இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் முப்படைத் தாக்குதலில் 80 பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் முகாம்கள் அழிப்பு.
புல்வாமா பழிக்கு நடவடிக்கை இந்தியாவின் OPERATION SINDOOR பாகிஸ்தானின் பகாவல்பூரில் ஜெய்ஷ் தலைமையகம் மர்கஸ் சுப்ஹான் து jeM மீது இந்தியா துல்லியமான தாக்குதல் நடத்தியது.
புல்வாமா தாக்குதலுக்குப் பின்னாலிருந்த தீவிரவாதிகள் இம் முகாமில் பயிற்சி பெற்றவர்கள் 80 பேர் பலியானதாகத் தகவல்
இந்திய விமானப்படை ரஃபேல் விமானங்களில் SCALP, ஹாம்மர் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்கியது. பாகிஸ்தான் மீது வீசப்பட்ட 1300 கிலோ ஏவுகணை இந்தியாவின் ரஃபேல் போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தானுக்குள் வீசப்பட்ட SCALP என்கிற ஏவுகணை.
இது இந்தியாவின் வரலாற்றிலேயே முக்கியமான துல்லிய விமானப்படைத் தாக்குதல் எனப்படுகிறது.
மசூத் அஜார் தலைமையிலான ஜெய்ஷ் இயக்கத்தின் பலர் இந்த தாக்குதலில் அழிக்கப்பட்டனர்.பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் இன்று இலக்குகளைக் குறிவைத்து ராணுவத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என இந்தியா அறிவித்துள்ளது.பாகிஸ்தான் ராணுவத் தளங்களின் மீது இலக்கு வைக்கப்படவில்லை எனவும் மிகவும் கவனத்துடன் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இந்தியா தெரிவித்துள்ளதுஆனால் பாகிஸ்தான் அதை மறுத்துள்ளது. மேலும், இரு குழந்தைகள் உள்பட குறைந்தது 8 பேர் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது இஷாக் தார் கூறியுள்ளார். மேலும், இந்தத் தாக்குதலில் 35 பேர் காயமடைந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அகமதுபூர் கிழக்கு நகரில் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அதேநேரம், "ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் மேற்கொண்ட பதில் தாக்குதலில் மூன்று இந்தியப் பொது மக்கள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.இந்திய ராணுவம் பதிவிட்ட ஒரு ட்வீட்டில், "ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச்-ராஜௌரி பகுதியில் உள்ள பீம்பர் காலியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக" தெரிவித்துள்ளது.
மேலும் அதில், இந்திய ராணுவம் சரியான முறையில் பதிலடி கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கிறது. இதனிடையே ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து இந்திய மூத்த அதிகாரிகள் பல நாடுகளில் உள்ள வெளியுறவுத்துறை அதிகாரிகளுககு விளக்கம் அளித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ரஷ்யா உள்பட பல்வேறு நாடுகளுக்க பாகிஸ்தானில் எல்லை தாண்டி தாக்குதல் நடத்தியது குறித்து இந்திய அதிகாரிகள் விளக்கம் அளித்தாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆதரவைத் தெரிவித்துள்ளது.
இரண்டு பெண் இராணுவ அதிகாரிகள் கர்னல் சோபியா குவேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் பகிர்ந்து கொண்ட ஆபரேஷன் சிந்தூர் பற்றிய சுருக்கமான விளக்கம் உண்மையான நிகழ்வு மற்றும் பிரதமர் முடிவுகள் 140 கோடி இந்தியர்களை பெருமைப்படுத்தியுள்ளன.
இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் ரூவன் அசார் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியாவின் 'சுய பாதுகாப்பு உரிமையை' இஸ்ரேல் ஆதரிக்கிறது. அப்பாவிகளுக்கு எதிரான கொடூரமான குற்றங்களிலிருந்து ஒளிந்து கொள்ள இடமில்லை என்பதை தீவிரவாதிகள் அறிந்து கொள்ள வேண்டும்." எனக் கூறியுள்ளார். பாரத தேசம் காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு முதல் பதிலடி கொடுத்திருக்கின்றது,
OPERATION SINDOOR' இந்தியா மொத்தமாக, ஒன்பது தளங்கள் குறிவைக்கப்பட்டு ராணுவ நடவடிக்கைகள் கவனம் செலுத்தி, அளவிடப்பட்டு, இயற்கையில் தீவிரப்படுத்தப்படவில்லை. எந்த பாகிஸ்தான் இராணுவ இலக்குகளும் குறிவைக்கப்படவில்லை. இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதிலும் செயல்படுத்தும் முறையிலும் இந்தியா கணிசமான நிதானத்தைக் காட்டியுள்ளது. காஷ்மீரில் 25 இந்தியர்களும் ஒரு நேபாளக் குடிமகனும் கொல்லப்பட்ட காட்டுமிராண்டித்தனமான பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் பொறுப்பேற்கப்படுவார்கள் என்ற உறுதிமொழியை தாங்கள் நிறைவேற்றுகிறோம். என இராணுவம் தெரிவித்த 'OPERATION SINDOOR' சிறப்பு முடாசர்- லஸ்கர் இ தொய்பா உ யர்மட்ட தலைவர்
ஆப்பரேசன் சிந்தூர் தாக்குதலில் பாகிஸ்தானில் முரிட்கேயில் உள்ள லஸ்கர் இ தொய்பா த லைமை அலுவலகத்தின் மீது நடைபெற்ற தாக்குதலில் லஸ் கர் இ தொய்பா அமைப்பின் உ யர்மட்ட தலைவர் முடாசர் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆக்கிரம்பிப்புக் காஷ்மீரின் முக்கிய நகரான முசாராபாத் நகரிலும் அதன் அன்மை கார்ட்லி இடத்திலும் தாக்குதல் நடத்தியிருக்கின்றது, இவை லஷ்கர் இ தொய்பா எனும் தீவிரவாத இயக்க முகாம்கள் , எட்டு தாக்கபட்டது
இன்னும் ஒரு தாக்குதல் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் பகவால்பூர் ஜெய்ஸ் இ முகமது இயக்க முகாம் மேல் நடந்திருக்கின்றது, இது மதரசா எனும் மதக் கல்லூரியாக இருக்கலாம்
இந்த நடவடிக்கை பற்றி இந்திய ராணுவம் பெரிதாக எதையும் அறிவிக்கவில்லை , தீவிரவாத தாக்குதலுக்கான நியாயம் பெறபட்டது என்பதோடு முடித்து கொண்டது
இந்த நடவடிக்கைக்கு இந்திய ராணுவம் வைத்த பெயர் "ஆப்பரேஷன் சிந்தூர்", சிந்தூர் என்றால் செந்தூரம் அல்லது குங்குமம்
காஷ்மீர் பகல்ஹாம் தாக்குதலில் ஹிந்துப் பெண்களின் குங்குமம் அழிக்கபட்டது, அதாவது சுற்றுலாபயணிகளில் ஹிந்துக்களைத் தேடிப்பிடித்து ஹிந்து ஆண்களை கொடூரமாக அந்தத் தீவிரவாதிகள் கொன்றதில் முதலில் பாதிக்கபட்டது ஹிந்து மனைவியர், அவர்கள் இழந்தது குங்குமத்தை
அந்த கொடூரத்துக்கு பதிலடியாக "சிந்தூர்" என அதாவது "குங்குமம்" என பெயரிட்டு அதே பாணியில் திருப்பி அடித்திருக்க்கின்றது இந்தியா
இது இந்தியாவின் பதில் தாக்குதல், ஹிந்து பாரம்பரிய மண் அதன் பெண்கள் இழந்த குங்குமத்துக்கு நீதி வழங்கியிருக்கின்றது என உலகுக்கு சொல்லியிருக்கின்றது பாரத தேசம்
இந்தத் தாக்குதல் பாகிஸ்தானுக்குள் புகுந்து நடத்தபட்டதா இல்லை இந்திய வான் எல்லையில் நின்றபடி இந்திய விமானங்கள் தாக்கியதா என்பது பற்றி தகவலில்லை
பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை உறுதி செய்திருகின்றது, ஆனால் தாக்குதல் நடந்த வகை இழப்புகள் பற்றிப் பேசவில்லை
இந்திய தரப்பில் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் தாக்கபடவில்லை என்றும், தீவிரவாத முகாம்களை மிக கவனமாக ஆராய்ந்து நிதானமாக தாக்குதல் நடத்தபட்டது என்றும் தெரிவிக்கபட்டிருக்கின்றது
இந்த "நிதானம்" எனும் வார்த்தை ராணுவ பரிபாஷையில் முக்கியமானது அதாவது மிகப்பெரிய தலை ஒன்றை தூக்கியிருக்கின்றார்கள் அதன் விவரம் இனிதான் வெளிவரும்
மிகச் சரியான முழக்கத்துடன் சரியான வார்த்தை முழக்கத்துடன் இந்திய ராணுவம் செய்திருக்கின்றது. ஆபரேஷன் சித்தூர் மூலம் பாகிஸ்தானில் 3 தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்கி இருந்த 9 இடங்களில் இந்திய ராணுவம் தாக்குதல்
ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் 4 முகாம்கள், மற்றும்
லஷ்கர்-இ-தொய்பாவின் 3 முகாம்கள் அழிப்பு
ஹிஸ்புல் முஜாகிதினின் 2 முகாம்கள் மீதும் தாக்குதல் நடத்தி இந்திய வீரர்கள் அதிரடித் தாக்குதல்.
தீவிரவாதிகளின் 9 இலக்குகள் தாக்கப்பட்டன
1.பஹவல்பூர் - உள்ளே 100 கி.மீ.
2.முரிட்கே - உள்ளே 30 கி.மீ.
3.குல்பூர் - உள்ளே 35 கி.மீ.
4.சவாய் முகாம் - உள்ளே 30 கி.மீ.
5.பிலால் முகாம் - தூரம் குறிப்பிடப்படவில்லை
6.கோட்லி முகாம் - உள்ளே 15 கி.மீ.
7.பர்னாலா முகாம் - உள்ளே 10 கி.மீ.
8.சர்ஜால் முகாம் - உள்ளே 8 கி.மீ.
9.மெஹ்மூனா முகாம் - உள்ளே 15 கி.மீ. ஆகும்
இந்தத் தாக்குதலை அடுத்து முப்படைகளும் தயார் நிலையில் இருக்கின்றன, சுமார் இரண்டு வார காலம் விழித்திருக்கும் அப்படைகள் எல்லா சூழலுக்கும் தயாராக நிற்கின்றன
ஹிந்துபெண்களின் குங்கும இழப்புக்கு இந்திய தேசம் பழி தீர்த்திருக்கின்றது, "குங்குமம்" என்றே தீர்த்திருக்கின்றது
இதைத்தான் இந்திய தாயின் ருத்திர கோலமாக மஹாகவி பாரதியார்
"வேதங்கள் பாடுவள் காணீர் - உண்மை. வேல்கையிற் பற்றிக் குதிப்பாள். ஓதருஞ் சாத்திரம் கோடி - உணர்ந்தோதி யுலகெங்கும் விதைப்பாள் பாரதப் போரெனில் எளிதோ? - விறற்பார்த்தன்கை வில்லிடை ஒளிர்வாள் மாரதர் கோடிவந் தாலும் - கணம். மாய்த்துக் குருதியில் திளைப்பாள். பேயவள் காண் எங்கள் அன்னை - பெரும். பித்துடையாள் எங்கள் அன்னை". என எழுச்சியுடன் பாடியுள்ளார்.
கருத்துகள்