நீதித்துறையில் சிவில் நீதிபதிகளாகப் பணியாற்ற மூன்று வருடங்கள் பயிற்சி தேவை - உச்சநீதிமன்றத் தீர்ப்பு
நீதித்துறையில் சிவில் நீதிபதிகளாகப் பணியாற்ற குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பயிற்சி பெற்ற நிலையில் பணியாற்ற வேண்டும் என்ற
தீர்ப்பு ஏற்கனவே தொடங்கி தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் நீதித்துறை பணியமர்த்தலுக்குப் பொருந்தாது.
அடுத்த முறை துவங்கப்படும் நியமன நடைமுறையிலிருந்து இந்தத் தீர்ப்பு பொருந்தும்.
சிவில் நீதிபதிகள் தேர்வு எழுதும் எந்தவொரு விண்ணப்பதாரரும் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்
என்பதை உறுதி செய்ய அனைத்து மாநில அரசுகளும் சட்ட விதிகளைத் திருத்தம் செய்ய வேண்டும். மூன்றாண்டுகள் பயிற்சி பெற்றிருப்பதை, 10 ஆண்டுகள் வழக்கறிஞர் பணியிலுள்ள ஒரு வழக்கறிஞரால் சான்றளிக்கப்பட்டு, அது அங்கீகரிக்கப்பட வேண்டும்.
நீதிபதிகளுக்கு சட்ட எழுத்தராக இருந்த அனுபவமும் கணக்கிடப்படும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர் வழக்கறிஞர் பணி அனுபவம் இல்லாத புதிய சட்டப் பட்டதாரிகளை நீதித்துறை பணியில் நியமிக்கும்
போது பல்விதமான சிக்கல்கள் எழுகின்றன. எனவே நீதித்துறையில் பணிக்குச் சேர விண்ணப்பிக்கும் ஒருவர் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றி இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தவிட்டது.
கருத்துகள்