அரசு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக மாணவமாணவிகள் தப்பினர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் வட்டம் சிங்களாந்தபுரம் அரசு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.
மாணவர்கள் இல்லாத நேரத்தில் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக குழந்தைகள் யாரும் காயமின்றித் தப்பினர்.திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் வட்டம் சிங்களாந்தபுரத்தில் அரசு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 34 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இரண்டு வகுப்பறை பள்ளியாக இப்பள்ளி இயங்குகிறது. இந்தப் பள்ளிக்கு இரண்டு வகுப்பறைகள் உள்ள புதிய கட்டிடம் கட்டப்பட்டு ஒன்பது மாதங்களே ஆகிறது இந்த நிலையில் பள்ளித் தலைமை ஆசிரியர் இன்று காலையில் வகுப்பறைக் கட்டிடத்தை திறப்பதற்காக வந்து பார்த்த போது மேற்கூரை காங்கிரீட் கட்டிடப்பகுதி இடிந்து விழுந்து மாணவிகள் அமரும் நாற்காலியில் சிமெண்ட்காங்கிரீட் கொட்டிக் கிடந்தன. வகுப்பறையிலிருந்த எல்இடி டிவி மீதும் மேற்கூரை இடிந்து விழுந்ததுடன் சிமெண்ட் பூச்சும் விழுந்து கிடந்தது. வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்து தலைமையாசிரியர் பூட்டிச் சென்ற நிலையில் சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முடிந்து இன்று காலை பள்ளியைத் திறக்கும் போது தான், மேற்கூரை இடிந்து விழுந்தது தெரியவந்தது.
பள்ளி வகுப்பறையில் குழந்தைகள்படிக்கும் போது இந்தச்சம்பவம் நிகழ்ந்திருந்தால் குழந்தைகள் படுகாயமடைந்திருப்பார்கள். நல்வாய்ப்பாக விடுமுறை தினத்தில் இந்த அசம்பாவிதம் நடந்ததால் குழந்தைகள் காயமின்றி உயிர் தப்பினர். இந்தப் பள்ளி கட்டிடம் திறக்கப்பட்டு 9 மாதங்களே ஆன நிலையில் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டிடம் கட்டிய காண்ட்ராக்ட்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் கடமை மற்றும் அந்தக் கட்டிடம்
புதிதாக கட்டித் திறக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடத்தின் மேற்கூரை, வெறும் 9 மாதங்களிலேயே சேதமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகள் உயிருடன் விளையாடாமல், பள்ளி கட்டிட தரத்தில் சமரசம் செய்துகொள்ளாமல் தரமானதாக கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஒரு முக்கியப் பிரமுகர் கூறும்போது 35 சதவீதம் கமிஷன் கொடுத்து காண்டாக்ட் எடுத்து கட்டிடம் கட்டும் நபர்கள் தங்கள் லாபம் போக 50 சதவீதம் தரத்தில் கட்டப்படும் இதுபோன்ற கட்டிடங்கள் அரசின் நிர்வாகச் சீர்கேட்டையும், ஊழல்களையம் பிரதிபலிக்கும் நிலை தான் என்றார்முதல்வர் திறந்து வைத்த ஒரே ஆண்டில் கட்டிடத்தின் மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதையடுத்து இளைநிலைப் பொறியாளர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதுகுறித்து திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் கங்காதாரிணி கூறிய தகவல்: பள்ளியில் மேற்கூரை சிமென்ட்பூச்சு பெயர்ந்து விழுந்த விவகாரத்தில் துறையூர் ஊராட்சி ஒன்றிய இளநிலைப் பொறியாளர்கள் பெரியசாமி, தங்கராசு இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இளநிலைப் பொறியாளர் கலைச்செல்வராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டிட ஒப்பந்ததாரரை கருப்புப்பட்டியலில் வைக்க நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.



கருத்துகள்