முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் முப்படைத் தாக்குதலில் 80 பாக் தீவிரவாதிகள் மற்றும் முகாம்கள் அழிப்பு.

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் முப்படைத் தாக்குதலில் 80 பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் முகாம்கள் அழிப்பு.             



 புல்வாமா பழிக்கு நடவடிக்கை இந்தியாவின் OPERATION SINDOOR பாகிஸ்தானின் பகாவல்பூரில் ஜெய்ஷ் தலைமையகம் மர்கஸ் சுப்ஹான் து jeM மீது இந்தியா துல்லியமான தாக்குதல் நடத்தியது.

புல்வாமா தாக்குதலுக்குப் பின்னாலிருந்த தீவிரவாதிகள் இம் முகாமில் பயிற்சி பெற்றவர்கள் 80 பேர் பலியானதாகத் தகவல் 



இந்திய விமானப்படை ரஃபேல் விமானங்களில் SCALP, ஹாம்மர் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்கியது. பாகிஸ்தான் மீது வீசப்பட்ட 1300 கிலோ ஏவுகணை இந்தியாவின் ரஃபேல் போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தானுக்குள் வீசப்பட்ட SCALP  என்கிற ஏவுகணை.





இது இந்தியாவின் வரலாற்றிலேயே முக்கியமான துல்லிய விமானப்படைத் தாக்குதல் எனப்படுகிறது.





மசூத் அஜார் தலைமையிலான ஜெய்ஷ் இயக்கத்தின் பலர் இந்த தாக்குதலில் அழிக்கப்பட்டனர்.பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் இன்று இலக்குகளைக் குறிவைத்து ராணுவத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என இந்தியா அறிவித்துள்ளது.பாகிஸ்தான் ராணுவத் தளங்களின் மீது இலக்கு வைக்கப்படவில்லை எனவும் மிகவும் கவனத்துடன் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இந்தியா தெரிவித்துள்ளதுஆனால் பாகிஸ்தான் அதை மறுத்துள்ளது. மேலும், இரு குழந்தைகள் உள்பட குறைந்தது 8 பேர் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது இஷாக் தார் கூறியுள்ளார். மேலும், இந்தத் தாக்குதலில் 35 பேர் காயமடைந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அகமதுபூர் கிழக்கு நகரில் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அதேநேரம், "ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் மேற்கொண்ட பதில் தாக்குதலில் மூன்று இந்தியப் பொது மக்கள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.இந்திய ராணுவம் பதிவிட்ட ஒரு ட்வீட்டில், "ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச்-ராஜௌரி பகுதியில் உள்ள பீம்பர் காலியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக" தெரிவித்துள்ளது.



மேலும் அதில், இந்திய ராணுவம் சரியான முறையில் பதிலடி கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.         .


பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கிறது. இதனிடையே ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து இந்திய மூத்த அதிகாரிகள் பல நாடுகளில் உள்ள வெளியுறவுத்துறை அதிகாரிகளுககு விளக்கம் அளித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ரஷ்யா உள்பட பல்வேறு நாடுகளுக்க பாகிஸ்தானில் எல்லை தாண்டி தாக்குதல் நடத்தியது குறித்து இந்திய அதிகாரிகள் விளக்கம் அளித்தாக தகவல்கள் வெளியாகி உள்ளது.        பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆதரவைத் தெரிவித்துள்ளது.


இரண்டு பெண் இராணுவ அதிகாரிகள் கர்னல் சோபியா குவேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் பகிர்ந்து கொண்ட ஆபரேஷன் சிந்தூர் பற்றிய சுருக்கமான விளக்கம் உண்மையான நிகழ்வு மற்றும்  பிரதமர் முடிவுகள் 140 கோடி இந்தியர்களை பெருமைப்படுத்தியுள்ளன.

இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் ரூவன் அசார் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியாவின் 'சுய பாதுகாப்பு உரிமையை' இஸ்ரேல் ஆதரிக்கிறது. அப்பாவிகளுக்கு எதிரான கொடூரமான குற்றங்களிலிருந்து ஒளிந்து கொள்ள இடமில்லை என்பதை தீவிரவாதிகள் அறிந்து கொள்ள வேண்டும்." எனக் கூறியுள்ளார்.   பாரத தேசம் காஷ்மீர்  தீவிரவாத தாக்குதலுக்கு முதல் பதிலடி கொடுத்திருக்கின்றது,


OPERATION SINDOOR' இந்தியா மொத்தமாக, ஒன்பது  தளங்கள் குறிவைக்கப்பட்டு ராணுவ நடவடிக்கைகள் கவனம் செலுத்தி, அளவிடப்பட்டு, இயற்கையில் தீவிரப்படுத்தப்படவில்லை. எந்த பாகிஸ்தான் இராணுவ இலக்குகளும் குறிவைக்கப்படவில்லை. இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதிலும் செயல்படுத்தும் முறையிலும் இந்தியா கணிசமான நிதானத்தைக் காட்டியுள்ளது.        காஷ்மீரில் 25 இந்தியர்களும் ஒரு நேபாளக் குடிமகனும் கொல்லப்பட்ட காட்டுமிராண்டித்தனமான பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து  இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் பொறுப்பேற்கப்படுவார்கள் என்ற உறுதிமொழியை தாங்கள் நிறைவேற்றுகிறோம். என இராணுவம் தெரிவித்த  'OPERATION SINDOOR' சிறப்பு முடாசர்- லஸ்கர் இ தொய்பா உ யர்மட்ட தலைவர்



ஆப்பரேசன் சிந்தூர் தாக்குதலில் பாகிஸ்தானில் முரிட்கேயில்  உள்ள லஸ்கர் இ தொய்பா த லைமை அலுவலகத்தின் மீது நடைபெற்ற தாக்குதலில் லஸ் கர் இ தொய்பா அமைப்பின் உ யர்மட்ட தலைவர் முடாசர் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆக்கிரம்பிப்புக் காஷ்மீரின் முக்கிய நகரான முசாராபாத் நகரிலும் அதன் அன்மை கார்ட்லி இடத்திலும் தாக்குதல் நடத்தியிருக்கின்றது, இவை லஷ்கர் இ தொய்பா எனும் தீவிரவாத இயக்க முகாம்கள் , எட்டு தாக்கபட்டது 

இன்னும் ஒரு தாக்குதல் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் பகவால்பூர் ஜெய்ஸ் இ முகமது  இயக்க முகாம் மேல் நடந்திருக்கின்றது, இது மதரசா எனும் மதக் கல்லூரியாக இருக்கலாம்




இந்த நடவடிக்கை பற்றி இந்திய ராணுவம் பெரிதாக எதையும் அறிவிக்கவில்லை , தீவிரவாத தாக்குதலுக்கான நியாயம் பெறபட்டது என்பதோடு முடித்து கொண்டது

இந்த நடவடிக்கைக்கு இந்திய ராணுவம் வைத்த பெயர் "ஆப்பரேஷன் சிந்தூர்", சிந்தூர் என்றால் செந்தூரம் அல்லது  குங்குமம்

காஷ்மீர் பகல்ஹாம் தாக்குதலில் ஹிந்துப் பெண்களின் குங்குமம் அழிக்கபட்டது, அதாவது சுற்றுலாபயணிகளில் ஹிந்துக்களைத் தேடிப்பிடித்து ஹிந்து ஆண்களை கொடூரமாக அந்தத் தீவிரவாதிகள் கொன்றதில் முதலில் பாதிக்கபட்டது ஹிந்து மனைவியர், அவர்கள் இழந்தது குங்குமத்தை



அந்த கொடூரத்துக்கு பதிலடியாக "சிந்தூர்" என அதாவது "குங்குமம்" என பெயரிட்டு அதே பாணியில் திருப்பி அடித்திருக்க்கின்றது இந்தியா

இது இந்தியாவின் பதில் தாக்குதல், ஹிந்து பாரம்பரிய மண் அதன் பெண்கள் இழந்த குங்குமத்துக்கு நீதி வழங்கியிருக்கின்றது என உலகுக்கு சொல்லியிருக்கின்றது பாரத தேசம்

இந்தத் தாக்குதல் பாகிஸ்தானுக்குள் புகுந்து நடத்தபட்டதா இல்லை இந்திய வான் எல்லையில் நின்றபடி இந்திய விமானங்கள் தாக்கியதா என்பது பற்றி  தகவலில்லை

பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை உறுதி செய்திருகின்றது, ஆனால் தாக்குதல் நடந்த வகை இழப்புகள் பற்றிப் பேசவில்லை 


இந்திய தரப்பில் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் தாக்கபடவில்லை என்றும், தீவிரவாத முகாம்களை மிக கவனமாக ஆராய்ந்து நிதானமாக தாக்குதல் நடத்தபட்டது என்றும் தெரிவிக்கபட்டிருக்கின்றது

இந்த "நிதானம்" எனும் வார்த்தை ராணுவ பரிபாஷையில் முக்கியமானது அதாவது மிகப்பெரிய தலை ஒன்றை தூக்கியிருக்கின்றார்கள் அதன் விவரம் இனிதான் வெளிவரும்

மிகச் சரியான முழக்கத்துடன் சரியான வார்த்தை முழக்கத்துடன் இந்திய ராணுவம் செய்திருக்கின்றது.  ஆபரேஷன் சித்தூர் மூலம் பாகிஸ்தானில் 3 தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்கி இருந்த 9 இடங்களில் இந்திய ராணுவம் தாக்குதல்

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் 4 முகாம்கள், மற்றும் 

லஷ்கர்-இ-தொய்பாவின் 3 முகாம்கள் அழிப்பு

ஹிஸ்புல் முஜாகிதினின் 2 முகாம்கள் மீதும் தாக்குதல் நடத்தி இந்திய வீரர்கள் அதிரடித் தாக்குதல்.

தீவிரவாதிகளின் 9 இலக்குகள் தாக்கப்பட்டன

1.பஹவல்பூர் - உள்ளே 100 கி.மீ.

2.முரிட்கே - உள்ளே 30 கி.மீ.

3.குல்பூர் - உள்ளே 35 கி.மீ.

4.சவாய் முகாம் - உள்ளே 30 கி.மீ.

5.பிலால் முகாம் - தூரம் குறிப்பிடப்படவில்லை

6.கோட்லி முகாம் - உள்ளே 15 கி.மீ.

7.பர்னாலா முகாம் - உள்ளே 10 கி.மீ.

8.சர்ஜால் முகாம் - உள்ளே 8 கி.மீ.

9.மெஹ்மூனா முகாம் - உள்ளே 15 கி.மீ. ஆகும்

இந்தத் தாக்குதலை அடுத்து முப்படைகளும் தயார் நிலையில் இருக்கின்றன, சுமார் இரண்டு வார காலம் விழித்திருக்கும் அப்படைகள் எல்லா சூழலுக்கும் தயாராக நிற்கின்றன‌

ஹிந்துபெண்களின் குங்கும இழப்புக்கு இந்திய தேசம் பழி தீர்த்திருக்கின்றது, "குங்குமம்" என்றே தீர்த்திருக்கின்றது

இதைத்தான் இந்திய தாயின் ருத்திர கோலமாக  மஹாகவி பாரதியார் 

"வேதங்கள் பாடுவள் காணீர் - உண்மை.    வேல்கையிற் பற்றிக் குதிப்பாள்.   ஓதருஞ் சாத்திரம் கோடி - உணர்ந்தோதி யுலகெங்கும் விதைப்பாள்      பாரதப் போரெனில் எளிதோ? - விறற்பார்த்தன்கை வில்லிடை ஒளிர்வாள் மாரதர் கோடிவந் தாலும் - கணம். மாய்த்துக் குருதியில் திளைப்பாள்.  பேயவள் காண் எங்கள் அன்னை - பெரும். பித்துடையாள் எங்கள் அன்னை". என எழுச்சியுடன் பாடியுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...