இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் எதிர் கட்சியான அதிமுக சார்பில் திட்டமிட்டிருந்த போராட்டத்தை. ஆளுநர்
ஆர்.என்.ரவியின் வெளிநடப்பு காரணமாக பிரபலமில்லாது போனது. தான் அவர்கள் வருத்தம்.யார் அந்த சார்? எடப்பாடி கே.பழனிச்சாமி திட்டமிட்டிருந்த போராட்டத்தை பேசமுடியாத நிலை செய்த ஆளுநரின் வெளிநடப்பு!அதிமுக சார்பில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த குற்றம் சம்பந்தப்பட்ட பிரச்சனையை எழுப்ப நினைத்த நிலையில்.. ஆளுநர் ரவி விவகாரம் கவனம் பெற்று. அதிமுகவின் போராட்டம் கவனம் பெறாமல் போய் விட்டது.
ஆனால் இன்று தமிழ்நாடு சட்டசபையில் அதிமுக திட்டமிட்டிருந்த போராட்டத்தை.. ஆளுநர் ரவியின் வெளிநடப்பு இருட்டடிப்பு செய்துள்ளது. தேசிய கீதம் இசைக்க மறுக்கப்பட்டது மிகவும் கவலைக்குரிய விஷயமாகுமென ஆளுநர் மாளிகை தகவல்.
தமிழ்நாடு சட்ட மன்றப்பேரவையில் இன்று மீண்டும் பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள முதலாவது அடிப்படைக் கடமையாகும். அது அனைத்து சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது.
இன்று ஆளுநர் பேரவைக்கு வரும் போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் அவர்கள் பேரவையிடம் அதன் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான முதலமைச்சரிடமும் சட்டப்பேரவை தலைவரான சபாநாயகரிடமும் உருக்கமாகவே வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதால் ஆளுநர் கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்.
தமிழ்த்தாய் வாழ்த்து மீது ஆளுநருக்கு எப்போதும் மரியாதை உள்ளது; தமிழ் கலாச்சாரத்தின் மீது அன்பு, மரியாதை இருக்கிறது; தனது ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தமிழ்த்தாய் வாழ்த்தை ஆளுநர் பாடுவார் என
ஆளுநர் மாளிகையிலிருந்து அறிக்கை. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள X தள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக சட்டசபையில் இன்று மீண்டும் பாரத அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டது. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள முதல் அடிப்படைக் கடமையாகும். இது அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது. இன்று ஆளுநர் மாளிகைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் மாளிகையின் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு சபாநாயகர் அவர்களுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்துக்கு இவ்வளவு அவமரியாதை செய்ததில் ஒரு தரப்பினராக இருக்கக் கூடாது என்று கடும் வேதனையுடன் அவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர். என அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது என, ஆளுநர் கடும் வேதனையுடன் சபையை விட்டு வெளியேறினார்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
தமிழ்நாடு சட்டசபை இன்று தொடங்கியது. இந்நிலையில் தொடங்கப்பட்ட சில நிமிடங்களிலேயே ஆளுநர் ரவி வெளியேறினார். தேசிய கீதம் முதலில் இசைக்கப்பட வேண்டும் என்று ஆளுநர் ரவி முன்பே வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் சட்டப்பேரவை தொடங்கிய உடன் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆளுநர் ஆர் என் ரவி அவையில் இருந்து வெளியேறினார்.
ஆனால் சற்று நிமிடங்களிலேயே அந்த பதிவை ஆளுநர் மாளிகை சார்பில் நீக்கியது. பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்ட தகவலின்படி
'திமுக அரசு, தங்கள் நிர்வாகத் தோல்வியை மறைக்கவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவினால் ஏற்பட்டுள்ள பொதுமக்களின் கோபத்தைத் திசை திருப்பவும், சட்டமன்றத்தில் பின்பற்ற வேண்டிய விதிகளைச் சுட்டிக்காட்டியதற்காக, மாண்புமிகு தமிழக ஆளுநர் மீது பழி சுமத்துவது வாடிக்கையாகிவிட்டது. இன்று, நமது மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள், தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு, தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் திமுக அரசு அதனை மறுத்திருக்கிறது. திமுக அரசுக்குப் பின்வருவனவற்றை நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
நவம்பர் 23, ஆம் தேதி 1970 ஆம் ஆண்டின், மனோன்மணீயம் சுந்தரனார் பிள்ளை அவர்கள் எழுதிய அசல் தமிழ்த்தாய் வாழ்த்தைச் சுருக்கி, திருத்தப்பட்ட பாடலை, மாநில அரசின் தமிழ்த்தாய் வாழ்த்து என, முன்னாள் முதல்வர் காலஞ்சென்ற டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி ஒரு அரசாணை மூலம் அறிவித்தார். அரசு தொடர்பான அனைத்துச் செயல்பாடுகள், கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளின் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இருப்பினும், 1991 ஆம் ஆண்டு வரை, தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் உரைக்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை.
1991 ஆம் ஆண்டு ஜூலை மாதம், காலஞ்சென்ற செல்வி ஜெ. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது தான், முதல்முறையாக ஆளுநர் உரையின் துவக்கத்திலும் முடிவிலும், முறையே தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
மத்திய அரசின், தேசிய கீதம் தொடர்பான உத்தரவுகளின்படி, மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தில் நடக்கும் முறையான அரசு நிகழ்ச்சிகளில், ஆளுநர் மற்றும் துணைநிலை ஆளுநர் வருகையின் போதும், நிகழ்ச்சியிலிருந்து விடைபெறும் போதும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும்.
இந்த உத்தரவு, 1971 ஆம் ஆண்டின் தேசிய மரியாதைக்கான அவமதிப்பு தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு நீதி வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், பொதுமக்களின் கவனத்தை திமுக அரசின் நிர்வாகத் தோல்வியிலிருந்து திசைதிருப்ப முயற்சி செய்ய வேண்டாம் என்றும் தமிழக முதல்வரைப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், வகுத்துள்ள விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுமாறு மட்டுமே தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறார். இதனை ஒரு பெரிய சச்சரவாக்க முயற்சிப்பது, திமுக அரசின் தோல்விகளை மடைமாற்றுவதற்காகவே என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
ஆளுநர் உரை துவங்கும் முன்னரும், நிறைவு பெற்றதும், தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தை வாசிப்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடு.
கருத்துகள்