செங்கோட்டை மட்டும் போதுமா? இந்த பதேபூர் சிக்ரியெல்லாம் வேண்டாமா?
வழக்கு தொடுத்த பெண்ணிடம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கேள்வி.
டில்லியில், முகலாயர்கள் ஆட்சிக் காலத்தில், 17 ஆம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட செங்கோட்டை சுமார் 254 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. எல்லாப் பக்கங்களிலும் உயரமான சுவர்களால் செங்கோட்டை சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்ட பதிவுடன் சூழப்பட்டது. இந்தக் கோட்டைக்கு பல நுழைவாயில்கள் உள்ளன. தற்போது இந்தக் கோட்டையின் பெரும்பகுதி இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில்,
கடைசி முகலாயப் பேரசர் பகதுார் ஷா ஜாபரின் வாரிசு எனக் கூறி சுல்தானா பேகம் என்ற பெண், 'டில்லி செங்கோட்டை எனக்குத்தான் சொந்தம்' என்று கோரி வழக்கைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை இன்று மே மாதம் 5 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா விசாரித்தார்.
அப்போது அவர், ''ஏன், செங்கோட்டை மட்டும் போதுமா,? இல்லை இந்த பதேபூர் சிக்ரி எல்லாம் வேண்டாமா,? அவற்றை எல்லாம் ஏன் விட்டு விட்டீர்கள்? '' என அடுத்தடுத்துக் கேள்வி எழுப்பினார். பின்னர், தவறான எண்ணத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு என்று கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.சுல்தானா பேகம் (வயது 60), கடைசி முகலாயப் பேரரசர் பகதூர் ஷா ஜாபரின் கொள்ளுப் பேத்தி என்று கூறிவரும் இவர் மேற்கு வங்காள மாநிலத்தின் கொல்கத்தா புறநகரில் உள்ள ஹவுராவில் சிறிய இரண்டு அறைகள் கொண்ட குடிசையில் வசிக்கிறார்.
மன்னர் பகதூர் ஷா ஜாபர் 1837 ஆம் ஆண்டில் அரியணை ஏறினார். வலிமைமிக்க முகலாயப் பேரரசு ஆழ்ந்த வீழ்ச்சியையும் இறுதி முடிவையும் நோக்கிச் சென்ற நேரமது. 1857 ஆம் ஆண்டு இந்தியக் கலகத்தின் தலைவராக ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனியின் சார்பில் ஜாபர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் நசுக்கப்பட்ட எழுச்சியின் முகமாக அவர் இருந்தார், மேலும் அவர் மியான்மார் நாட்டின் ரங்கூனுக்கு நாடுகடத்தப்பட்டார், இப்போது மியான்மரில் உள்ள யாங்கோன். அங்கு அவர் 1862 ஆம் ஆண்டில் இறந்தார். இது முன் வரலாறு
இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட மனுவை டில்லி உயர்நீதிமன்ற பெஞ்ச் கடந்தாண்டு டிஸ்மிஸ் செய்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்