ஹன்க் காஸ் எனும் 5 லிட்டர் தண்ணீரில் 6 மாதம் எரியும் அடுப்பு
உலகில் முதல்முறையாக தண்ணீரில் எரியும் அடுப்பினைக் கண்டுபிடித்திருக்கிறார்ஒரு விஞ்ஞானி இதன் சிறப்பம்சங்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
தண்ணீரில் உள்ள ஹைட்ரஜன் மூலக்கூறுகளைப் பயன்படுத்தி, நீரில் எரியும் அடுப்பினைக் கண்டுபிடித்துள்ள HONC நிறுவனத்தின் நிறுவனர், தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம் பேளூர் இராமலிங்கம் கார்த்தி
புதுப்பிக்கத்தக்க மாற்று எரிசக்தியாகச் சுத்தமான தண்ணீரைப் பயன்டுத்தி, இயற்கை வளங்களை அழிக்காமல், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல், விபத்துகள் ஏற்படா வண்ணம், பாமர மக்களும் பாதுகாப்பாகப் பயன்படுத்தும் வகையில், மிகக்குறைந்த மின் பயன்பாட்டுச் செலவில் உருவாக்கப்பட்டுள்ள நீர் அடுப்பினை, தம்முடைய 20 ஆண்டுகால ஹைட்ரஜன் குறித்த ஆராய்ச்சியின் விளைவாக இராமலிங்கம் கார்த்தி கண்டுபிடித்துச் சாதித்துள்ளார்.
தண்ணீரினை எரிபொருளாகக் கொண்ட சமையல் அடுப்பினைப் பயன்படுத்துவதன் மூலம், இனிவருங்காலங்களில் எரிபொருள் தேவைக்காக நிலம், நீர், காற்றினை மாசுபடுத்தும் நிலை வெகுவாகக் குறைந்துவிடும். அந்த வகையில் இந்திய அரசின் பேட்டன்ட் ரைட்ஸ் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் இந்த அரிய கண்டுபிடிப்பு செயற்பாட்டிற்கு வந்தால், அந்நிகழ்வு புதுப்பிக்கத்தக்க மாற்று எரிசக்தித்துறையில் மிகப்பெரிய புரட்சியாகவும், அறிவியல் வளர்ச்சியில் மாபெரும் சாதனையாகவும் திகழும்!ஒரு லிட்டர் குடிநீரில், 1,225 லிட்டர் ஹைட்ரஜன் எடுக்கலாம். இந்த ஹைட்ரஜனை கைராய்டு எலட்ரோலைட் மெம்ப்ரைன் இயந்திரங்கள் மூலம் பிரித்தெடுத்து, அதை சமையல் மற்றும் தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தலாம். ஒரு லிட்டர் தண்ணீரில் இருந்து பெறப்படும் வாயு, ஒரு குடும்பத்திற்கு ஒரு மாத காலம் சமையலுக்கு பயன்படுத்தலாம். இதுகுறித்து செய்தியாளர்களிடம் விஞ்ஞானி பேளூர் ராமலிங்கம் கார்த்திக் தெரிவித்த தகவல், "இயற்கையான முறையில், கார்பன் இல்லாத நிலையில் தண்ணீரைக் கொண்டு, அதிலிருந்து கிரீன் ஹைட்ரஜன் மூலம் நெருப்பை உருவாக்கி இதைத் தயாரித்துள்ளேன். சுமார் 20 ஆண்டுகள் ஆராய்ச்சியின் விளைவாக இது சாத்தியப்பட்டுள்ளது. கார்பன் இல்லாத எரிபொருளாகவும், மிகவும் பாதுகாப்பானதாகவும் இது உள்ளது.
தண்ணீரில் இருந்து எடுக்கப்படும் ஹைட்ரஜன் எரிவாயுவை சமையல் மற்றும் தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தும் முறையை விஞ்ஞானி பேளூர் ராமலிங்கம் கார்த்திக்கின் கண்டுபிடிப்பாகும் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வஞ்சிபாளையம் முருகம்பாளையத்தில் ஹன்க் நிறுவனம் செயல்படுவதின் நிறுவனர் மற்றும் முதன்மை விஞ்ஞானி பேளூர் ராமலிங்கம் கார்த்திக், தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் எரிவாயுவை பிரித்தெடுத்து, சமையல் மற்றும் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை
‘ஹன்க் காஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய கண்டுபிடிப்பு அறிமுக நிகழ்ச்சி, அவிநாசி அருகே நேற்று நடந்தது. முதன்மை விஞ்ஞானி பேளூர் ராமலிங்கம் கார்த்திக் செயல்முறை விளக்கமளித்தார். இதில் நடிகரும், ஹன்க்காஸ் நிறுவனத்தின் முதன்மை இயக்குநருமான சரத்குமார், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர். நாகராஜன் ஆகியோர் பங்கேற்று, புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தினர்.இந்த கண்டுபிடிப்பு அங்கீகரிக்கப்பட்டால், பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். முன்னொரு காலத்தில் ரயில், விமானம் போன்ற புதிய கண்டுபிடிப்புகளை மக்கள் சந்தேகத்தோடு பார்த்தாலும், பின்னர் ஏற்றுக்கொண்டனர். அதேபோல, இந்த எரிபொருள் மாற்றமும் ஆரம்பத்தில் கேள்விகளை எழுப்பினாலும், விரைவில் மக்கள் புரிந்து ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார். சந்தை படுத்த முற்பட வேண்டும்
இராமர்பிள்ளை பெட்ரோல் மாதிரி காலம் கடத்தி இழுத்து மூடிடக் கூடாது என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. தமிழ் நாட்டு பிரமுகரின் கண்டுபிடிப்பு






கருத்துகள்