3 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள அறிவிப்பு 2021, 2022, 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிப்பு
பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி, பாலசரஸ்வதி ஆகியோர் பெயரில் வழங்கப்படும் அகில இந்திய விருதுகள் அறிவிப்பு
நடிகர் எஸ்.ஜே.சூர்யா, நடிகை சாய்பல்லவி, இயக்குநர் லிங்குசாமி ஆகியோருக்கு 2021-ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது
நடிகர் விக்ரம்பிரபு, பாடலாசிரியர் விவேகா ஆகியோருக்கு 2022-ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது
இசையமைப்பாளர் அனிருத், ஸ்வேதா மோகன் உள்ளிட்டோருக்கு 2023ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது
பாடகர் கே.ஜே.யேசுதாசுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதும் வழங்கப்படுகிறது
சென்னை கலைவாணர் அரங்கில் அடுத்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த வழங்குகிறார்இன்று தமிழ்நாடு அரசு சார்பில் 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டதில், திரைத்துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் இந்த உயர் விருதை பெற்றுள்ளனர்2021:ஆம ் ஆண்டு எஸ்.ஜே. சூர்யா (நடிகர்), சாய் பல்லவி (நடிகை), லிங்குசாமி (இயக்குநர்), சூப்பர் சுப்பராயன் (சண்டை பயிற்சியாளர்).
2022 ஆம் ஆண்டு: விக்ரம் பிரபு (நடிகர்), வி.சி. குகநாதன் (இயக்குநர்), விவேகா (பாடலாசிரியர்), டைமண்ட் பாபு (மக்கள் தொடர்பாளர்).
2023 ஆம் ஆண்டு : மணிகண்டன் (நடிகர்), ஜார்ஜ் மரியான் (நடிகர்), அனிருத் (இசையமைப்பாளர்), ஸ்வேதா மோகன் (பாடகி), சாண்டி (நடன அமைப்பாளர்), நிகில் முருகன் (மக்கள் தொடர்பாளர்).கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு, தமிழ்நாடு அரசு பல சலுகைகளை வழங்குகிறது. இந்த விருது, கலைஞர்களுக்கு சமூகத்தில் சிறப்பான இடத்தையும், கௌரவத்தையும் பெற்றுத் தருகிறது. விருது பெறும் ஒவ்வொரு கலைஞருக்கும், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூபாய்.1 லட்சம் நிதி வழங்கப்படுகிறது. மேலும் 3 கிராம் தங்கப்பதக்கமும் கலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள் பெறுவார்கள், தமிழ்நாடு அரசு பேருந்துகளில் வாழ்நாள் முழுவதும் கட்டணமின்றிப் பயணம் செய்யலாம். இதற்கான பிரத்யேக அடையாள அட்டையை அவர்கள் இயல், இசை, நாடக மன்றத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
விருது பெற்றவர்கள், தமிழ்நாடு அரசின் மற்ற நலத்திட்டங்களையும், சலுகைகளையும் எளிதாக பெறுவதற்கு இந்த விருது ஒரு தகுதியாகக் கருதப்படுகிறது. இந்த விருது, கலைஞர்களை மேலும் ஊக்கப்படுத்தி, அவர்கள் தங்கள் துறையில் புதிய உயரங்களை எட்டுவதற்கும், திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கும் ஒரு உந்துதலாக அமைகிறது. இந்த விருது, கலைஞர்களின் தன்னலமற்ற கலை பங்களிப்பை அங்கீகரிப்பதோடு, அவர்களின் பிற்கால வாழ்க்கைக்கும் ஒரு சமூக பாதுகாப்பை வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.







கருத்துகள்