முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கிரிப்டோ கரண்ஸி மோசடி சிக்கிய நடிகைகள்

கோயமுத்தூரில் சதுரங்க வேட்டை மோசடி சிக்கிய நடிகைகள்          


பல கோடி மோசடி செய்த ஹாஸ்பே நிறுவனம் துடக்க விழாவை தடபுடலாக நடத்தியது, நிறுவனத்தை அறிமுகம் செய்து முதலீட்டாளர்களுக்கு சொகுசுக் கார்கள் பரிசாக வழங்குவதற்கு பிரபல நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் போன்ற நடிகைகள் ஆகியோர் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.. நடிகை தமன்னாவுக்கு கூலியாக ரூபாய் 25 லட்சம், காஜல் அகர்வாலுக்கு ரூபாய்.18 லட்சம் என 43 லட்சம் ரூபாய் வழங்கியதாகத் தகவல். ஹாஸ்பே நிறுவனம் காகித மற்ற டிஜிட்டல் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் மிகப்பெரிய லாபம் கிடைக்குமென வாக்குறுதி அளித்து. வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் கவர்ச்சிகரமான பரிசுகளை அளித்து.

முதலீட்டாளர்களை நம்ப வைக்க விளம்பரங்களில் பிரபல நடிகைகளைப் பயன்படுத்தி மோசடிக் களம்கண்டது.  2022-ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் ஹாஸ்பே நிறுவனத்தின் தொடக்க விழாவில் நடிகை தமன்னா உள்ளிட்ட நடகைகள் மற்றும் தொழில் அதிபர்களை அந்த மோசடி நிறுவனத்தினர் பங்கேற்க வைத்தனர். பின்னர் 3 மாதங்களுக்குப் பிறகு மகாபலிபுரத்தில் சொகுசு விடுதியில் விழா நடத்தி, பிரபல நடிகை காஜல் அகர்வால் மூலம் தங்களிடம் முதலீடு செய்த சிலருக்கு மட்டும் சொகுசுக் கார்களை பரிசாக வழங்கி, அதன் மூலம் அதிக முதலீட்டாளர்களை ஏமாற்றி கவர்ந்ததனால் விபரம் அறியாதவர்கள் உண்மை என நம்பி பலர் பணம் செலுத்தினர். இப்படியே டெல்லி, ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல பகுதியில் ரூபாய்.50 கோடி வரை மக்கள் முதலீடு செய்தார்கள்.

ஆனால் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நம்பி முதலீடு செய்தவர்களுக்கு போலியான'ஹாஷ்பே' நிறுவனத்தால் பணம் திரும்பக் கொடுக்க முடியவில்லை. நிறுவனத்தின் பணம் நிறுவனம் நடத்திய பலர் பணத்தைப் பதுக்கி தலைமறைவான நிலையில் தான் திவாலானது. அதனால் முதலீட்டாளர்களுக்கு உறுதியளித்தபடி பணத்தைக் கொடுக்க முடியாமல், நிறுவனம் மூடப்பட்டது. எனினும் ஹாஷ்பே நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலுள்ள பத்தில் ஒரு பங்கு பணத்தை வைத்துக் கொண்டு மோசடிக் கும்பல் கும்மாளம் அடித்துக் காலி செய்த நிலையில் பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் பணியாளர் அசோகன் 98 லட்சம் ரூபாய் ஏமாந்ததாக அளித்த புகாரில்  பாண்டிச்சேரி சைபர் குற்றக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களைத் தேடி வந்தனர், கோயம்புத்தூர் நட்சத்திரத் தங்கும் விடுதியில் மோசடியில் தொடர்புடைய 36 வயதான நித்தீஷ் ஜெயின், 40 வயதான அரவிந்த்குமார் இருப்பது தெரியவந்த நிலையில் அவர்களைக் கைது செய்தனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில், திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகை தமன்னாவுக்கு ரூபாய்.25 லட்சம், காஜல் அகர்வாலுக்கு ரூபாய்.18 லட்சம் என மொத்தம் 43 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக த் தகவல் அது உண்மையா, இல்லையா என்பதை அவர்கள் விளக்கம் அளித்தால் மட்டுமே தெரியவரும். இதனிடையே இந்த விவகாரத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கோரி நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வாலுக்கு பாண்டிச்சேரி காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த வாய்ப்பு உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...