முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோயம்புத்தூர், திருநெல்வேலி மேயர் வரிசையில் காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜும் ராஜினாமா செய்கிறார் ?

கோயம்புத்தூர், திருநெல்வேலி மேயர் வரிசையில் காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜும் ராஜினாமா செய்கிறார் ?


பல்வேறு விவகாரங்கள் குறித்து 

திமுக தலைமை அவரிடம்  விளக்கம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது...!கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தக்குமார் ராஜினாமா செய்துள்ளார். மருத்துவக் காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார் அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணன் ராஜினாமா.

கோயம்புத்தூர் மேயர் கல்பனா ஆனந்தக்குமார் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தி.மு.க வின் தலைமை எதிர்பார்த்த அளவு பணியாற்றவில்லை எனவும். மேயராக கல்பனா பொறுப்பேற்றதிலிருந்து, மாநகராட்சிக் ஆணையர்களான  இராஜகோபால் சுங்கரா, பிரதாப் உள்ளிட்ட அலுவலர்கள் உடன் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடித்தார் மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுடனும் மோதிய நிலையில், ஜூலை மாதம் 3 ஆம் தேதி கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் பதவியை கல்பனா ஆனந்தக்குமார் இராஜினாமா செய்தார். மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் ராஜினாமாக் கடிதத்தை வேறொருவர் மூலமாக வழங்கினார். மருத்துவக் காரணங்களுக்காக தான் ராஜினாமா செய்வதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார் கல்பனா இரண்டாண்டுகள், நான்கு மாதங்கள் மேயராகப் பதவி வகித்துள்ளார். தி.மு.க.,வைச் சேர்ந்த முதல் பெண் மேயரானவர், ஐந்தாண்டுகள் முழுமையாக பதவி வகிக்காமல், இடைப்பட்ட காலத்திலேயே பதவி விலகியுள்ளார். திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரணவனும் தனது பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை ஆனையரிடம் கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது தி.மு.க, வின் மேயர் சரவணன் மீது, பல புகார்களை, ஆளுங்கட்சிக் கவுன்சிலர்கள், கட்சியின் தலைமைக்குத் தெரிவித்தனர். ஏற்கனவே, சரவணன் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வர, 35 க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு, மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினர். நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீது, ஜனவரி மாதம் ஓட்டெடுப்பு நடத்தப்படும் என, மாநகராட்சி ஆணையர்  அறிவித்திருந்தார். ஆனால், நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு முன், நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவும், திருநெல்வேலி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசும் இணைந்து, கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது, கவுன்சிலர்களுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழியையடுத்து,   அவர்கள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததனால் தீர்மானம் தோல்வியடைந்தது.


அதன்பின் நடந்த மாநகராட்சி மன்றக் கூட்டங்களில், தொடர்ந்து மேயர் சரவணனுக்கும், கவுன்சிலர்களுக்கும் மோதல்  நீடித்தது வந்ததுடன். சமீபத்தில் நடந்த மாநகராட்சி மன்றக் கூட்டத்திற்கு, 10 கவுன்சிலர்கள் மட்டும் தான் வருகை தந்தனர். பெரும்பான்மையின்றி கூட்டம் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டதையடுத்து, சென்னை  அறிவாலயத்துக்கு வரவழைக்கப்பட்ட மேயர் சரவணனிடம், கட்சித் தலைமை ராஜினாமா கடிதம் பெற்றுள்ளதாக அக்கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பத்து பேர் இன்று தாங்கள் வகித்து வந்த நிலைக் குழு உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்து மேயருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் பத்து மாமன்ற உறுப்பினர்கள்  கூட்டாகச் சேர்ந்து இராஜினாமாக் கடிதங்களை மாநகராட்சி ஆனையரிடம் வழங்கி நிலைக்குழுப் பதவிகளை புறம் தள்ளியுள்ளனர். காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 மாமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி மீது அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்து ஆளும் திமுக கட்சி உள்ளிட்ட அதிமுக, பாமக, பாஜகவைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் பலர் தொடர்ந்து மேயரை மாற்றிடக் கோரி போர்க்கொடி தூக்கியுள்ளனர்.


காஞ்சிபுரம் மாநகராட்சியின் தற்போது மேயராக மகாலட்சுமி யுவராஜ் உள்ளார். ஆரம்பம் முதலே சிக்கல்கள் இருந்தன. திமுக அவருக்கு மேயராக சீட் வழங்கிய போது, அவருக்கெதிராக திமுகவைச் சேர்ந்த சூர்யா என்பவர் மேயருக்குப் போட்டியிட்டார். அவருக்கு எதிர்க்கட்சிக் கவுன்சிலர்கள் மற்றும் திமுகவைச் சேர்ந்த சில கவுன்சிலர்களின் ஆதரவும் இருந்தது. மகாலட்சுமி யுவராஜுக்கு முதல் சோதனை, மேயர் தேர்தலிலிருந்தே துவங்கிவிட்டதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி கவுன்சிலர்களுக்கும்,  மகாலட்சுமி யுவராஜிர்குப் பிரச்சனைகள் அதிகரிக்க துவங்கியது. மேலும் மாநகராட்சி முழுவதும் பல்வேறு பிரச்சனைகள் அதிகரிக்கவே கடும் நெருக்கடி உருவாகியது. மாநகராட்சி ஆணையரான கண்ணன், மேயர் தரப்பு அழுத்தத்தால் மாற்றப்பட்டதாகவும் தெரிகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு