வாக்குகள் எண்ணிக்கை தான் ஆட்சி அதிகாரத்தைத் தீர்மானிக்கும்.
பாட்டாளி மக்கள் கட்சியும் தேசிய முற்போக்கு திராவிடர் கழகமும் கூட்டணி சேர்வது அதிமுக வா? அல்லது திமுக வா? என்ற ஊசலாட்டதில் இருக்கையில்
பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரக் கரம் நீள்கிறது என கவனம் பெறுகிறது பட்டயக்கணக்கர் குருமூர்த்தி யின் வார்த்தையை நன்கு கவனியுங்கள். தந்தை மருத்துவர் ச. ராமதாஸ் -மகன் மருத்துவர் அன்புமணி ராமதாஸுடன் சந்திப்பு என்பது தனிப்பட்ட நடவடிக்கை அது இன்று நடந்தது. பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸை சந்திக்க மருத்துவர் அன்புமணி தைலாபுரம் தோட்ட வீட்டுக்குச் சென்றிருந்தார். சுமார் 45 நிமிடங்களுக்கு பின், மருத்துவர் அன்புமணி வெளியே வந்தார். தைலாபுரம் தோட்டத்திற்கு பட்டயக் கணக்கர் குருமூர்த்தியும், அதிமுகவின் முன்னாள் சென்னை மேயர் சைதை சா.துரைசாமியும் மருத்துவர் ச.ராமதாஸை சந்தித்தனர். இந்தச் சந்திப்பு கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் நீண்டது. பட்டயக் கணக்கர் மற்றும் ஆர் எஸ் எஸ் பிரமுகர் குருமூர்த்தியிடம் மருத்துவர் அன்புமணியின் வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அவர், 'எனக்கு அன்புமணி இங்கே வந்ததே தெரியாது. பாரதிய ஜனதா கட்சிக்காக நான் இங்கு வரவில்லை. மருத்துவர் ச.ராமதாஸ் என்னுடைய நிண்ட நாள் நண்பர் அவரை சந்தித்துப் பேசவே இங்கு நான் வந்தேன். பிரச்னை இருக்கும் இடத்கிற்கு நான் செல்லவில்லை நான் இருக்கும் இடத்திற்கு தான் பிரச்னை தேடி வருகிறது" என்றார். அன்புமணி-ராமதாஸ் சந்திப்பு குறித்து ஆடிட்டர் குருமூர்த்தியிடம் கேட்கப்பட்டப்போது, `அன்புமணி இன்று இங்கே வந்தாராமே’ என்று சைதை துரைசாமியிடம் கேட்ட சம்பவமும் (இது தான் அந்த....கள் குசும்பு போலும்) நடந்தது. மருத்துவர் ச.ராமதாஸ் மற்றும் மருத்துவர் அன்புமணி இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பலர் இந்த சண்டை குறித்து பலவிதமான கருத்துக்கள் தெரிவித்த நிலையில், நேற்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் க.வேல் முருகனின் அண்ணன் திருமாவளவனை அழைத்து மருத்துவர் ச.ராமதாஸ் பேசிய நிலையில் பதறிப் போன மருத்துவர் அன்புமணி திருமாவளவன் படையாச்சியிடம் கதறிய தகவல் வரும் நிலையில். தமிழகத்தில் மெகா கூட்டணி உருவாக்கத் திட்டமிடும் பாஜக மருத்துவர் ச.ராமதாஸ் கூட்டணிக்கு எதிராக நின்றால் கூட்டணி தேறாது என மருத்துவர் அண்புமணியிடம் சொல்ல, தூதுவர்களாக ஆர் எஸ் எஸ் அமைப்பின் பட்டயக் கணக்கர் குருமூர்த்தி டீம் பேசி சமரசமாகியுள்ளது. மருத்துவர் அன்புமணி தலைவர், கூட்டணிப் பேச்சு,முடிவு மருத்துவர் ராமதாஸ் கையில்!முகுந்தனுக்கு மீண்டும் பதவி!
ஜி.கே.மணி தானாகவே வெளியே செல்ல வழி அல்லது ஒரங்கட்டப்படும் நிலையில் அறக்கட்டளையில் மருத்துவர் ச.ராமதாசுக்கு உயரிய முக்கியத்துவம்! என பேச்சுவார்த்தை முடிவாகியுள்ளதாகத் தகவல். இதில் நீண்ட காலமாக பணி செய்து வரும் நர்ஸ் சுசிலா, விவகாரமும் செட்டில் ஆகியுள்ளது.(ஜெயலலிதா விவகாரத்தில் வந்த ஒரு நர்ஸ் போல) மருத்துவர் சௌமியாவை மன்னிக்கக் கோரிக்கை வைக்கபட்டுள்ளது.எல்லாம் முடிந்த பின் பட்டயக் கணக்கர் குருமூர்த்தி மருத்துவர் ச. ராமதாஸை ஏன் சந்தித்தார்? அதில் தான் அரசியல் அடங்கியுள்ளன பெரிய அண்ணாச்சி கதை. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் அதிமுக பல கூறுகள் உடைந்தது இந்த குரு..... மூர்த்தி நடவடிக்கைகள் மூலம் தான் என்பது இங்கு அரசியல் விவாதம் ஆகிறது. எப்படியோ கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்தியான கமலா அம்மா மூலம் காஞ்சிபுரம் முக்கியமான நபர் ஆசி பெற்ற பிரதிநிதிகள் தான் இந்த பஞ்சாயத்துப் பிரபலங்கள்.
கருத்துகள்