முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எஸ் ஆர் எம் கல்லூரியில் கஞ்சா போதைவஸ்து சோதனையில் 30 மாணவர்கள் கைது

சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள பச்சை முத்து உடையாருக்குப் பாத்தியப்பட்ட ஏரியை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட எஸ்ஆர்எம் நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தில்


செயல்படும் கல்லூரியில் அதிகாலையிலேயே குவிக்கப்பட்ட 1000 காவலர்கள் அங்குள்ள விடுதிகளில் தீவிரமாக சோதனை நடத்தினர் 


சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் அதிகாலையில் பலருக்கும் கஞ்சா புழக்கம் இருப்பதாக காவல் நிலையத்திற்கு வந்த புகார்கள் அடிப்படையில் அங்கு 1000 காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களில் ஆண்கள், பெண்கள் விடுதிகளைத் தங்களது  கட்டுப்பாட்டில் கொண்டு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னையின் புறநகர் பகுதியான பொத்தேரி எனும் ஏரியையும், காட்டான் குளத்தூர்  எனும் குளதையும் சட்டவிரோத அரசாணை மீறல் செய்து கட்டப்பட்ட நிறுவனங்களாகும்  செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்துள்ள பகுதி இங்கு எஸ்ஆர்எம் நிகர் நிலைப் பல்கலைக்கழகம் செயல்படுகிறது. இங்கு பொறியியல், மருத்துவம், டிப்ளமோ உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகள் செயல்படுகின்றன. சிவாஜி திரைப்படத்தில் வரும் வில்லன் ஆதி கேசவன் போல மாணவர்களின் இரத்தத்தை உறிஞ்சும் இந்திய அளவில் புகழ் பெற்ற ஒரு கல்வி நிறுவனத்தின் கல்லூரியான எஸ்ஆர்எம் தமிழ்நாடு, பாண்டிச்சேரி கர்நாடகா ஆந்திரா, கேரளா மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் படிக்கிறார்கள். மேலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கிப் படித்து வருகிற நிலையில், விடுதிகளில் சிலர் கஞ்சா வைத்திருப்பதாக காவல் நிலையத்திற்கு ரகசியத் தகவலகள் வந்ததையடுத்து காலையிலேயே திடீரென எஸ்ஆர்எம் கல்லூரி வளாகத்தில் 1000 க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டனர். அதனையடுத்து எஸ்ஆர்எம் கல்லூரியில் ஆண்கள், பெண்கள், தங்கும் விடுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள வீடுதிகளிலும் தீவிரமாக சோதனை நடத்தினார்கள். மேலும் அடுக்குமாடியில் குடியிருக்கும் நபர்கள் மற்றும் அவர்களின் இருசக்கர வாகனங்களில் தீவிரமாச்க சோதனை நடந்தது.

வெளி நபர்கள் உள்ளே செல்லும் போது அவர்கள் என்ன வைத்திருக்கிறார்கள் என்பது தொடர்பாகவும் சோதனை நடந்தது. , ஆண்கள், பெண்கள் ஹாஸ்டலை கன்ட்ரோலுக்கு கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் போதை மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு அதே கல்லூரியைச் சேர்ந்த 30 மாணவர்கள காவல்துறையினர் கைது செய்தனர்.

2022 ஆம் ஆண்டு கல்லூரியைச் சேர்ந்த சில வட மாநில மாணவர்கள் நெடுஞ்சாலையில் தங்களுக்குள் தாக்கிக் கொண்டனர். கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் பல மாணவர்கள் காயமடைந்தனர். அது குறித்து தகவலறிந்த கூடுவாஞ்சேரி காவல்துறையினர் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பதில் ஏற்பட்ட போட்டியின் காரணமாகவே இந்தத் தகராறு ஏற்பட்டதாகத் தெரியவந்ததையடுத்து அந்த மாணவர்கள் வாடகைக்கு பிடித்துத் தங்கியிருக்கும் வீடுகளில் காவல் துறையினர் சோதனை நடத்தினர். சம்பந்தப்பட்ட மாணவர்களை சிறையிலடைத்தனர்


தமிழகத்தில் போதை பொருட்களின் புழக்கம் அதிகமாக இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து ஆங்காங்கே போதை பொருட்கள் ஒழிப்புக்கான சோதனை நடத்தப்படுகிறது. அது போல் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களிலும் இந்தச் சோதனை அதிகரித்து.

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கத்தால் இளைஞர்கள் சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இந்த போதையால் பல வெறிச் செயல்களில் இளைஞர்களும் மாணவர்களும் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டிய எதிர்க்கட்சிகள் தமிழ்நாடு போதையில்லா மாநிலமாக மாற்ற முயற்சிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...