முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எடப்பாடி கே.பழனிச்சாமி செய்த நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணை

எடப்பாடி கே.பழனிச்சாமி செய்த நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணை


டிசம்பர் மாதம் 11-ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு.   2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அதிமுக ஆட்சி காலத்தில் எடப்பாடி கே. பழனிச்சாமி நெடுஞ்சாலைத் துறையில் பல்வேறு முறைகேடுகளை செய்தார் என புகார்கள் வந்தன தஞ்சாவூர், கோயம்புத்தூர், சிவகங்கை பகுதிகளுக்கான நெடுஞ்சாலை துறை டெண்டரில் சட்ட விதிகளை மீறி 692 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பை எடப்பாடி கே பழனிசாமி ஏற்படுத்தியதாக

அவருக்கு எதிராக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டி புகார் அளித்தது.அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி, எடப்பாடி கே.பழனிசாமி குறித்து பேசுவதற்கு அறப்போர் இயக்கத்துக்கு அப்போது தடை விதித்து உத்தரவிட்டார். இது ஊழல் நடவடிக்கைகளை ஆதரிக்கும் செயல் போல உள்ளது என்பதால் அந்த உத்தரவை எதிர்த்து அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் விமர்சனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுமென உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், எடப்பாடி கே.பழனிசாமி குறித்து பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானது என அறப்போர் இயக்கத்தின் வாதத்தை ஏற்றுக் கொண்ட இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழக்கை தொடர்ந்து விசாரிக்க உத்தரவிட்டதையடுத்து இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இந்த வழக்கில் மாஸ்டர் நீதிமன்ற நீதிபதி மகாலெட்சுமி முன் எடப்பாடி கே.பழனிச்சாமி நேரில் ஆஜராகி சாட்சியம், அளித்த வர் அவருக்கு ஆதரவாக சில ஆதாரங்களை அளித்தார்.

அதை பதிவு செய்து கொண்ட நீதிபதி எடப்பாடி கே.பழனிச்சாமி டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தார்.வழக்கமாக அவதூறு வழக்கு தொடுப்பவர்கள் எதை அவதூறு என்று சொல்கிறார்களோ அந்த ஒரு விஷயத்தை எதிர்தரப்பு பேச தடை கேட்பார்கள். ஆனால் எடப்பாடி கே பழனிச்சாமி தன்னைப் பற்றியே பேச கூடாது என்று தடை கேட்க அந்த நீதிபதியும் அறப்போர் இரண்டு நாட்களாக வழக்கின் ஆதாரங்கள் குறித்து பேசிய எதையும் தீர்ப்பில் குறிப்பிடாமல் இனி எடப்பாடி கே பழனிச்சாமி பற்றியே அறப்போர் பேச கூடாது என்று தடை விதிக்கிறார். எப்படி அப்படி ஒரு தீர்ப்பு கொடுக்கப்பட்டது, அதற்கு என்ன காரணம் என்றெல்லாம்  தெரியாது. ஒரு வேளை தன்னை பற்றி பேசுவதையே அவதூறு என்று எடப்பாடி கே பழனிச்சாமி நினைக்கிறாரோ என்னமோ தெரியவில்லை. 

அந்த வழக்கின் தொடர்ச்சியாக தற்பொழுது நான் தான் வழக்கை தொடுத்திருக்கிறேன் என்று இன்று நீதிமன்றம் வந்து எடப்பாடி கே பழனிச்சாமி சாட்சி அளித்திருக்கிறார். இனி வழக்கு விசாரணை துவங்கும். அறப்போர் தங்களிடம் இருக்கும் ஆதாரங்களை முன்வைத்து வழக்கை சந்திப்பார்கள். எடப்பாடி கே பழனிச்சாமிக்கு இனி  1.1 கோடி கிடைக்குமா அல்லது ஆதாரங்களில் உண்மை இருக்கிறது என்று தீர்ப்பு வருமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இது போலவே கோடநாடு கொலை கொள்ளை வழக்கு நிலையும் அமையும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...