மூன்று உறுப்பினர் குழுவில் பின்வரும் நீதிபதிகளாக
நீதிபதி ஷீல் நாகு (பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி);
நீதிபதி ஜி.எஸ். சந்தவாலியா ( ஹிமாச்சல் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி); மற்றும்
நீதிபதி அனு சிவராமன் (கர்நாடக மாநிலத்தின் உயர் நீதிமன்ற நீதிபதி).உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் கீழ்க்கண்ட 3 கேள்விகளை முன்வைத்துள்ளனர். அதில் முதலாவது:-
அந்தப் பணம் எப்படி சேமிப்பு அறைக்கு வந்தது?
இரண்டாவதாக:-அந்தப் பணத்தின் ஆதாரம் என்ன? மூன்றாவதாக:-
மார்ச் மாதம் 15 ஆம் தேதியன்று காலை அந்தப் பணம் எப்படி அகற்றப்பட்டது?
இதற்கு நீதிபதி யஷ்வந்த் வர்மா அளித்துள்ள பதிலில், வீட்டில் தீப்பற்றிய போது தான் மத்தியப் பிரதேசத்தில் இருந்ததாகவும் மார்ச் மாதம் 15 ஆம் தேதி மாலை தான் டெல்லி திரும்பியதாகவும் கூறியுள்ளார். வீட்டில் தீ பரவிய போது தனது மகளும் பணியாட்களும் வீட்டில் இருந்ததாகவும் ஆனால் தீ அணைக்கப்பட்ட பிறகு அவர்கள் சேமிப்பு அறையில் பணம் எதையும் பார்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தன்னிடம் வீடியோவைக் காட்டிய பிறகே, எரிந்த நிலையில் இருந்த பணம் குறித்து தனக்கு தெரியவந்ததாக நீதிபதி யஷ்வந்த் வர்மா குறிப்பிட்டுள்ளார்.இதுநாள் வரை தானோ அல்லது தன் குடும்பத்தினரோ அந்த அறையில் பணத்தை வைத்ததில்லை என்றும், இவ்விவகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பணம் தன்னுடையதல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
அவருடைய பதிலில், "திறந்த நிலையில் இருக்கக் கூடிய, எல்லோரும் சென்று வரக்கூடிய ஓர் அறையில் யாராவது பணம் வைப்பார்கள் என்பது நம்ப முடியாததாக உள்ளது." என தெரிவித்துள்ளார். தான் வங்கியிலிருந்து மட்டும் தான் பணத்தை எடுப்பதாகவும் தன்னுடைய பணப் பரிமாற்றம் குறித்த ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தாங்கள் வசிக்கும் வீட்டின் பகுதியிலிருந்து அந்த அறை முற்றிலும் பிரிக்கப்பட்டிருப்பதாகவும் தனது வீட்டுக்கும் அந்த அறைக்கும் இடையே ஒரு சுவர் இருப்பதாகவும் யஷ்வந்த் வர்மா குறிப்பிட்டுள்ளார்.
இதில் தொடர்புபடுத்தப்படும் பணத்தை தன்னிடம் காட்டவோ அல்லது கொடுக்கவோ இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். தன்னுடைய பணியாட்களிடமும் இதுதொடர்பாக விசாரித்ததாகவும், எந்தப் பணமும் அந்த அறையிலிருந்து அகற்றப்படவில்லை என அவர்கள் தெரிவித்ததாகவும் வர்மா கூறியுள்ளார்.
இந்த முழு வழக்கும் தனக்கு எதிரான சதி என அவர் தெரிவித்துள்ளார். "பத்தாண்டுகளுக்கும் மேலாக உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து உருவாக்கிய என்னுடைய புகழை இந்தச் சம்பவம் சிதைத்துள்ளது." என அவர் தெரிவித்துள்ளார்.
இதுநாள் வரை தனக்கு எதிராக எந்தகா குற்றச்சாட்டுகளும் இல்லை என்றும் டிகே உபத்யாய் விரும்பினால் தான் நீதிபதியாக இருந்த காலம் முழுவதையும் விசாரிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தின் இந்தியத் தலைமை நீதிபதியால் அமைக்கப்பட்ட குழுவிடம் வழங்கப்படுள்ளது. நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் கடந்த ஆறு மாத கால போன் பதிவுகளைத் தர வேண்டும் என காவல்துறையிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அவர் தன்னுடைய மொபைல் போனிலிருந்து எந்தவொரு தரவுகளையும் அழிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி அமைத்துள்ள குழுவில் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜிஎஸ் சாந்த்வாலியா மற்றும் கர்நாடகா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் இடம்பெற்ற நிலையில்
1999-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் உள்மட்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது. அதன்படி, உயர் நீதிமன்ற அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு எதிரான புகாரை விசாரிக்க மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு அமைக்கப்படும்.
விசாரணையின் அடிப்படையில், நீதிபதி குற்றமற்றவர் என்றோ அல்லது அந்த நீதிபதியை பதவி விலகுமாறோ கூறும். அவர் பதவி விலக மறுத்தால், அவரை பதவி நீக்கம் செய்யுமாறு பிரதமர் மற்றும் குடியரசு தலைவருக்கு அக்குழு தகவல் அளிக்கும்.
சில சந்தர்ப்பங்களில், நீதிபதிக்கு எதிராக சிபிஐ விசாரணை நடத்துமாறு தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இப்போதைக்கு நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எவ்வித நீதித்துறை சார் பணிகளும் வழங்கப்படக் கூடாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா முடிவெடுத்துள்ளார்.
கருத்துகள்