ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஆந்திரப் பிரதேச த்தைச் சேர்ந்த இராணுவ ஜவான் முரளி நாயக் வீரமரணமடைந்தார்.
அவரது வீரமரணத்திற்கு ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஆளுநர் அப்துல் நசீர் முதல்வர் சந்திரபாபு நாயுடு துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், நாட்டிற்காக தனது இன்னுயிரை இழந்த ராணுவ வீரர் முரளி நாயக்கிற்கு தேசம் அஞ்சலி செலுத்துவதாக
ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.ஆந்திரப் பிரதேசத்தின் சத்ய சாய் மாவட்டத்தின் கோரண்ட்லா மாவட்டத்தில் உள்ள கல்லிதண்டாவைச் சேர்ந்த முரளி நாயக், இந்திய ராணுவத்தில் பணியாற்றுகிறார். மிகுந்த முயற்சியுடன் ராணுவத்தில் சேர்ந்தவர், தேசப் பாதுகாப்பில் எப்போதும் முன்னணியில் இருந்தார். பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் தற்போது வீர மரணமடைந்தார்!
.
அவரது துணிச்சலைப் பாராட்டி, ராணுவ உயர் அதிகாரிகள் அவருக்கு முக்கியமான ஜம்மு காஷ்மீரில் பணி நியமனம் வழங்கினர். அங்கு தனது கடமைகளைச் செய்யும் போது பாகிஸ்தான் கும்பலை துணிச்சலுடன் எதிர்கொண்ட முரளி நாயக்கிற்கு துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்து போர்க்களத்தில் வீர மரணம் அடைந்தார்.
முரளி நாயக்கின் மரணம் குறித்து குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முரளியின் உடல் இன்று சனிக்கிழமை (மே மாதம் 10 ஆம் தேதி) அவரது சொந்த ஊரான கல்லிதண்டாவை அடையும். அவரது இறுதிச் சடங்கில் அரசியல்வாதிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்