தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக ஒரு பிரிவு விலகுவதாக அறிவிப்பு குறித்து பண்ருட்டி இராமச்சந்திரன் தகவல் கூட்டணியில் இருந்து விலகினார் ஓ.பன்னீர் செல்வம் தற்போதைக்கு கூட்டணியில்லை
தற்போதைக்கு கூட்டணி குறித்து எந்த முடிவுமில்லை; தமிழ்நாடு முழுவதும் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப் பயணம் செய்ய உள்ளார் என பண்ருட்டி ராமச்சந்திரன தகவல்
தேசிய ஜனநாயக கூட்டணியுடனான உறவை முறித்துக் கொள்கிறோம்
இனி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நாங்கள் இடம்பெற மாட்டோம்
இன்றைய சூழலில் எந்தக் கட்சியுடனும் நாங்கள் கூட்டணியில் இல்லை
சென்னையில் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு தகவல்
சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் 3 முக்கிய முடிவு எடுத்துள்ளோம்
அதாவது தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவது முதல் முடிவு
தொண்டர்களைச் சந்திக்க ஓ.பன்னீர் செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது அடுத்த முடிவு
தற்போதைய சூழலில் எந்தக் கூட்டணியிலும் நாங்கள் இல்லை என்பது மூன்றாவது முடிவு - இதில் ஒரு அரசியல் பார்வை ;-நேற்று ஒ.பன்னீர் செல்வத்துக்கு ஊடகங்கள் தந்த அதி முக்கியத்துவம் பலரது சிரிப்பை வரவழைத்தது.
அவர் நேற்று முக்கிய அரசியல் முடிவு எடுக்கப் போகிறார். என
மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவரைப் போலவும், இவர் எடுக்கும் முடிவால் தமிழ்நாடு அரசியலே தலைகீழாக மாறி விடும் என்பது போலவும் முக்கியத்துவம் தரப்பட்ட நிலையில்
முதலில் ஒ.பன்னீர் செல்வம் ஒரு அரசியல் ரீதியாக தலைவரே அல்ல.
சந்தர்ப்ப வசத்தால் சூழ்நிலையில் தான் மூன்று முறை முதல்வராகும் வாய்ப்புப் பெற்றார். தான் சார்ந்த ஜாதி பலமும் இல்லை இவர் திறமைசாலி என்பதாலோ, அறிவாளி என்பதாலோ, மக்கள் செல்வாக்குப் பெற்றவர் என்பதாலோ முதலமைச்சராக ஆக்கப்படவில்லை. அது டி.டி.வி.தினகரன் சிபாரிசு காரணமாக ஒரு டீக்கடை முதலாளி. தன் விசுவாசி என்பதால் நடந்த விபத்து. உண்மையில் இது போன்ற தகுதிகள் எதுவும் அவரிடம் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த நபர் வெறும் களிமண் என்பதாலேயே ஜெ.ஜெயலலிதாவால் இரு இக்கட்டான சூழல்களில் முதல்வராக்கப்பட்டார்.
மூன்றாவது முறை முதல்வராகும் வாய்ப்பு அவருக்கு பாஜக தந்த நெருக்கடியால் தரப்பட்டது. இவர் எப்போதும் எடுப்பார் கைபிள்ளை. தான் தற்போது இவரை பாஜக கையில் எடுத்துக் கொண்டது என சுதாரித்துக் கொண்டு தான் சசிகலா நடராஜன் அரசியல் அறிந்த எடப்பாடி கே.பழனிச்சாமியை முதலமைச்சராக்கி விட்டு சிறை சென்றார்.
தான் உருவாகிய இடத்திற்கே துரோகம் செய்து, தன்னுடைய நலத்திற்கு மட்டுமே ஒ.பன்னீர் செல்வம் முக்கியத்துவம் கொடுத்த காரணத்தால், அப்போதே அதிமுகவில் உள்ள முக்கியத்துவம் இழந்து விட்டார்.
மைலாப்பூர் ஆடிட்டர்
குருமூர்த்தி சொல்லைக் கேட்டு, முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா சமாதி முன்பு தர்மயுத்தம் என்ற பெயரில் போய் உட்கார்ந்த போதும், இவர் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்திற்கு நியாயம் கேட்ட போதும் பாஜக பின்புலத்தில் இருந்து மிகப் பெரிய மீடியா கவரேஜ் தரப்பட்டு, மக்கள் ஆதரவு அலைகடலென திரண்டது. தன்னை உருவாக்கிய சசிகலா நடராஜன் மீதே புழுதி வாறித் தூற்றி அவதூறு செய்ய வைத்த எடுப்பார் கைப்பிள்ளை இவர்
அப்போது சுதாரித்துக் கொண்டு இருந்தால் கூட, இவர் அதிமுகவின் அசைக்க முடியாத தலைவராக உருவெடுத்து இருப்பார்.
ஆனால், ஒரு கட்சியில் தலைவராக இருப்பதற்கு அயராத உழைப்பைத் தர வேண்டும். சுற்றிச் சுழன்று மாவட்டம் தோறும் பயணம் செய்ய வேண்டும். நிர்வாக ரீதியினான பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் ஆற்றல் கொண்டிருக்க வேண்டும், எல்லாவற்றுக்கும் மேல் சம்பாதித்த பணத்தை கட்சி வளர்ச்சிக்கு கொஞ்சமேனும் செலவழிக்க வேண்டும்..!
இவை எதற்குமே எப்போதும் தயாரில்லாதவர் தான் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம். எந்த முயற்சியும் இல்லாமல் மூன்று முறை முதல்வரானது போல, பதவிக்கு ஆசைப்பட்டாரே அன்றி, அதற்காக தன்னை தகுதிப்படுத்திக் கொண்டு பாடுபட கடுகளவும் முன்வரவில்லை. அதனால் தான் இவரை ஆதரித்து பின் சென்றவர்கள் அனைவரும் ஒரு கட்டத்தில் சுதாரித்து பின் வாங்கிவிட்டனர். இவர் இரட்டை இலை இல்லாமல் பலாப்பழம் சின்னம் வாங்கி தேர்தலில் நின்று தோற்ற போதே இவருக்கு அரசியல் அஸ்தமனம் ஆரம்ப நிலை இன்று போக்கிடம் இல்லாத சிலரே இவரைச் சூழ்ந்து கொண்டுள்ளனர்.
சொந்த மாவட்டத்திலேயே சுத்தமாக செல்வாக்கு இல்லாதவர் இவர் ஆனால் இவர் வசிக்கும் பகுதியில் ஒரு வார்டு கவுன்சிலராகக் கூட இவரது ஆதரவாளர் யாரும் வர முடியாது என்பதல்ல, டெபாசிட் கூட பெற முடியாது. அந்த அளவுக்கு தனது உச்சபட்ச சுயநலத்தால் சொந்த ஊரிலேயே அந்நியப்பட்டுக் கிடப்பவர்.
சேர்த்து வைத்துள்ள சொத்து கொஞ்சம் நஞ்சமல்ல. மிகுந்த சொகுசு வாழ்க்கைக்கு பழகிவிட்டார். இவர் ஒரு அரசியல் அனாதை என்பதால் தான் பாஜக இவரை பகடைக் காயாகப் பயன்படுத்தி தூர எறிந்துள்ளது. இவரை வைத்து தான் அதிமுகவுக்கு இன்று வரை இரட்டை இலை சின்னம் கிடைக்காமல், பாஜக கேம் விளையாடியது.
ஆனால், தற்போது இவர் பாஜக எதிர்ப்பு அரசியல் செய்வதை யாரும் நம்பப் போவதில்லை. எப்போது வேண்டுமானாலும் நிலை மாறக் கூடியவர்.
இன்று இவர் அரசியல் அனாதையாகப் போனதற்கு அவர் மட்டுமே காரணம். தூர தூக்கி எறிந்துவிட்டு, மறந்து போய்விட வேண்டிய மனிதரே இவர என அரசியல் ரீதியாக பலரும் பேசும் நிலையில்
நமத்துப் போன பட்டாஸான இவரை காட்டி, ஏதோ அரசியல் சரவெடி வெடிக்க உள்ளது என ஊடக நபர்கள் மீடியாக்கள் மக்களை முட்டாளாக்குவதிலும் அதிலும் ஒரு அரசியல் சூழ்ச்சி உள்ளது.
மக்களின் உண்மையான பிரச்சினைகளை பின் தள்ளி, இது போன்ற வெத்து வேட்டு நபர்களைப் பற்றிய பிம்மங்களை காலந்தோறும் கற்பித்து மக்களை மாயையிலேயே வைத்திருப்பது தான் அதிகார மையங்களின் அடியாளாக பழக்கப்பட்ட சில ஊடக அரசியலாகும்.
பாஜக உடைத்த அதிமுக என்று கண்ணாடியை அவர்கள் ஒட்ட முயற்சி செய்த நிலையில் உடைந்த கண்ணாடி ஒட்டவில்லை. என்பதே உண்மை.
அரசின் அரசியல் களம் டிடிவி தினகரனின் அமமுகவில், ஓபசெ- மற்றும் சசிகலா இல்லை.
ஜெயா டிவி ஜெயா பிளஸ்சைப் பொறுத்தவரை அங்கே ஓப செவும் இல்லை; டிடிவி தினகரனும் இல்லை. முன்னாள் முதல்வர்
செல்வி ஜெ. ஜெயலலிதா மறைவிற்கு பின்னால் திருமதி சசிகலாதான் அதிமுகவின் பொதுச்செயலாளர்.
ஊடகங்களுக்கான கடிதத் தொடர்பிலும், ஜெயா மற்றும் ஜெயா பிளஸ் தினசரி செய்திகளிலும் சசிகலாவே அதிமுகவின் பொதுச் செயலாளர்.
அதிமுக பொதுச்செயலாளர் நான்தான் என்று தினமும் அறிவிக்கும் சசிகலாவை எதிர்த்தோ மறுத்தோ யாரும் பேசாததால் அவரே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியோடு டிடிவி தினகரன் இணக்கமாக இருக்கிறார்.
ஓ.பசெ மற்றும் சசிகலாவும் எடப்பாடி கே பழனிச்சாமியோடு இணக்கமாக இல்லை.
ஓ.ப செ-சசிகலா நடராஜன் இணக்கத்தில் வெளிப்படைத் தன்மைஇல்லை - ஆகவே 'சற்றுமுன்' அப்டேட் தெரிய வில்லை.
ஓ ப செ டிடிவி தினகரன் ஒருவருக்கொருவர் எதிரிகள் இல்லை. இணக்கமாகத்தான் இருக்கிறார்களா என்பதும், வெளியில் தெரியாது.
அதிகாரப்பூர்வமான புதிய நண்பர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர்-தமிழ்நாடு.
ஓ ப செ வின். ஒரே எதிரி எடப்பாடி கே. பழனிச்சாமி முதலமைச்சரின் புதிய நண்பர்கள் பிரேமலதா விஜயகாந்த் ஓ.பன்னீர் செல்வம்
எதிர்பார்த்ததை விட 2025- ன் மையம் சிறப்பாகவே, தேர்தல் கலை கட்டுகிறது
கருத்துகள்