முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மத்திய அரசு அறிவித்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (யுபிஎஸ்) தேசிய அளவில் கவனம் பெற்றது

மத்திய அரசு ஊழியர்களுக்காக அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (யுபிஎஸ்) தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வந்துள்ளது.


அடிப்படையாக, UPS ஒரு நிதி அடிப்படையிலான பலன் வழங்கும் அமைப்பாகும். இதில், ஊழியர் மற்றும் மத்திய அரசு ஆகியோரிடமிருந்து செலுத்தப்படும் பங்களிப்புகள் முறையாகவும், சரியான நேரத்திலும் சேகரிக்கப்பட்டு முதலீடு செய்யப்படுகின்றன. இதன் மூலம், ஓய்வு பெற்றவர்களுக்கு மாதாந்திரப் பலன்கள் வழங்கப்படுகின்றன.

Unified Pension Scheme

புதிய விதிகள், மத்திய அரசு ஊழியர்களுக்கான இந்த உத்தரவாத ஓய்வூதியத் திட்டத்தைப் பற்றிய தெளிவைக் கொண்டுவரும். NPS மற்றும் UPS ஆகிய இரு திட்டங்களுக்கும் இடையே முக்கிய வேறுபாடுகள் உள்ளன. NPS பங்கு மற்றும் கடன் சந்தை செயல்பாடுகளைச் சார்ந்து இயங்குகிறது.


சமீபத்தில் அமலுக்கு வந்த யூனிஃபைட் பென்ஷன் திட்டம் (UPS) பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு ஊழியர்கள் பெரும்பாலும் இதில் இணையவில்லை. அமலுக்கு வந்து 2 வாரம் ஆகியும் யாரும் பெரிதாக இதில் இணைய ஆர்வம் காட்டவில்லை என்று அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசு 2024 ஆம் ஆண்டில் யூனிஃபைட் பென்ஷன் திட்டத்தை (UPS) அறிமுகப்படுத்தியது. ஓய்வூதியப் பாதுகாப்பிற்கு இது ஒரு புரட்சிகரமான திட்டமாகப் பார்க்கப்பட்டது. தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கு (NPS) மாற்றாக வடிவமைக்கப்பட்ட UPS, அரசு ஊழியர்களுக்கு NPS வழங்க முடியாத ஒரு விஷயத்தை அளிப்பதை நோக்கமாகக் கொண்டது.. அது வாழ்நாள் முழுவதும் உத்தரவாதமான மாதாந்திர ஓய்வூதியம். இதனால் யூனிஃபைட் பென்ஷன் திட்டம் (UPS) பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது

மத்திய அரசு ஊழியர்களுக்காக அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (யுபிஎஸ்) தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வந்துள்ளது

இது முன்பு அமலில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டம் (ஓபிஎஸ்) மற்றும் தற்போது அமலில் உள்ள தேசிய ஓய்வூதியத் திட்டம் (என்பிஎஸ்) ஆகிய இரண்டின் முக்கிய அம்சங்களை ஒருங்கே உள்ளடக்கியது. சரி இந்த பென்சன் முறையில் பென்சன் எப்படி கணக்கிடப்படும்.. உங்களுக்கு எவ்வளவு பென்சன் வரும் என்று தெரிய வேண்டுமா? மேற்கொண்டு படியுங்கள். ஊழியர் செலுத்த வேண்டிய பங்களிப்பு, ஓய்வூதியத்தைக் கணக்கிடப் பயன்படுத்தப்படும் பார்முலா மற்றும் அதிக பென்சன் பெறுவதற்கான தகுதிகள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை அரசு இன்னும் வெளியிடவில்லை.சந்தை ஏற்ற இறக்கங்களால் NPS திட்டத்தின் பலன்கள் பாதிக்கப்படலாம். ஆனால், UPS திட்டத்தில் ஓய்வூதியம் உறுதி செய்யப்படுவதால், குறைந்த இடர் கொண்டதாக உள்ளது. NPS-ல் கிடைக்கும் தொகை, முதலீடுகள் மூலம் திரட்டப்பட்ட கார்பஸைப் பொறுத்தது. மாறாக, UPS திட்டத்தில் 10 ஆண்டுகள் சேவை செய்தவர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ₹10,000 ஓய்வூதியம் உறுதி செய்யப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்கள் NPS-லிருந்து UPS-க்கு மாறுவதற்கான படிப்படியான ஆன்லைன் செயல்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 1, 2004 அல்லது அதற்குப் பிறகு நியமிக்கப்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் (பாதுகாப்புத் துறையில் உள்ள சிவிலியன்கள் உட்பட), தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ளவர்கள் மற்றும் UPS-ஐத் தேர்வு செய்பவர்கள் இத்திட்டத்திற்குத் தகுதியானவர்கள். ரயில்வே ஊழியர்கள், தற்காலிக ஊழியர்கள், அகில இந்திய சேவைகள், ஒப்பந்த ஊழியர்கள் போன்றோர் CCS (Pension) விதிகள், 2021-இன் கீழ் ஏற்கனவே உள்ளவர்கள் இத்திட்டத்தைத் தேர்வு செய்ய முடியாது. தற்போது பணியில் உள்ள ஊழியர்கள் அக்டோபர் 1 வரை UPS-ஐ தேர்வு செய்ய அவகாசம் உள்ளது. ஏப்ரல் 1, 2025 அல்லது அதற்குப் பிறகு பணியில் சேரும் புதிய ஊழியர்கள், பணியில் சேர்ந்த 30 நாட்களுக்குள் UPS-ஐத் தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

https://enps.nsdl.com/eNPS/NationalPensionSystem.htmlhttps://www.npscra.nsdl.co.in/ups.phpஏப்ரல் 1, 2025 நிலவரப்படி பணியில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள்.

தற்போது NPS-ன் கீழ் பதிவு செய்திருக்க வேண்டும்.

உறுதி செய்யப்பட்ட ஓய்வூதிய பலன்களை வழங்கும் புதிய UPS திட்டத்திற்கு மாற விரும்ப வேண்டும்.

படி 1: eNPS இணையதளத்தைப் பார்வையிடவும்

https://enps.nsdl.com/eNPS/NationalPensionSystem.html என்ற முகவரிக்குச் செல்லவும்.

Unified Pension Scheme பிரிவின் கீழ் "NPS to UPS Migration" என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 2: உங்கள் விவரங்களை உள்ளிடவும். உங்கள் PRAN (நிரந்தர ஓய்வூதியக் கணக்கு எண்) மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்.. Captcha-வை தீர்த்து, "Verify PRAN" என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 3: OTP சரிபார்ப்பு உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு OTP அனுப்பப்படும். OTP-ஐ உள்ளிட்டு தொடரவும்.

படி 4: அறிவிப்பை படித்து ஏற்றுக்கொள்ளவும் ஒரு அறிவிப்பு சாளரம் தோன்றும்.

கவனமாக படித்து, ஏற்றுக்கொள்வதற்கான பெட்டியை டிக் செய்யவும். "Proceed to e-Sign" என்பதைக் கிளிக் செய்யவும்.குறிப்பு: ஒருமுறை சமர்ப்பிக்கப்பட்டால், இந்தத் தேர்வு இறுதியானது, மாற்ற முடியாது.

படி 5: ஆதார் மூலம் e-Sign செய்யவும். உங்கள் VID (Virtual ID) அல்லது ஆதார் எண்ணை உள்ளிடவும்.

"Send OTP" என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். OTP-ஐ உள்ளிட்டு "Verify OTP" என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 6: உறுதிப்படுத்தல் வெற்றிகரமாக முடிந்தால், உங்கள் மாற்றக் கோரிக்கை சமர்ப்பிக்கப்படும். ஒரு ஒப்புகை எண் உருவாக்கப்படும். உங்கள் பதிவுகளுக்காக e-Sign செய்யப்பட்ட மாற்றப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யலாம். விரும்பினால்: ஆஃப்லைன் முறை ஆஃப்லைனிலும்    விண்ணப்பிக்கலாம்:

https://www.npscra.nsdl.co.in/ups.php என்ற முகவரியிலிருந்து படிவம் A2-ஐப் பதிவிறக்கம் செய்யலாம். குறிப்பிட்டபடிவங்கள் (A1/A2) மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தலைமை அலுவலகத்தால் சரிபார்க்கப்பட்டு → DDO-க்கு அனுப்பப்பட்டு → PAO/CDDO → மத்திய பதிவு நிறுவனத்திற்கு (CRA) அனுப்பப்படும். CRA நிரந்தர ஓய்வூதியக் கணக்கு எண்ணை (PRAN) ஒதுக்கும். முதல் பங்களிப்பு விண்ணப்பித்த 20 நாட்களுக்குள் அல்லது பணியில் சேர்ந்த தேதிக்குள் வரவு வைக்கப்பட வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...