என்றும் "சந்தேகத்திற்கு இடமின்றி, இந்தியாவில்  செல்வம் உருவாக்கப்பட்டது, ஆனால் அது ஒரு சிலர் கைகளில் குவிந்துள்ளது," என்றும் அவர் நித்தி ஆயோக் கூட்டத்தில் ஆற்றிய உரையில் தெரிவித்தார்.

"P4 மாதிரியில்",  மேலும் "மக்கள்தொகையில் முதல் 10 சதவிகிதத்தினர், கீழ்மட்டத்திலுள்ள 20 சதவிகித மக்களை ஒரு சமூகப் பொறுப்பாக ஏற்றுக்கொண்டு கையாள வேண்டும்." குறுகிய காலத்தில் "பூஜ்ஜிய வறுமை", "நடுத்தர காலத்தில் தொடர்ச்சியான அதிகாரமளித்தல்" மற்றும் நீண்ட கால நோக்கம் "உள்ளவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையிலான இடைவெளியை "குறிப்பாக" குறைக்க வேண்டுமென்று அவர் கூறினார். "

அனைத்து வளர்ச்சி நடவடிக்கைகளின் "ஒற்றை இலக்கு" வேலைவாய்ப்பை உருவாக்குவதாக இருக்க வேண்டுமென்றும்  கூறினார். "இது எங்கள் தேசிய முன்னுரிமையாக இருக்க வேண்டும்," என அவர் கூறினார். "எவ்வளவு பணம் முதலீடு செய்யப்படும் என்பதற்குப் பதிலாக, எவ்வளவு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று நாம் கேட்க வேண்டும்," எனவும், 

"நாம் உள்நாட்டில் போதுமான (வேலைவாய்ப்பு) வாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமல்லாமல், உலகளாவிய பணியாளர்களின் மிக முக்கியமான ஆதாரமாக நாம் உருவாக வேண்டும். இறுதியில், இந்தியாவின் பலம் அதன் மக்களே," என்றார். 

நதிகளை இணைப்பது குறித்துக் கூறுகையில், தங்க நாற்கரச் சாலை வலையமைப்பு, நாட்டில் சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளின் தரத்தை மேம்படுத்த வழி வகுத்தது. "குடிநீர், நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளத்தைத் தவிர்ப்பது போன்றவற்றில் இதேபோன்ற புரட்சியை நதிகளை இணைப்பதன் மூலம் அடைய முடியும்," எனக் கூறினார்.

, "ஒரு விரிவான திறன் கணக்கெடுப்பை" மேற்கொள்ளும் தனது அரசாங்கத்தின் திட்டங்களைப் பற்றியும், மார்கியூ இந்திய பிராண்டுகளை உருவாக்குவதன் அவசியம் பற்றியும் விரிவாகப் பேசினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...