டில்லியில் ரூபாய். 150 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டுக் கட்டப்பட்டுள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகம்.
டில்லி ஜாண்டேவாலன் பகுதியில் இரண்டு மாடிக் கட்டடமாகயிருந்த RSS (ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்) அலுவலகத்தை புதுப்பிக்கும் பணி, 2018-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆனால் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கட்டடப் பணிகள் தாமதமான நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கட்டிமுடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது.
3.75 ஏக்கர் நிலத்தில், 5 லட்சம் சதுர அடிப் பரப்பளவில், 12 தளங்களுடன் 3 கோபுரங்கள் கொண்ட கட்டடமாகக் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடம் சுமார் 75,000 பேரிடம் நன்கொடை பெற்றுக் கட்டப்பட்டது இந்தக் கட்டிடத்தில் அமைந்துள்ள பிரதானக் கலையரங்கத்துக்கு, அயோத்தி கோவில் கட்டுவதற்கு முக்கிய காரணமாக
இருந்தவர்களின் ஒருவரான விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்ஹால் பெயர் வைக்கப்பட்டுள்ளது. டில்லியில் இருந்த பழைய ஆர்எஸ்எஸ் அலுவலகம் இடிக்கப்பட்டு, தற்போது ரூபாய். 150 கோடியில் 13 தளங்கள் கொண்ட
சுமார் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் பாரதீய ஜனதா கட்சியின் தலைமையகத்தைவிட மிகப் பெரியதாகக் கட்டப்பட்டுள்ள அதிநவீன ஆர்எஸ்எஸ் அலுவலகம் பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி திறக்கப்படுகிறது.கட்டடத்தில் அமைந்துள்ள நூலகத்தில் 8,500 புத்தகங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும், 5 படுக்கைகள் கொண்ட சிறிய மருத்துவ உதவி மையமும் இந்தக் கட்டடத்தில் செயல்படவுள்ளது.
மேலும், ஆர்எஸ்எஸ் அலுவலகங்கள், தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்குவதற்கான இடமென 300 அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அலுவலகத்தை பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி ஆர்எஸ்எஸ் சர் சங்கஜாலக் மோகன் பகவத் திறந்து வைக்கவுள்ளார்.
கருத்துகள்