கோயமுத்தூரில் சதுரங்க வேட்டை மோசடி சிக்கிய நடிகைகள்
பல கோடி மோசடி செய்த ஹாஸ்பே நிறுவனம் துடக்க விழாவை தடபுடலாக நடத்தியது, நிறுவனத்தை அறிமுகம் செய்து முதலீட்டாளர்களுக்கு சொகுசுக் கார்கள் பரிசாக வழங்குவதற்கு பிரபல நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் போன்ற நடிகைகள் ஆகியோர் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.. நடிகை தமன்னாவுக்கு கூலியாக ரூபாய் 25 லட்சம், காஜல் அகர்வாலுக்கு ரூபாய்.18 லட்சம் என 43 லட்சம் ரூபாய் வழங்கியதாகத் தகவல். ஹாஸ்பே நிறுவனம் காகித மற்ற டிஜிட்டல் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் மிகப்பெரிய லாபம் கிடைக்குமென வாக்குறுதி அளித்து. வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் கவர்ச்சிகரமான பரிசுகளை அளித்து.
முதலீட்டாளர்களை நம்ப வைக்க விளம்பரங்களில் பிரபல நடிகைகளைப் பயன்படுத்தி மோசடிக் களம்கண்டது. 2022-ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் ஹாஸ்பே நிறுவனத்தின் தொடக்க விழாவில் நடிகை தமன்னா உள்ளிட்ட நடகைகள் மற்றும் தொழில் அதிபர்களை அந்த மோசடி நிறுவனத்தினர் பங்கேற்க வைத்தனர். பின்னர் 3 மாதங்களுக்குப் பிறகு மகாபலிபுரத்தில் சொகுசு விடுதியில் விழா நடத்தி, பிரபல நடிகை காஜல் அகர்வால் மூலம் தங்களிடம் முதலீடு செய்த சிலருக்கு மட்டும் சொகுசுக் கார்களை பரிசாக வழங்கி, அதன் மூலம் அதிக முதலீட்டாளர்களை ஏமாற்றி கவர்ந்ததனால் விபரம் அறியாதவர்கள் உண்மை என நம்பி பலர் பணம் செலுத்தினர். இப்படியே டெல்லி, ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல பகுதியில் ரூபாய்.50 கோடி வரை மக்கள் முதலீடு செய்தார்கள்.
ஆனால் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நம்பி முதலீடு செய்தவர்களுக்கு போலியான'ஹாஷ்பே' நிறுவனத்தால் பணம் திரும்பக் கொடுக்க முடியவில்லை. நிறுவனத்தின் பணம் நிறுவனம் நடத்திய பலர் பணத்தைப் பதுக்கி தலைமறைவான நிலையில் தான் திவாலானது. அதனால் முதலீட்டாளர்களுக்கு உறுதியளித்தபடி பணத்தைக் கொடுக்க முடியாமல், நிறுவனம் மூடப்பட்டது. எனினும் ஹாஷ்பே நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலுள்ள பத்தில் ஒரு பங்கு பணத்தை வைத்துக் கொண்டு மோசடிக் கும்பல் கும்மாளம் அடித்துக் காலி செய்த நிலையில் பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் பணியாளர் அசோகன் 98 லட்சம் ரூபாய் ஏமாந்ததாக அளித்த புகாரில் பாண்டிச்சேரி சைபர் குற்றக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களைத் தேடி வந்தனர், கோயம்புத்தூர் நட்சத்திரத் தங்கும் விடுதியில் மோசடியில் தொடர்புடைய 36 வயதான நித்தீஷ் ஜெயின், 40 வயதான அரவிந்த்குமார் இருப்பது தெரியவந்த நிலையில் அவர்களைக் கைது செய்தனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில், திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகை தமன்னாவுக்கு ரூபாய்.25 லட்சம், காஜல் அகர்வாலுக்கு ரூபாய்.18 லட்சம் என மொத்தம் 43 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக த் தகவல் அது உண்மையா, இல்லையா என்பதை அவர்கள் விளக்கம் அளித்தால் மட்டுமே தெரியவரும். இதனிடையே இந்த விவகாரத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கோரி நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வாலுக்கு பாண்டிச்சேரி காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த வாய்ப்பு உள்ளது.
கருத்துகள்