முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாய்களால் ஆபத்து வருகிறதோ இல்லையோ நாய்க் காதலர்கள் ஆபத்தானவர்கள்

நிச்சயமாக நாய்க் காதலர்கள் வாழும் தெருக்கள் அடையார் போர்ட் கிளப், மேற்கு மாம்பலம், தி.நகர் போயஸ் கார்டன் அண்ணா நகர் பெசன்ட் நகர் மடிப்பாக்கம் நங்கநல்லூர், போன்ற இடங்களின் தெருக்கள் எல்லாம் நாய்களுக்கு சொந்தமில்லை,



முக்கியமாக நாய்க் காதலர்கள் வாழும் அப்பார்ட்மெண்ட்டுக்குள் முற்றிலும் அனுமதி இல்லை கிராமங்களில் வாழும் நாய்கள் நகரத்தில் தெருக்களில் நடமாட உரிமையில்லை, பாதுகாப்பு மையங்களில் சேர்க்க நடவடிக்கைகள் தான் இதுவே டில்லி தீர்ப்பு சாராம்சம் அது மனிதனுக்காக மனிதன் உருவாக்கியது, ஒரு சிலருக்காக (விலங்குகள் ஆர்வலர்) எதையும் பொதுமைப் படுத்த முடியாது.

வெளிநாட்டு வகை நாய்களின் விற்பனையை தடை செய்தால் தெரு நாய்களின் எண்ணிக்கையும் குறையும். அதையும் செய்யமாட்டார்கள். வீட்டில் வெளிநாட்டு வகை நாயை வளர்ப்பதை ஒரு சில மனிதர்கள் தாயை முதியோர் இல்லத்தில் அடமானம் வைத்துவிட்டு நாயை கெளரவமாக நடத்தி வளர்க்கும் அற்ப பதர்கள்  வாழும் நிலையை பலரும் அறியலாம். அதை கார்பொரேட் நிறுவனங்கள் கொண்டு வந்து விட்டன.

அதுவே அப்பத்தா திரைப்படம் கூறும் கதை நாய் விற்பனை அதுக்குரிய உணவு மருந்து என்று முழுவதும் கார்ப்பரேட் மயமாகிப் போனதால் நாட்டு நாய் வளர்ப்புக் குறைந்து அது தெருக்களில் சுற்றித் திரிகின்றன. சிலரை 1985-90 காலகட்டத்தில் பெற்றோர்கள் திட்டும் போது நல்ல நண்பர்கள் சேர்க்கை குறித்து எச்சரிக்கை இது






"கண்ட கண்ட நாய் பின்னாடி எல்லாம் சுத்தாதே. பின்னாளில் நாலு நாய் நாலு விதமாக தான் பேசும். உனக்கான நாய் உன்னைத் தேடி வரும். அந்த நாய்காக நீ நாயாக உழை. நாயாக லோள் பட்டாலும், குடும்பத்தை காப்பாற்று. கல்லடி பட்டாலும் கடனை அடைத்து விடு" இதுவே.  அந்த நாயும் இப்போது இல்லை ஆனால்  அந்த திட்டிய பெற்றோரும் இப்போது இல்லை கால மாற்றம் நாய்கள் ஆபத்தானதோ இல்லையோ, நாய்களை ஆதரிப்போர் ஆபத்தானவர்கள். மனநோயாளிகள், மக்களைப் பிடிக்காத ஜென்மங்கள், அயல்நாட்டுக் கைக்கூலிகள், துணை நடிகைகள் வேற்றுக் கிரக வாசிகள் என அவர்களின் செயல்பாடுகளை இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.   






 புதிய வனத் திருத்தச் சட்டங்கள் வந்த பின்னர் கிராமத்தில் வேட்டை நாய்கள் எனும் கண்ணி நாய்கள் மற்றும் இராஜபாளையம் நாய்கள் கோம்பை நாய்கள் ஆகியவை காணாமல் போக அயல்நாட்டு நாய்கள் தற்போது ஆக்கிரமிப்பு மற்றும் வியாபார யுக்தி பல நாட்டு பீட்டாக்களின் படையெடுப்பு இந்தியாவிலும் அயலர்களின்  அக்கிரமம் பிரவேச நாய்களின் ஆக்கிரமிப்பு நாய்க்கடி காரணமாக ஓசியில் ஊசி போட்ட அரசு மருத்துவமனையிலும் கால்நடை மருத்துவர்களும் காஸ்ட்லி ஆன நிலை வந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 5- ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் மாதம் 31- ஆம் தேதி வரைக்கும்,  'நாய்கடித்' தாக்குதல் குறித்து மொத்தம் 25 சம்பவங்களை பதிவு பண்ணியிருக்கும் நாமறிந்த ஒரு மூத்த பத்திரிகையாளர் . அதாவது 



அரசு பொதுமருத்துவமனைகளில் வெறிநாய்க்கடி 'அட்மிட்'  ஆன வார்டுகளைக் கூட எட்டிப் பார்க்காதவர்கள் ஏதேதோ எழுதுகிறார்கள்.

நாயா நானா என தொலைக்காட்சி விளம்பரங்களுக்காக. அந்த தொலைக்காட்சி பரவாயில்லை நாய் குறித்து நோக்கி நாய்  என பரிசளிப்பு ஒரு கூலி நடிகையே நீ தூக்கி நாய் நீவி நாய் கொஞ்சி நாய்...

பால் புகட்டி நாயே பொறை ஊட்டி நாயே  பேர் சூட்டி நாயே                    பரிவு காட்டி நாயே. என்பதாக நாய்க் காதலராகப் பேசுகிறார். ஆனால் நாம் கேட்பது இவ்வளவு பேசும் நடிகையே நாயின் வெறி விலக்கி நாயா? முறைப்படுத்தி நாயா?

கடிபட்ட குழந்தையைக் காப்பாற்றி நாயா? விரட்டப்பட்ட வறியவர்களைத் தேற்றி நாயா? பாதுகாப்பு காரணங்களுக்காக  அடக்கலாம் என்றால் பேசி ஏசி நாயே, அடங்கியோர் இன்னலைப் பேசி நாயா?

நாயே!  மனிதன் நாயாகவே உருமாறி செயல்படும் அந்தக் காட்சியை எதிரிகள் கூட பார்க்கக்கூடாது என நினைக்கிறார்கள் இந்த உலகத்தில் உள்ள நாம்  தான் மனிதர்கள் எதிரிகள் கூட அதை அனுபவிப்பதை எப்படி சகித்துக் கொள்வோம்?

மரணித்த பின் உடலை கூடக் வீட்டுக்குக் கொடுக்க மாட்டார்கள். கொரோனா பாதித்த உடல்களை அடக்கம் செய்த அதே சூழல்தான் அங்கேயும்.

காரிலும் விமானத்திலும் மட்டுமே பயணம் செய்கிறவர்களை எப்போதும், தெரு நாய்கள் விரட்டுவதற்கோ- கடிப்பதற்கோ வாய்ப்பே இல்லை. என்றோ ஒருநாள் கட்சிப் போராட்டம், ஆர்ப்பாட்டங்களின் போது, கூட்டத்தோடு கூட்டமாக வீதியில் நடந்து போயிருக்கும் போது, தூரத்தில் பார்த்திருக்கலாம் தெருநாய்களை.

"விலங்குகள் வதை தடுப்புச்சட்டம் 1960" - ஐ உருவாக்கம் செய்ததில் முக்கியப் பங்காற்றியவர், இந்த தேசத்தின் ஆபத்தான நபராக ஒருகாலத்தில் பார்க்கப்பட்டு விரைவில் விமான விபத்தால் காலமான ஒரு தரம் கெட்ட நபரின் மனைவி மேனாள் மத்திய அமைச்சர் மேனகா சஞ்சைக்காந்தி என்பது நினைவில் வருகிறது.

அதிலும் குறிப்பாக, நாய்கள் நலனுக்காக மட்டுமே பதினைந்து நிமிடங்கள், சட்ட உருவாக்கத்தின் போது பேசினார் அமைச்சரான அந்த அம்மையார்.  

"மனிதனுக்கு நாயால் தீங்கு ஏற்பட்டால்?" என்பது தான் பேசும் கருப்பொருள் ஆனால் அதைத் தவிர்த்து, "மனிதனால் நாய்களுக்கு ஏதேனும் தீங்கிழைக்கப் பட்டால்?" என்றே அப்போது அந்த உரை அமைந்திருந்தது.

ஒரு விஷயத்தை ஊன்றிக் கவனித்தால் புரியும். நாட்டில் பல மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்ட போதெல்லாம் ஸ்டார்ட் ஆகாத வண்டி, டெல்லியில் தொடர்ந்து நாய் 'கடி' கள், இரட்டை டிஜிட்டலில் எகிறியதும் துவங்கியிருக்கிறது. அந்த நீதித்துறை யுத்தம்  எப்படியோ நீதி கிடைத்தால் சரி தான்.

கவனிக்க வேண்டிய முக்கிய அம்சமே, யார் பராமரிப்பிலும் இல்லாத தெரு நாய்கள் தான் ஊரில் அதிகம். சுயமாக அவைகளே முகக்கவசம் அணிந்திட வாய்ப்புகள் இல்லை. நாட்டு நாய்களான தெருநாய்களை வீட்டுக்குக் கொண்டு வந்தோ, அல்லது உயர்ரக நாய்களை ஆர்டர் போட்டு வெளிநாடுகளில் இறக்குமதி செய்தோ வளர்க்கிறவர்கள்; அவைகளுக்கு மாஸ்க் போட்டு வெளியே கூட்டிப் போவதில்லை. அதே வேளையில் அவர்கள் மாஸ்க் போட்டிருப்பார்கள்.. 

கயிறுகட்டி வாக்கிங் அழைத்துப்போகும் போது பிற தெருநாய்கள், "யார்றா நீ, எங்க ஏரியாவில?" என்ற கேள்வியோடு தாக்குதல் செய்வதும், பதிலுக்கு முதலாளியோடு வாக்கிங் வந்த நாய் தெருநாய்களை தாக்குதல் செய்வதும்;

 சில நேரங்களில் நாயின் முதலாளியின் மீதே அந்தத் தாக்குதல் நடப்பதும்; அவ்வப்போது பார்க்கிற காட்சிகள் தான். ஆள் கடிபடாத வரை இவையெல்லாம் செய்திகளாவதில்லை.

"திடீரென ஏன் மனிதர்கள் இப்படி நாய்கள் மீது நாய்கள் போலவே விழுந்து கடித்து பிராண்டி வைக்கிறார்கள்?" என்ற சிலரது ஆதங்கக்குரல்களை இப்போது தான் கேட்க முடிகிறது. 

காலங்காலமாக நாயாட்டம் அதிகம் தான் நண்பர்களே. கிராமங்களிலும், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் நகரின் ஒதுக்குப்புற புறநகர்களிலும்; இதுநாள் வரையிலும் 'கடி' பணிகள் இருந்து வந்த வேளையில்; அது பெரிதாகப் பேசப்பட வில்லை. இப்போது, எங்கு கடிக்க வேண்டுமோ அங்கேயும், யாரைக் கடிக்க வேண்டுமோ அங்கேயும்; எந்த ஏரியாவில்  கடிக்கவேண்டுமோ அங்கேயும்; மிகச் சிறப்பாக நாய்கள் கடித்து வைத்ததன் காரணத்தால்; எல்லா ஏரியாவும் முகநூல் ஏரியா ஹைலைட்ஸ் சிம்பிள் போல ஹைலைட் ஆகியிருக்கிறது.

இரவுகளில் வீடற்ற மனிதர்கள் படுத்து உறங்கும் மேம்பால நடைபாதைகளில் நபர் ஒருவருக்கு ஒரு நாய் பாதுகாப்பு (?) என்ற கணக்கில் நாய்களும் படுத்துக் கிடக்கும். 

நடைபாதை (பிளாட் பார்ம்) இல்லாத மேம்பாலங்களைத் தவிர - எல்லா மேம்பாலங்களிலும், மனிதர்கள் -நாய்கள் என்ற இணைப்பைப் பார்க்கலாம். இரவு 10 மணிக்கு படுக்கை விரிக்கப் பட்டு மறுநாள் காலை ஆறுமணியளவில் படுக்கை கலைக்கப்படும். அட இந்த நபர் இவ்வளவு டீட்டெய்ல்டா சொல்லுதேன்னு மூக்கில் விரல் வைப்பது வேண்டாத வேலை. மேம்பால ஏரியாக்களை இரவுகளில் கடப்பது இப்போதும் உண்டு. அதிகாலை ஐந்து மணிக்கு முன்னதாக பயணம் போகும் பழக்கம் அப்போது உண்டு. ஆக, அதிகாலையிலும் இரவுகளிலும் இதை தொடர்ச்சியாய் நாம் பார்த்துள்ளோம். 

நெடுஞ்சாலைகளில் நெரிசல் இருக்கும் வேளைகளில், உள்வட்டச் சாலையை கார்மூலம் பயன்படுத்திப் பார்ப்பதைக் காட்டிலும்; நடந்தும், இரு சக்கர வாகனங்களில் கடந்தும் பார்த்தோர்; ஆகச்சிறந்த நபர்கள் தான். சென்னை பாஷையில் கூறவேண்டுமானால் 

"இன்னாமா நீ... இத்தன தடவதான்  உங்களுக்குலாம் சொல்றதோ தெரியல போங்க. பளிச் பளிச்னு கண்ணப் புடுங்கற கலர்ல துணி போட்டுக்குனு வந்தாதான் அதுக்குப் புடிக்கலே, கொலைக்குது; தொரத்திக்கிட்டு வருதுன்னு தெரியுதுல்ல"...

வேற என்னெல்லாம் நாய்களுக்கு பிடிக்காதுன்னு லிஸ்ட் போட்டு குடுத்திட்டீங்கன்னா, நாங்க பூமியில வாழறதா; அல்லது செவ்வாய் கிரகத்துல வாழறதான்னு முடிவு பண்ணிக்கறோம். என்பதே மனிதர்களின் தற்போதுள்ள நிலை.  தெருநாய் வழக்கால் உலகம் முழுக்க பிரபலமாகி விட்டேன்: என்கிறார் உச்ச நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி அந்த நகைச்சுவையாகப் பேசும் நிலையில் 

டெல்லி - என்​சிஆர் பகு​தி​களில் தெரு நாய்​களால் பலர் பாதிக்​கப்​படு​வ​தாக​வும், குறிப்​பாக குழந்​தைகள் தெரு​நாய் கடி​யில் உயி​ரிழப்​ப​தாக​வும் புகார்​கள் எழுந்​தது தொடர்​பான வழக்கை விசா​ரித்த உச்ச நீதி​மன்ற 2 நீதிப​தி​கள் அமர்​வு, ‘‘டெல்லி - என்​சிஆர் பகு​தி​களில் தெரு நாய்​களை பிடித்துக் காப்​பகங்​களில் பராமரிக்க வேண்​டும். அவற்றை மீண்​டும் தெருக்​களில் விடக்​கூ​டாது’’ என்று கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ஆம் தேதி உத்​தர​விட்​டது. இதற்கு செல்​லப் பிராணி​கள் வளர்ப்​பவர்கள் எனவும், சமூக ஆர்​வலர்​கள் எனவும் கூறும் போலியான பலர் கண்​டனம் தெரி​வித்துப் போராட்​டங்​கள் நடத்​தினர்.  ஜல்லிக்கட்டு எதிர்ப்பாளர்கள் மற்றும் நாய்க் காவலர்கள் அயல் நாட்டு அமைப்பின் கைக்கூலிகள் ஆகப் பார்க்கப்படும் நபர்கள் மூலம் நாடு முழு​வதும் இந்த விவ​காரம் பெரும் சர்ச்​சை​யானது. இது உச்ச நீதி​மன்றத் தலைமை நீதிபதி கவாய் கவனத்​துக்கு சென்​றதையடுத்து நீதிபதி விக்​ரம் நாத் தலை​மை​யில் 3 நீதிப​தி​கள் அடங்​கிய அமர்​வுக்கு வழக்கை மாற்றி தலைமை நீதிபதி கவாய் உத்​தர​விட்​டார். இந்த நிலையில் தமிழ்நாடு சமூக ஊடகங்களில் பிரபலமான நிலையில் அறந்தாங்கி கோபி நடத்தும் நிகழ்ச்சி நடந்த பின்னர் நாய்க்காவலர்கள் அசிங்கப்பட்ட பின்னர் பேசுவது "எங்க மேல அங்கங்க கொஞ்சம் பரிதாப பட்டாங்க.. இந்த நீயா நாயா கோபினு ஒருத்தன் வந்தான் சார்.. மொத்தமா மூடிட்டான் சார்"..என்பதே இப்போதைய நிலை இல்லாத பேய்க்குப் பயந்த காலம் போய் 

இருக்குற நாய்க்குப் பயப்படும் நிலை வரக் காரணம் இந்திய மிருக ஆர்வலர்கள் சில வனவாசிகள் எனும் அயல்நாட்டு அமைப்புக்களின் கைக்கூலிகள் 

உயிரைப் பறித்த தெரு நாய்கள்- 4 வயதுச் சிறுவனுக்கு நிகழ்ந்த கொடூரம் 

நாடு முழுவதும் தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களால் மனிதர்கள் நாய் கடிக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் தெருநாய்களை கட்டுப்படுத்த பல்வேறு உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள நிலையில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக சிறுவர்களை தெருநாய்கள் துரத்தி துரத்தி கடிக்கும் காட்சிகள் அவ்வப்போது வெளியாகி வைரலாகிறது.

தெலுங்கானாவில் நான்கு வயது சிறுவன் தெருநாய் கடியால் ரேபிஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தெலங்கானாவில் உள்ள துங்கூரு கிராமத்தைச் சேர்ந்த ரிஷித் என்ற  4 வயது சிறுவனை இரண்டு மாதங்களுக்கு வெறிநாய் ஒன்று கடித்துள்ளது. நாயின் பிடியில் இருந்து தப்பி சிறுவன் ஓட முயன்ற நிலையில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த சிறுவனுக்கு காயங்கள் ஏற்பட்டது. நாய் கடிக்கவில்லை என நினைத்துக்கொண்ட சிறுவனின் பெற்றோர்கள் நாய் கடிக்கு சிகிச்சை அளிக்காமல், கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயங்களுக்கு மட்டும் சிகிச்சை அளித்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் மழையில் சிறுவன் நனைந்த போது சிறுவனின் உடல் மொழியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சிறுவனை பரிசோதித்த நிலையில் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இந்நிலையில் சிகிச்சையில் இருந்த சிறுவன் ரிஷித் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.ஒரு தெருநாயால பெத்த புள்ளைய கண்ணு முன்னாடி  பறி கொடுத்துட்டு உக்கார்ந்து இருக்கிற அந்த தகப்பனோட வலி அந்த கண்கள்ல அவ்வளவு ஆழமாகத் தெரிகிறது

அந்த மனுஷனோட வலி வேதனை எல்லாம்  கேட்டும்  கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம  அந்த 2 கால் ஜென்மத்துக்கு எப்படி நாயையும் குழந்தைகளையும் ஒண்றாக ஒப்பிட பேசும் அல்லது குலைக்கும் மனசு வருகிறது. நமக்கே  அவர்கள் மீது கோபம் வரத் தோணுது

ஆனா அவரு வந்த கோவத்தை எல்லாம் கட்டுப்படுத்திட்டு கொடுத்த ரியாக்ஷன் இருக்கே அதில் அவர்கள் அசிங்கப்பட்டனர் மக்கள் சபைமுன்  நாம் மீண்டும் கூறுவோம் நாய்கள் ஆபத்தானதோ இல்லையோ நாய்க் காதலர்கள் மிகவும் ஆபத்தான ஜந்துக்கள்.நீயா நானா நிகழ்ச்சியை 99 விழுக்காடு நாம் உள்ளிட்ட மக்கள் பார்ப்பதில்லை. இன்று விலங்குகள் ஆணைய மூத்த அலுவலர் ஒருவர் நிகழ்ச்சியை நீக்கம் செய்ய கடிதம் எழுதியதால் பார்த்தோம் ஆம் அது குறித்து நடவடிக்கைகள் பார்த்துக் கொண்டே இருப்போம்.

அந்த  நிகழ்ச்சிகளில் பேசுபவர்கள் படிநிலை வர்க்கம் பார்க்க இயல்கிறது.

எளிய மனிதர்கள் நான்காம் ஐந்தாம் வரிசையிலும், மேலதட்டு உயர்குடி மக்களுக்கு முதல் இரண்டு வரிசையை தான் கவனித்தீர்களா? பாரபட்சம். இதில் ஒரு அயல்நாட்டு அமைப்பு ஊடுருவல் உண்டோ என சந்தேகிக்கும் நிலை உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...