கோயம்புத்தூர், திருநெல்வேலி மேயர் வரிசையில் காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜும் ராஜினாமா செய்கிறார் ?
கோயம்புத்தூர், திருநெல்வேலி மேயர் வரிசையில் காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜும் ராஜினாமா செய்கிறார் ?
பல்வேறு விவகாரங்கள் குறித்து
திமுக தலைமை அவரிடம் விளக்கம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது...!கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தக்குமார் ராஜினாமா செய்துள்ளார். மருத்துவக் காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார் அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணன் ராஜினாமா.
கோயம்புத்தூர் மேயர் கல்பனா ஆனந்தக்குமார் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தி.மு.க வின் தலைமை எதிர்பார்த்த அளவு பணியாற்றவில்லை எனவும். மேயராக கல்பனா பொறுப்பேற்றதிலிருந்து, மாநகராட்சிக் ஆணையர்களான இராஜகோபால் சுங்கரா, பிரதாப் உள்ளிட்ட அலுவலர்கள் உடன் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடித்தார் மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுடனும் மோதிய நிலையில், ஜூலை மாதம் 3 ஆம் தேதி கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் பதவியை கல்பனா ஆனந்தக்குமார் இராஜினாமா செய்தார். மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் ராஜினாமாக் கடிதத்தை வேறொருவர் மூலமாக வழங்கினார். மருத்துவக் காரணங்களுக்காக தான் ராஜினாமா செய்வதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார் கல்பனா இரண்டாண்டுகள், நான்கு மாதங்கள் மேயராகப் பதவி வகித்துள்ளார். தி.மு.க.,வைச் சேர்ந்த முதல் பெண் மேயரானவர், ஐந்தாண்டுகள் முழுமையாக பதவி வகிக்காமல், இடைப்பட்ட காலத்திலேயே பதவி விலகியுள்ளார். திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரணவனும் தனது பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை ஆனையரிடம் கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது தி.மு.க, வின் மேயர் சரவணன் மீது, பல புகார்களை, ஆளுங்கட்சிக் கவுன்சிலர்கள், கட்சியின் தலைமைக்குத் தெரிவித்தனர். ஏற்கனவே, சரவணன் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வர, 35 க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு, மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினர். நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீது, ஜனவரி மாதம் ஓட்டெடுப்பு நடத்தப்படும் என, மாநகராட்சி ஆணையர் அறிவித்திருந்தார். ஆனால், நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு முன், நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவும், திருநெல்வேலி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசும் இணைந்து, கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது, கவுன்சிலர்களுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழியையடுத்து, அவர்கள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததனால் தீர்மானம் தோல்வியடைந்தது.
அதன்பின் நடந்த மாநகராட்சி மன்றக் கூட்டங்களில், தொடர்ந்து மேயர் சரவணனுக்கும், கவுன்சிலர்களுக்கும் மோதல் நீடித்தது வந்ததுடன். சமீபத்தில் நடந்த மாநகராட்சி மன்றக் கூட்டத்திற்கு, 10 கவுன்சிலர்கள் மட்டும் தான் வருகை தந்தனர். பெரும்பான்மையின்றி கூட்டம் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டதையடுத்து, சென்னை அறிவாலயத்துக்கு வரவழைக்கப்பட்ட மேயர் சரவணனிடம், கட்சித் தலைமை ராஜினாமா கடிதம் பெற்றுள்ளதாக அக்கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பத்து பேர் இன்று தாங்கள் வகித்து வந்த நிலைக் குழு உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்து மேயருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் பத்து மாமன்ற உறுப்பினர்கள் கூட்டாகச் சேர்ந்து இராஜினாமாக் கடிதங்களை மாநகராட்சி ஆனையரிடம் வழங்கி நிலைக்குழுப் பதவிகளை புறம் தள்ளியுள்ளனர். காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 மாமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி மீது அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்து ஆளும் திமுக கட்சி உள்ளிட்ட அதிமுக, பாமக, பாஜகவைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் பலர் தொடர்ந்து மேயரை மாற்றிடக் கோரி போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியின் தற்போது மேயராக மகாலட்சுமி யுவராஜ் உள்ளார். ஆரம்பம் முதலே சிக்கல்கள் இருந்தன. திமுக அவருக்கு மேயராக சீட் வழங்கிய போது, அவருக்கெதிராக திமுகவைச் சேர்ந்த சூர்யா என்பவர் மேயருக்குப் போட்டியிட்டார். அவருக்கு எதிர்க்கட்சிக் கவுன்சிலர்கள் மற்றும் திமுகவைச் சேர்ந்த சில கவுன்சிலர்களின் ஆதரவும் இருந்தது. மகாலட்சுமி யுவராஜுக்கு முதல் சோதனை, மேயர் தேர்தலிலிருந்தே துவங்கிவிட்டதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி கவுன்சிலர்களுக்கும், மகாலட்சுமி யுவராஜிர்குப் பிரச்சனைகள் அதிகரிக்க துவங்கியது. மேலும் மாநகராட்சி முழுவதும் பல்வேறு பிரச்சனைகள் அதிகரிக்கவே கடும் நெருக்கடி உருவாகியது. மாநகராட்சி ஆணையரான கண்ணன், மேயர் தரப்பு அழுத்தத்தால் மாற்றப்பட்டதாகவும் தெரிகிறது.
கருத்துகள்