ஜிஎஸ்டி சலுகைகளை பாலிசிதாரர்களுக்கு வழங்க காப்பீட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி டில்லியில் மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில்,
ஜிஎஸ்டி-யில் 12%, 28% ஆகிய விகிதங்களை நீக்கிவிட்டு, 5%, 18% ஆகிய இரு விகித நடைமுறையைப் பின்பற்றுவதாக முடிவு செய்யப்பட்டு அதற்கு ஒப்புதலும் வழங்கப்பட்டது குறித்து முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சி பிரமுகருமான ப. சிதம்பரம் அவரது எக்ஸ் தளத்தில் இதுபற்றி,
"12 சதவீத ஜிஎஸ்டி வரி வரம்பில் உள்ள 99 சதவீத பொருள்கள் இப்போது 5 சதவீத வரி வரம்பில் உள்ளதாகக் கூறி நிதியமைச்சர் பெருமைப்படுவதை புரிந்துகொள்ள முடிகிறது. ஜிஎஸ்டி வரிக் குறைப்பை நாங்கள் வரவேற்கிறோம்.
ஆனால் ஒரு கேள்விக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்.
5 சதவீத ஜிஎஸ்டி விகிதம் இப்போது நியாயமான, சரியான ஜிஎஸ்டி விகிதம் என்றால், அது ஏன் கடந்த 8 ஆண்டுகளுக்கு நியாயமானதாக, சரியானதாக இல்லை?
கடந்த 8 ஆண்டுகளில் 12 சதவீத வரி விதிப்பின் மூலம் மத்திய அரசு, இந்திய மக்களைச் சுரண்டவில்லையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீட்டுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஜிஎஸ்டி முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மதிப்பீட்டு நிறுவனமான ஐசிஆர்ஏ வெளியிட்ட அறிக்கையில், “ மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீட்டுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஜிஎஸ்டி முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மதிப்பீட்டு நிறுவனமான ஐசிஆர்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவக் காப்பீட்டு பிரீமியங்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் அதிக நோயாளிகளை காப்பீடு சென்றடைந்து மருத்துவமனைகளுக்கும் பயனளிக்கும்” என்று கூறப்பட்டுள்ளது ஜிஎஸ்டி கவுன்சிலின் 56-வது கூட்டத்தில் ஒப்புதல் அளித்தபடி அனைத்து தனிநர் ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீட்டு பாலிசிகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில் இக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு நிதிச் சேவைகள் துறையில் செயலாளர் என்.நாகராஜு தலைமை வகித்துப் பேசுகையில், “மத்திய அரசின் ஜிஎஸ்டி சீர்திருத்தமானது காப்பீட்டை மிகவும் அணுகக்கூடியதாகவும் செலவு குறைந்ததாகவும் மாற்றியுள்ளது.
இதன் மூலம் நாடு முழுவதும் காப்பீடு பரவலாக சென்றடைவதுடன் காப்பீட்டு நிறுவங்களின் நிதி பாதுகாப்பும் வலுப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரி சீரமைப்பின் பலன்கள் ஏற்கெனவே உள்ள பாலிசிதாரர்கள், வருங்கால பாலிசிதாரர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் முழுமையாக சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும்’’ என்றார்.ஜிஎஸ்டி சலுகைகளை பாலிசிதாரர்களுக்கு வழங்க வேண்டும் என்று காப்பீட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின் தலைவர்கள், தனியார் துறை ஆயுள் மற்றும் ஆயுள் அல்லாத காப்பீட்டு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், நிதி சேவைகள் துறை, காப்பீடு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணைய உயரதிகாரிகள், ஆயுள் காப்பீடு கவுன்சில் மற்றும் பொது காப்பீடு கவுன்சிலின் அதிகாரிகள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.






கருத்துகள்