அதிமுக கட்சியிலிருந்து பிரிந்தவர்கள் மற்றும் எடப்பாடி கே.பழனிச்சாமி நீக்கம் செய்தவர்களை பத்து நாளில் இணைக்க எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு கே.ஏ.செங்கோட்டையன் காலக்கெடு
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்குப் பின்னர் கட்சியிலிருக்கும் பிரமுகர் இன்று முடிவுகளை தெரிவிக்கவுள்ளதாக கூறிய நிலையில்.
கோபிசெட்டிபாளையத்தில் வீட்டிலிருந்து பிரசார வாகனத்தில் ஊர்வலமாகக் கட்சி அலுவலகத்துக்கு காலையில் செங்கோட்டையன் வந்தார். பிரசார வாகனத்தில் முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய படங்கள் இடம்பெற்றன.
சாலைகளின் இரண்டு பக்கமும் கூடியிருந்த மக்கள் அவருக்கு உற்சாகமாக வரவேற்பளித்தனர். கட்சி அலுவலகத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் செங்கோட்டையன் பேசியதாவது:
1972 ஆம் ஆண்டு அதிமுக கட்சி தொடங்கியபோதே கிளையைத் தொடங்கி பணியாற்றினேன். என்னை பொருளாளராக நியமித்து கோயம்புத்தூர் பொதுக்குழுவை நடத்தச் சொன்னவர் எம்ஜிஆர். சிறப்பாக நடத்தியதற்காக என்னை பாராட்டினார். சத்தியமங்கலம் தொகுதியில் என்னை போட்டியிட வைத்தார்.
நாட்டின் சிறந்த முதல்வரான எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவை தலைமையேற்க வேண்டுகோள் வைத்தோம். அவர், உலகமே திரும்பிப் பார்க்க வைத்த ஆளுமைமிக்க சிறந்த ஆட்சியை நடத்தினார். ஆன்மிக வாதிகளும் திராவிடர்களாலும் ஏற்றுக் கொள்ளும் ஆட்சியை நடத்தினார்.
அவர் மறைந்த பின், பல்வேறு சோதனைகள் வரும்போது அனைவரும் சேர்ந்து இயக்கம் உடைந்து விடக் கூடாதென்று வி.கே.சசிகலாவை பொதுச் செயலாளராக ஒருமனதாக நியமித்தோம். முதல்வராக தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரை வி.கே.சசிகலா நியமித்தார்.
தமிழகத்துக்காகவும் அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சிக்காகவும் அனைத்து தியாகங்களையும் செய்துள்ளேன். இரண்டு வாய்ப்புகள் வந்த போதும் இயக்கம் உடைந்து விடக் கூடாது என்பதற்காக மறுத்தேன்.
2016 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு சந்தித்த அனைத்துத் தேர்தல்களிலும் பல்வேறு சவால்களைச் சந்தித்தோம். 2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்தால் 30 தொகுதிகளில் வெற்றி பெற முடியும் எனக் கூறினோம். வெளியில் சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைத்து செயல்பட்டால் மட்டுமே நம்மால் வெற்றி பெற முடியும் என வலியுறுத்தினோம். ஆனால், கருத்துகளை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் அவரில்லை.
வெற்றி வாகை சூடி நல்லாட்சியைத் தமிழ்நாட்டில் தருவதற்கு அனைவரையும் அரவணைத்து கட்சியில் சேர்க்க வேண்டும். இதனை விரைந்து செய்தால் தான் தேர்தல் களத்தைச் சந்திக்க முடியும்.
அனைவரையும் மீண்டும் இணைத்தால் மட்டுமே பொதுச் செயலாளரின் பிரசாரத்தில் பங்கேற்பேன். இணைக்காவிட்டால் ஒரே மனப்பான்மையில் இருப்பவர்கள் ஒன்றிணைவோம்.” எனத் தெரிவித்தார் கே.ஏ.செங்கோட்டையனின் பேட்டி தொடர்பாக, அ.தி.மு.க வின் முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஜெயலலிதா கூறியது போல 100 ஆண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காக இயங்கும். எந்த சக்தியாலும் அழிக்க முடியாத இயக்கம் என்பதை கே.ஏ.செங்கோட்டையன் நிரூபித்துள்ளார்' எனவும் பல்வேறு நெருக்கடியான காலகட்டங்களில் கே.ஏ.செங்கோட்டையன் உடன் இருந்துள்ளதாகக் கூறியுள்ள முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே சசிகலா, ' தனது உடலில் ஓடுவது அ.தி.மு.க ரத்தம் தான் என்பதை அவர் நிரூபித்துள்ளார்' எனத் தெரிவித்துள்ளார்.
'அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டும் என்பது தான் அ.தி.மு.க தொண்டர்களின் கருத்தாகும். தமிழக மக்களின் கருத்தும் இது தான். கே.ஏ.செங்கோட்டையன் போன்ற உண்மையான தொண்டர்கள் இருக்கும் வரை எந்தவிதத்தில் தி.மு.க முயற்சி செய்தாலும் அவர்களின் எண்ணம் ஈடேறாது' எனவும் மேலும் வி.கே.சசிகலா நடராஜன் அதில் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து தனது அறிக்கையில், 'எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இந்த இயக்கம், காட்டாற்று வெள்ளம் போன்றது. அ.தி.மு.க ஒன்றுபடுவதற்கு எதிராக எத்தனை தடை போட்டு தடுத்தாலும் அவற்றைத் தவிடுபொடியாக்கி 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க அரசை வீட்டுக்கு அனுப்புவது உறுதி' எனக் கூறியுள்ளார்.
'ஒன்றுபட்ட அ.தி.மு.க தான், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட வழிவகை செய்யும்' எனவும் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார் தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், "அ.தி.மு.கவை தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை கட்சிக்காக கே.ஏ.செங்கோட்டையன் உழைத்து வருகிறார். பல்வேறு பிரச்னைகள் வந்த போதும் இயக்கத்தையும் அனைத்து மக்களையும் அரவணைக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறார்" எனக் கூறினார் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய வினாவுக்கு
"இது அ.தி.மு.கவின் உள்கட்சி விவகாரம். இதில் நான் கருத்துக் கூறுவது சரியானதாக இருக்காது. அவர்கள் இதுவரை ஒன்றாக இருந்தனர். அவர்கள், தங்களின் கருத்தைப் பேசுகின்றனர். அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் தி.மு.க ஆட்சியை அகற்ற முடியும்" எனக் கூறினார்.
எடப்பாடி கே பழனிசாமிக்கு பத்து நாள் கெடுவை கே.ஏ.செங்கோட்டையன் விதித்தது குறித்துப் பதிலளித்த நயினார் நாகேந்திரன், அனைவரும் ஒன்று சேர வேண்டும் எனக் கூறுவது நல்ல விஷயம்" எனத் தெரிவித்தார் அரசியலில் எதுவும் நிரந்தரமாக இருக்காது. தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்கள் உள்ளன. கடைசி ஒரு மாதத்தில் கூட மாற்றம் வரலாம். ஆட்சி மாற்றமும் காட்சி மாற்றமும் நடக்கும்" என்றார்.நீண்ட காலம் பேசாத கே.ஏ.செங்கோட்டையன் தற்போது வெளியிட்ட கருத்து கட்சியில் என்ன நடக்கும், அண்ணா திமுகவுக்கு எதிராக வழக்குப் போட்டவங்க வாபஸ் வாங்கினால் அது பற்றி பரிசீலிக்கலாம் என எடப்பாடி கே பழனிச்சாமி தரப்பில் பதில் சொல்லலாம்.
வழக்குகளை வாபஸ் வாங்கினாலும் பின்னால் ஏதாவது ஒரு காரணம் சொல்லி கே.ஏ. செங்கோட்டையன் தரப்புக்கு வேறு ஏதாவது ஒரு காரணத்தால் அனுமதி இல்லை எனக் கூறலாம்.
வி.கே.சசிக்கலா நடராஜன் சார்ந்த உறவுகள் வரவாகி உள்ளே விட்டால் தன்னை கட்சியில் காலி பண்ணிடுவாங்கன்னு ஒரு பயம் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கும் அந்த மாற்றுக் கருத்து சசிகலா எதிர்ப்பாளரான ஒரு ஆடிட்டருக்கும் கண்டிப்பாகத் தெரியும்.
அதனால் வெளியே உள்ள அதிமுகவினருடன் நீங்களும் சேர்ந்து போய் ஆலோசியுங்கள் என கே.ஏ.செங்கோட்டையனை அதிமுக கட்சியிலிருந்து நீக்கலாம்.. அதன் பின்னர் பழனிச்சாமியா செங்கோட்டையனா என்பது தற்போது ஐந்து கூறாக உடைந்த நிலையில் உள்ள அதிமுக ஆறாவதாக உடைவதில் யாரிடம் கட்சி தங்கும் என்பதே அரசியல் கே.ஏ.செங்கோட்டையன் ஓ.பன்னீர் செல்வம் போல செயலற்ற தலைவரில்லை, இனி
இப்படி நிறைய 'விபரமெல்லாம்' இருக்கிறது. ஆனால் பொது நீதி யாதெனில்
பாஜகவால் விஷம் கொடுத்தும் கொல்ல முடியும் வெல்லம் கொடுத்தும் கொல்ல முடியும். என்பதே தற்போது உள்ள நிலை.
அதன் வெளிப்பாடு தான் கே.ஏ. செங்கோட்டையன் பேச்சுக்கு ஆதரவாக எல்லோரையும் விட பாஜகவினர் அதிகமாகவே தற்போது துள்ளிக் குதிப்பது.
நமக்கு புரிவது இதுதான்.இன்று கே.ஏ.செங்கோட்டையன் அதிமுக கட்சியைக் காப்பாற்ற நடக்கும் முயற்சி என்பது பலர் கூறும் நிலையில் உடைக்கிறார் என எடப்பாடி கே பழனிச்சாமி தரப்பில் பேசும்
நிலையில் அமமுக
டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் வி.கே.சசிகலா நடராஜன் எல்லாம் இனி கே.ஏ.செங்கோட்டையனோடு ஐக்கியமாகி
மொத்தமாப் போய் நடிகர் விஜய் நடத்தும் த வெ க கட்சியுடன் கூட்டணி சேர்வார்கள்
கட்சி உடைஞ்சு சின்னம் முடங்கி ஊழல் மற்றும் கொட நாடு கொலை கொள்ளை வழக்கில் இழுபட்டு எடப்பாடி கே பழனிச்சாமி மொத்த பணமும் இழந்த நிலையில் நடுத் தெருவுக்கு வருவார்!!
தங்கமணி வேலுமணி உள்ளிட்ட பலரும் பாஜகவுக்கு ஆதரவு தருவார்கள்
இப்படி அதிமுக சப்ஜாடாக முடிஞ்ச பிறகு, அமித்ஷா வருவார் பாஜகவின் தலைமையில் கூட்டணிக்குத் தலைமை தாங்கள் தான் என பேசி முடிப்பார்கள் அதில் பிரேமலதா தலைமையில் உள்ள தேமுதிக, மருத்துவர் அன்புமணி தலைமையில் பாமக ஜான் பாண்டியன் கட்சி, கிருஷ்ணசாமி கட்சி, மருத்துவர் ராமதாஸ் தலைமையில் உள்ள பாமக
எல்லாம் அமீத்ஷா ஜீ க்கு நமஸ்காரம் செய்வார்கள்!!
எடப்பாடி கே.பழனிச்சாமியால் வலுவாய் தோன்றிய தற்போது உள்ள கூட்டணி தமிழ்நாட்டின் தலையெழுத்துக்கு சவாலாய் தோன்றி நிற்கும்!மூன்று முறை முதல்வராகவும் ஒரு முறை துணை முதல்வராகவும் இருந்த தலைவர் பதவிக்கு கொஞ்சம் கூடத் தகுதியே இல்லாத பெரியகுளம் தேனீர் கடை ஓ.பன்னீர் செல்வத்தை அகற்றி விட்டு, தமக்குத் தோதான கரப்ஷன் கட்டிங் கலெக்ஷன் சரியாகத் தந்து கொண்டிருந்த பொதுப்பணித்துறை அமைச்சரான எடப்பாடி கே.பழனிச்சாமி யை கூவத்தூரில் வி.கே. சசிகலா நடராஜன் ஆதரவாளர்கள் முதல்வராக்காமல் இருந்திருக்கலாம், தற்போது மேலிட அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டு கையறு நிலையில் பின்னர் அரசனும் கைவிட அனாதை அரசியல் வாதிகள் பட்டியலில் இருக்கும் ஓ.பன்னீர் செல்வத்தையே தொடரவிட்டிருக்க வேண்டும். இல்லையேல் கல்வி அமைச்சராக இருந்த கே.ஏ.செங்கோட்டையனைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். சில்லறை (கட்டிங் கப்பம்) கணக்கைப் பார்த்து மொத்த த்தையும் இழந்தது வி.கே.சசிகலா நடராஜன் டீம். இறுதியில் வழிகாட்டி முனைவர் ம.நடராஜனையும் பறிகொடுத்த நிலையில் இப்பவும் சொல்வது யாதெனில் கூட்டணி சீட் பகிர்வில் எடப்பாடி கே பழனிச்சாமி எப்படியும் காலை வாரி, முதுகில் குத்தத்தான் போகிறார். எடப்பாடி கே.பழனிச்சாமியை முதலமைசர் ஆக்குவது நமது கடமை என்று பாஜகவின் அண்ணாமலை சொல்லியது, எப்படியாவது டிடிவி தினகரன் ஓபன்னீர் செல்வம் மற்றும் வி.கே.சசிகலா நடராஜன் டீமை கூட்டணிக்குள் கொண்டு வந்து ஓட்டு சிதறலை தடுக்கத்தான். ஆனால் எடப்பாடி கே.பழனிச்சாமியின் சுய ஆணவம் மீண்டும் திமுக ஆட்சிக்குத் திட்டம் வகுத்து கொடுத்து விடலாம்ஆடிட்டர் கருத்து இது
“ஓபிஎஸ், டிடிவி NDA கூட்டணியை விட்டு வெளியேறியதாக நான் நினைக்கவில்லை. இந்த நிலைமை மாறக்கூடும். 8 மாதங்களில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் கொண்டுவர வேண்டும் " என்பதில் பாஜக உறுதியாக உள்ளது"
தனியார் தொலைக்காட்சிக்கு ஆடிட்டர் குருமூர்த்தி அளித்தபேட்டியில்.













கருத்துகள்