ஊழலுக்கு எதிராக வலுவான லோக் ஆயுக்தா சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம்
ஊழலுக்கு எதிராக வலுவான லோக் ஆயுக்தா சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படி திருச்சிராப்பள்ளியில் அனுமதி பெற்ற உண்ணாவிரத அறப் போராட்டம்.
மனுதார் குருநாதன் புதிதாக வழங்கும் கோரிக்கை குறித்து திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை காவல்நிலையத்தில் உரிய வழிகாட்டுதலுடன் அனுமதி வழங்க வேண்டுமென மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு வழங்கிய நிலையில்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் வட்டம், பகளவாடி கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் குருநாதன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில்,தாக்கல் செய்த மனுவில்
ஊழலுக்கு எதிரான வலுவான லோக் ஆயுக்தா சட்டம் இந்தியாவில் மற்ற மாநிலங்களில் உள்ளது போல் தமிழ்நாட்டிற்கு தேவை மற்றும் சேவை பெறுதல் உரிமை சட்டத்தை அமல்படுத்தக் கோரி
திருச்சிராப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையம், அண்ணா சிலை அருகில் உண்ணாவிரத அறப் போராட்டத்தை நடத்த அனுமதி வழங்கக் கோரி திருச்சிராப்பள்ளி மாநகரக் காவல் துறை அலுவலர்களிடம் மனு அளித்திருந்த நிலையில் ஆனால் அப்போது அனுமதி வழங்கவில்லை ஜனநாயக முறையில் நடத்த உள்ள போராட்டத்திற்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவினை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிறகு இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி தனபால், பிறப்பித்துள்ள உத்தரவில்.
"மனுதாரர் ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த அனுமதி கோரி வழக்கினைத் தாக்கல் செய்துள்ளார்.
ஆனால் ஏற்கனவே காலம் கடந்துவிட்டபடியால் மனுதாரர் திருச்சிராப்பள்ளி காவல்துறை ஆய்வாளரிடம், வேறு ஒரு நாளில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு அளிக்கவும், அதை
காவல்துறை ஆய்வாளர் பரிசீலித்து உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் பாதுகாப்பும் அனுமதியும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார். இந்த நிலையில் தற்போது உண்ணாவிரத அறப்போராட்டம் மே மாதம் உண்ணாவிரத போராட்டம்
நாள்: 25.05.2025 ஞாயிற்றுக்கிழமை, இடம் : அண்ணா சிலை,சத்திரம் பேருந்து நிலையம் அருகில், திருச்சிராப்பள்ளியில் நடைபெறுகிறது அதில் சமூக ஆர்வலர்கள் ஊழல் இலஞ்ச லாவண்ய எதிர்ப்பாளர்கள், தேச நலன் காக்கும் மக்கள் கலந்து கொள்ளுமாறு தமிழ்நாடு கிராம சபை மீட்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்கம் சார்பில் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்கள்.
கருத்துகள்