முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில். நாளடைவில் 5418 பணியிடங்கள் ரத்து செய்து அரசாணை.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் தற்காலிகமான பணியிடங்கள்


பத்தாண்டுகளுக்கு மேலாகத் தொடர் நீட்டிப்பு ஆணை பெற்று வரும் நிலையில் மேலும் தொடர்வதன் அவசியத்தை ஆராய்வதற்கு குழு அமைக்கப்பட்டது அதன் விபரம் வருமாறு :-


பள்ளிக் கல்வித்துறையில் 47,013 பணியிடங்கள் மட்டுமே ஆனால் ஒழிக்கப்படப்போகும் பணியிடங்களில் 5418 ல் ஆசிரியர் பணியிடங்கள் பிரித்துக் காட்டப்படவில்லை.





பள்ளிக் கல்வித்துறையில் முதன்மைக் கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், ஏவலர்கள் மற்றும் இரவுக் காவலர்கள் வரையிலான பல பணியிடங்கள் அந்தந்தக் காலத்தின் தேவையை முன்வைத்து 1997 ஆம் ஆண்டு முதல் தற்காலிகமாக உருவாக்கப்பட்ட நிலையில்.




2022 ஆம் ஆண்டு வரை மொத்தம் 52,578 பணியிடங்கள் தேவை எனக் கருதி தற்காலிகமாக உருவாக்கப்பட்டாலும், அதன் தேவை தொடரும் வரை அதில் பணியாற்றுவோருக்கு அரசின் முழுமையான காலமுறை ஊதியம் வழங்கப்படும். சில நேரங்களில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டு பின்னர் சிலருக்கு காலமுறை ஊதியமாக மாற்றப்பட்டதும் உண்டு.



ஒவ்வோராண்டும் இந்தப்பணியிடங்கள் இனியும் தேவைதானா என்பதைப் பொறுத்து அப்பணியிடத்திற்கு கால நீட்டிப்பு வழங்கப்படும். ஆனால் அது தேவையில்லை எனில் அப்பணியிடத்தை அரசு இரத்து செய்துவிடும். ஒவ்வோராண்டும் ஒப்புதல் வழங்கப்பட்ட பின்னரே அந்தப்பணியிடத்திற்கான ஊதியத்திற்கு நிதி ஒதுக்கப்படும். ஆனால் ஒப்புதல் காலதாமதமாகும் போது ஊதியம் உரிய காலத்தில் பெற இயலாத சூழ்நிலையும் ஏற்படும்.



இந்த நிலையில் இதுவரை ஒவ்வோராண்டும் தொடர் பணி நீட்டிப்பு செய்யப்பட்டு வந்த 52,578 பணியிடங்களில் 47,013 மட்டுமே நிரந்தரமாகத் தேவைப்படும் பணியிடங்கள் தானென இது சார்ந்து ஆராய 2022 ஆம் ஆண்டில்  அமைக்கப்பட்ட குழு அறிக்கை அளித்ததன்படி, இனி இந்த 47,013 பணியிடங்களுக்கும் ஒவ்வோராண்டும் ஒப்புதல் பணி நீட்டிப்பு செய்யவேண்டிய தேவையைத் தவிர்த்து அவற்றை நிரந்தரமாகத் தேவைப்படும் பணியிடங்களாக அறிவித்து அரசாணை (ப.க.து. G.O.9 நாள் 27.01.2025) தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.



இதே குழுவின் ஆய்வு முடிவுகளின் படி 3035 தொழிற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்கள் உட்பட 5418 பணியிடங்களுக்கு இப்போது ஒழிக்கப்பட்டு அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களில் பணிபுரிந்து வருவோர் ஓய்வு பெற்றபின் மீண்டும் அவை புதிய நபர்கள் மூலம் நிரப்பப்பட மாட்டாது, அப்பணியிடமே ஒழிக்கப்பட்டுவிடும்.



ஆகவே மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 3035 தொழிற்கல்வி ஆசிரியர்களின் பணியிடங்கள் இனி நிரப்பப்படப் போவதேயில்லை என்பதால், இனி அந்தப் பாடப் பிரிவுகளே பள்ளிகளிலிருந்து தூக்கப்படப் போகிறது என்பதும் இங்கு கவனிக்க வேண்டும். அப்பணியிடத்திற்கான தனிப்பட்ட சிறப்புத் தகுதியோடு பல ஆண்டுகளாகப் படித்து முடித்து பணிக்காகக் காத்திருப்போரின் வேலைவாய்ப்பும் தற்போது பறிபோயுள்ளது.



மொத்தத்தில் இந்த நடவடிக்கை என்பது 47,013 பணியிடங்களை நிரந்தரமாக்கும் அதிரடி அறிவிப்பாக மட்டுமே சில செய்தி ஊடகங்களில் பலூன் போல ஊதிப் பெரிதாக்காட்டப்பட்டாலும், அதில் 5418 பணியிடங்கள் ஒழிக்கப்பட்டதன் மூலம் 5418 பணியாளர்கள் பெறும் வேலைவாய்ப்புகள் ஒழிக்கப்பட்டதோடு, குறிப்பாக 3035 தொழிற்கல்வி ஆசிரியர் (Vocational Group) மற்றும் இயந்திரப் பொறியியல், விவசாயம், தையல், ஓவியம், விளையாட்டு உள்ளிட்ட ஆசிரியர் பணியிடங்கள் இந்த அரசாணை மூலம் ஒழிக்கப்பட்டதோடே தொழிற்கல்வி சார்ந்த பள்ளி மாணவர்களின் விருப்பத்திற்கும் தேவைக்கும் அது முடிவுகட்டப்பட்டசெய்தி முழுமையாகத் தவிர்க்கப்பட்டுள்ளது என்பதே விவாதத்திற்குரிய தகவலாகும்.



பள்ளிக் கல்வி இயக்குனரகத்தின் நிர்வாகத்திலுள்ள ஆசிரியர், ஆசிரியரல்லாத 47013 பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாகவும், 5418 பணியிடங்களில் பணிபுரிபவர்கள் ஓய்வு பெறும் போது நாளடைவில் அதோடு முடிவடையும் காலிப் பணியிடங்களாகவும், 145 பணியிடங்களுக்கு 31டிசம்பர்2028 ஆம் தேதி வரை தொடர்ச்சியாக நீட்டிப்பு வழங்கியும் - தற்போது அரசாணை வெளியிடப்பட்டதன் படி 



பள்ளிக்கல்வித்துறை அரசாணை (நிலை) எண்.19 நாள்: 27.01.2025. உத்தரவில் கண்டுள்ளபடி பார்வையில்: காட்டப்படும் 

1. அரசாணை (டி) எண்.271, நிதி (CMPC) துறை, நாள். 18.08.2022. மற்றும் 

2. அரசு கடித எண்.20006/-1/2022-1,வரவு  நாள். 26.09.2022, மற்றும் 

3. பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் கடிதம் ந.க.எண்.055549/எல்/3/2022, நாள். 17.10.2024. மற்றும் 

4. அரசாணை (2டி) எண்.155, பள்ளிக்கல்வித் துறை, நாள் .18.10.2024. ஆகியவற்றை மையமாக வைத்து திருத்தம் செய்து சேர்க்கப்பட்டு கீழ் கண்ட விபரப்படி உள்ள புதிய அரசாணையில் :-



மேலே முதலாவதாகப் குறிப்பிடப்பட்ட அரசாணையில், பத்தாண்டுகளுக்கு மேலாக தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டு வரும் ஆசிரியர், ஆசிரியரல்லாத தற்காலிகப் பணியிடங்களைத் தொடர்ந்து நீட்டிப்பதன் அவசியம் குறித்து ஆராய்வதற்கு குழு அமைத்து ஆணை வெளியிடப்பட்டது.

2. மேலே இரண்டாவதாக உள்ள கடிதத்தில், மேலே முதலாவதாக உள்ள அரசாணையின்படி, பள்ளிக்கல்வித் துறையில் பத்தாண்டுகளுக்கு மேலாக தற்காலிகமாக உள்ள பணியிடங்கள் தொடர்வதன் அவசியம் குறித்து ஆராய பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

3. மேலே இரண்டாவதாக குறிப்பிட்ட கடிதத்தின்படி அமைக்கப்பட்ட குழுவின் கூட்டம் 09.02.2024 ஆம் தேதியன்று நடைபெற்றதில் அதில் 5.வதாக பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துருவை பரிசீலனை செய்த தாகவும் அரசு அதை ஏற்று அரசாணையின் இணைப்பு 1-ல் கண்டுள்ள பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகத்தின் கீழ்  பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டு வரும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத 47013 தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாகவும், இணைப்பு 2-ல் கண்டுள்ள 5418 பணியிடங்களில் பணிபுரிபவர்களின் பணி ஓய்வுக்குப் பின்னர் அது நாளடைவில் ஒழிக்கப்படும் பணியிடங்களாக (Vanishing post) என அறிவித்து, அவர்கள் பணியிலிருந்து ஒய்வு பெறும் வரை தற்காலிகப் பணியிடங்களாகத் தொடரலாம் என்றும், இந்தப்பணியிடங்களில் பணிபுரிபவர்கள் ஒய்வு பெறும் நாளின் போது இந்தப் பணியிடங்களை திருப்பி ஒப்படைக்க அனுமதி வழங்கலாம் எனவும், இணைப்பு 3- ல் கண்டுள்ள 145 பணியிடங்களுக்கு கடைசியாக தொடராணை வழங்கப்பட்டு தொடராணை முடிவடையும் நாளுக்கு அடுத்த நாள் முதல் 31.12.2028 ஆம் தேதி வரை தொடர் நீட்டிப்பு வழங்கலாமென முடிவு செய்து இந்த அரசு ஆணை வெளியிடப்படுகிறது.

மேலும்  பத்தி 3 ல் வரிசை எண். (56) மற்றும் வரிசை எண். (57)-ல் குறிப்பிட்டுள்ள முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் (ஆண்) மற்றும் முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் (பெண்) ஆகிய இரு பணியிடங்களுக்கு புத்தாக்கம் (Revival) செய்து, மேலே நான்காவதாக படிக்கப்பட்ட அரசாணையில் தனிப்பட்ட ஆணை வெளியிடப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதில் பொது நீதி யாதெனில் படித்த பள்ளியில் பல்துறை ஆசிரியர்களை பார்த்த மற்றும் இலவசக் கல்வி படித்த கடைசி தலைமுறை நாம் மட்டும் தான் இனி அடுத்த தலைமுறை இந்த வரலாறு அறியாது என்பதே உண்மை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...