ஒரு சதவீதம் செஸ் வரியான சந்தை வரி விதிப்பிலிருந்து மக்காச்சோளத்திற்கு விலக்களிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடதற்கு
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சிராப்பள்ளி
நன்றி தெரிவித்துள்ளார்.. விவசாயப் பெருங்குடி மக்களின் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.
திருநெல்வேலி தென்காசி விருதுநகர் தூத்துக்குடி மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட மத்திய மாவட்டங்களில் பெருமளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த மக்காச்சோளத்திற்கு ஒரு விழுக்காடு செஸ் வரி விதித்திருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்தனர் என்றும், அதனை நீக்க வலியுறுத்தியும், அனைவருக்கும் அனைத்தும் என்ற சமூகநீதி அடிப்படையில் முதலமைச்சர் அவர்களை கடந்த மாதம் இரண்டாம் தேதி நேரில் சந்தித்து மக்காச்சோளத்திற்கு விதிக்கப்பட்ட ஒரு விழுக்காடு செஸ் வரியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை கொடுத்து, அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தேன்.
அதற்கு முன்பாக ஜனரி மாதம் 28 ஆம் தேதியன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து இதே மக்காச்சோளத்திற்கான எனது கோரிக்கையை அளித்திருந்தேன்.
அதற்கு பிறகு, ஜனவரி மாதம் 30 ஆம் தேதி தமிழ்நாடு வேளாண்மைத் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரையும் சந்தித்து இந்தக் கோரிக்கையை தெரியப்படுத்தினேன்.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக 02.03.2025 அன்று பெரம்பலூரில், மதிமுக சார்பில் மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும், தமிழ் நாடு அரசுக்கு விவசாயப் பெருங்குடி மக்களின் சார்பாக இக் கோரிக்கையை வேண்டுகோளாக வைத்தேன்.
அதன் அடிப்படையில் தற்போது
ஒரு விழுக்காடு செஸ் வரி எனப்படும் சந்தை வரி விதிப்பிலிருந்து மக்காச்சோளத்திற்கு விலக்களிக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு மக்காச்சோள விவசாயிகளுக்கு நன்மை செய்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கடினமான இந்த அரசியல் பயணத்தில் சோர்வு ஏற்படும்போதெல்லாம் ஏழை எளிய மக்களுக்கு இதுபோன்ற பணியினால் ஏற்படக்கூடிய நல்வாய்ப்புகளைக் கருதி நான் பெருமிதம் கொள்கிறேன். மன மகிழ்ச்சி அடைகிறேன். இதனையே பெரும் உத்வேகமாக எடுத்துக்கொண்டு என்னுடைய அரசியல் பயணத்தை தொடர்கிறேன்.
மீண்டும் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் பெருமக்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் மக்காச்சோள விவசாயிகளின் சார்பிலும் எனது நெஞ்சார்ந்த நன்றி எனக் குறிப்பிடுகிறார்
கருத்துகள்