முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வரி ஏய்ப்பைத் தடுக்க சட்டவிரோத ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் மீது டிஜிஜிஐ நடவடிக்கை

நிதி அமைச்சகம் வரி ஏய்ப்பைத் தடுக்க சட்டவிரோத ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் மீது டிஜிஜிஐ நடவடிக்கை



சரக்கு மற்றும் சேவை வரி நுண்ணறிவு தலைமை இயக்குநரகம் (டிஜிஜிஐ) ஆப்ஷோர்  ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு எதிரான அதன் அமலாக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. ஆன்லைன் பண கேமிங் துறையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆபரேட்டர்கள் உள்ளனர்.


ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ், ‘ஆன்லைன் பண கேமிங்’ என்பது, செயல்படக்கூடிய உரிமைகோரலாக இருப்பதால், அது ‘சரக்குகளின்’ விநியோகமாக வகைப்படுத்தப்பட்டு 28% வரிக்கு உட்பட்டது. இந்தத் துறையில் செயல்படும் நிறுவனங்கள் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய வேண்டும்.

ஆன்லைன் பண கேமிங்/பந்தயம்/சூதாட்டம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள சுமார் 700 வெளிநாட்டு நிறுவனங்கள் கண்காணிப்பின்  கீழ் உள்ளன. இந்த நிறுவனங்கள் பதிவு செய்யத் தவறியதன் மூலமும், வரி செலுத்த வேண்டிய தொகைகளை மறைப்பதன் மூலமும், வரிக் கடமைகளைத் தவிர்ப்பதன் மூலமும் ஜிஎஸ்டியை ஏய்ப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை, இணக்கமற்ற ஆஃப்ஷோர் ஆன்லைன் பண கேமிங் நிறுவனங்களின், 357 இணக்கமற்ற ஆஃப்ஷோர் ஆன்லைன் பண கேமிங் நிறுவனங்களின் இணையதளங்கள் ,  மிண்ணனுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்  ஒருங்கிணைப்புடன்,  ஐடி சட்டம், 2000-ன் பிரிவு 69ன் கீழ்  தடுக்கப்பட்டுள்ளது.

சில சட்டவிரோத கேமிங் தளங்களுக்கு எதிரான சமீபத்திய நடவடிக்கையில், பங்கேற்பாளர்களிடமிருந்து பணம் வசூலிக்கப் பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகளை டிஜிஜிஐ குறிவைத்து முடக்கியது.

இந்தியாவிற்கு வெளியில் இருந்து ஆன்லைன் பண கேமிங் தளங்களை இயக்கி வரும் சில இந்தியர்களுக்கு  எதிரான மற்றொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.  இந்த நபர்கள் சத்குரு ஆன்லைன் மனி கேமிங் பிளாட்ஃபார்ம், மகாகால் ஆன்லைன் மனி கேமிங் பிளாட்ஃபார்ம் மற்றும் அபி247 ஆன்லைன் மனி கேமிங் பிளாட்ஃபார்ம் உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் தளங்கள் மூலம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் பண கேமிங்கை எளிதாக்குகின்றனர். இந்திய


வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் வசூலிக்க தனிநபர் வங்கி கணக்குகளை பயன்படுத்துகின்றனர்.  இதுவரை இந்த தளங்களுடன் இணைக்கப்பட்ட 166  கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட மூன்று பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் இதுபோன்ற நபர்களுக்கு எதிராக விசாரணை நடந்து வருகிறது.

இந்த நேர்மையற்ற வெளிநாட்டு நிறுவனங்கள் புதிய இணைய முகவரிகளை உருவாக்குவதன் மூலம் கட்டுப்பாடுகளைத் தவிர்க்கின்றன. இந்த நிறுவனங்கள் பரிவர்த்தனைகளைச் செயல்படுத்த இத்தகைய  வங்கிக் கணக்குகள் மூலம் செயல்படுவதும் விசாரணையில் தெரியவந்தது. இந்தக் கணக்குகள் மூலம் சேகரிக்கப்படும் நிதிகள், தேசிய பாதுகாப்புக் கண்ணோட்டத்திற்கு ஆபத்தாக இருக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை விட்டுச் செல்கின்றன.


யூடியூப், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் இந்த தளங்களை ஆதரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது, எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், ஆஃப்ஷோர் ஆன்லைன் பண கேமிங் தளங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.


சட்டவிரோத ஆப்ஷோர் கேமிங் நிறுவனங்களின் அச்சுறுத்தலை முன்கூட்டியே சமாளிக்க டிஜிஜிஐ உறுதியாக உள்ளது. வரவிருக்கும் ஐபிஎல் சீசனில், சட்டவிரோத கேமிங் நடவடிக்கைகளைத் தடுக்க அமலாக்க நடவடிக்கைகள் மிகவும் கடுமையாக இருக்கும். பொறுப்பான கேமிங்கிற்கு தகவலறிந்து இருப்பது மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட தளங்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...