முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தீபாவளிப் பண்டிகை எப்படி வந்தது -ஒரு பார்வை

தீபாவளிப் பண்டிகையை


முதன்முதலில் கொண்டாடியது எப்போது?


என்ற விவாதம் தற்போது வருவதற்குக் காரணம் கடவுள் மறுப்பு எனும் கொள்கைப் பெயரிலுள்ள சில அமைப்பினர் தான். கடந்த 1000 ஆண்டுகளில் இஸ்லாமிய வழி வந்த முகலாயப் பேரரசின் 600 ஆண்டுகளில் ஆட்சி, அதன் பின் கிருஸ்தவ வழி வந்த பிரிட்டிஷ் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி,  இதில் சத்திரியர்கள், அந்தணர்கள், வைசியர்கள் காலங் காலமாகவே கொண்டாடியே வந்ததற்கு பலவிதமான சான்றாவனங்கள் உள்ளன, ஆனால் சில 600 க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களின் குறுநில மன்னர்கள் காலத்தில் எந்த விழாவும் கொண்டாட முடியாத ஜாதிய அடக்குமுறைகளை சுதந்திர காலம் வரை சில சமூகங்கள் அனுபவித்து வந்தது என்பதே உண்மை, அதாவது 20 சதவீதம் மக்களுக்கு பலகாலம் இட்லி ஆச்சரியம் கலந்த உணவு தான்.

‘‘தீபாவளியை முதன்முதலாகக் கொண்டாடியவன், வதமான நரகாசுரனின் மகனான பகதத்தன் என்கின்றன புராணங்கள்.

‘‘தமிழ்நாட்டில் சோழர்கள் காலம்வரை தீபாவளி கொண்டாடப்பட்டது அறியலாம் ஆனால் முதலாம் குலோத்துங்க சோழன் மட்டுமே தடை விதித்தார், ஆனால் மதுரை மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில்தான் அதுவரை மன்னர் ஆட்சிக் காலத்தில் தீபாவளி கொண்டாடப் பயந்த ஜாதி மக்களால் முதன்முதலாக தீபாவளி கொண்டாடப்பட்டது  ன்பதே வரலாறு.’’திருமலை நாயக்கர் காலத்தில் அதாவது பொது ஆண்டு. 1623-1659 வரை தான் தமிழகத்தில் சத்திரியர் அந்தணர்ர் தவிர்த்து வைசியர் மற்றும் சூத்திரர்கள் தீபாவளிப் பண்டிகையை  மீண்டும் கொண்டாடப்பட்டதென்று கூறப்படுகிறது. சோழர் காலம் வரை தீபாவளி பண்டிகை தமிழகத்தில் கொண்டாடப்படவில்லை என்பது பொய்மான வரலாற்றுத் திரிபு , மனனர் திருமலை நாயக்கர் காலத்தில் தான் மதுரை போன்ற இடங்களில் ஆன்மீகம் அணைவரின் மத்தியில் விரிவடைந்து வளர்ந்தது அதற்கு முன் மன்னர்கள் சைவ வழி வந்த நிலை தான் வைணவ விழா நடைபெறாத நிலை இடையில் தான்.இது அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டதாகவும் சில தரவுகள் கூறுகின்றன.



மஹாபலிச் சக்கரவர்த்தி தீபாவளி அன்று அரியணை ஏறியதாக வாமன புராணம் கூறுகிறது. பேரரசர் சந்திர குப்த மௌரியர் மற்றும் விக்கிரமாதித்யனும் தீபாவளியன்று தான் அரியணை ஏறினார். ராஜ புத்திரர்கள் தீபாவளி அன்று தான் ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்தைக் கொண்டாடி மகிழ்கின்றனர். ஆரிய சமாஜத்தை நிறுவிய தயானந்த சரஸ்வதி தீபாவளியன்று தான் அமரரானார். ஆதிசங்கரர் தீபாவளி அன்று ஞானபீடம் நிறுவினார். வங்காளத்தில் தீபாவளியன்று கல்கத்தாக் காளிக்கு பூஜை செய்கின்றனர்.  ஜைனர்கள் தீபாவளியை மகாவீரர் பரிநிர்வாணம் அடைந்த நாளாகக் கொண்டாடு கின்றனர். மகாராஷ்டிராவில் தீபாவளியை தாம்பூலம் போடும் திருநாள் எனக் கொண்டாடுகின்றனர் தற்போது.ஜப்பானியர்கள் தீபாவளியை மூன்று நாட்கள் விமரிசையாகக் கொண்டாடுகின்றனர்!உத்தரப்பிரதேசத்தில், சீதாதேவியை ஸ்ரீ ராமர் மீட்ட திருநாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

மேற்கு வங்காளத்தில் காளிதேவி வழிபாடாக ‘மகாநிசா’ என்ற பெயரில் தீபாவளியை கொண்டாடு கி்ன்றனர்.

கொல்கத்தாவி்ல் தீபாவளியையொட்டி, ‘பூவாணப் போட்டி’ நடைபெறுகிறது. எவரது வாணம் (பட்டாசு) வானில் அதிக உயரத்தில் சென்று வெளிச்சப் பூக்களைக் கொட்டுகிறதோ, அவரே வெற்றி பெற்றவர் எனகிறது யுகயுகமாய் ஆனால் கடவுள் மறுப்பாளர்கள் இதை ஏற்க மறுக்க அவர் தரப்பில் ஆழ்ந்த வரலாற்று பார்வை சார்ந்த அறிவாற்றல் குறைவு,               


      "இரும்புசெய் விளக்கின் ஈர்த்திரிக் கொளீஇ

நெல்லும் மலரும் தூஉய்க் கைதொழுது…" இது 

(நெடுநல்வாடை: 42-43) கூறும் தீபாவளி மழைகால் நீங்கிய மகா விசும்பில்

குறுமுயல் மறுநிறம் கிளர்மதி நிறைந்த

அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்

மறுகு விளக்குறுத்து மாயை தூக்கிப்

பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய

விழவுடன் அயர வருகத்தில் அம்ம!, "

இது (அகநானூறு – 141ம் பாடல்) கூறும் தீபாவளி                                                  "மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்

தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து

சோவரனும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த

சேவகன் சீர்கேளாத செவியென்ன செவியே

திருமால் சீர் கேளாத செவியென்ன செவியே!…"

இது (சிலப்பதிகாரம்- 17- ஆய்ச்சியர் குரவை- படர்க்கைப் பரவல்) கூறும் தீபாவளி        இப்படி பல சான்றுகள் உண்டு,  தமிழ் என்பது இதுபோன்ற பல்லாயிரம் பக்திநெறி இலக்கியங்கள் மட்டுமே, சுதந்திரம் அடைந்த பின் பொய்யான திரைப்பட வசனங்கள் அல்ல, மன்னர் ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற பொய்யர்கள் தவறான தகவல் பரப்பினால் தண்டனை பலமாகவே கிடைத்திருக்கும்.நரகாசுரனை வதமே, தீபாவளிப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இதுவே செவிவழி அறிந்திருப்போம். உண்மையில், நரகாசுரன் யார்... தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும், தீபம் ஏற்றுவதும், பட்டாசு வெடிப்பதும் ஏன்...? என புராணத்தை அளிவோம் நம் பாரதத் துணைக் கண்டத்தில் வடகிழக்கு மாநிலமாக உள்ள அஸ்ஸாமில் பழமையான நகரமான கௌகாத்தி. புராணகாலத்தில், 'ப்ராக்ஜோதிஷபுரம்' என அழைத்தனர். அதற்கு, 'ஒளிமிக்க நகரம்' எனப் பொருள். அஸ்ஸாம் என்றால், 'இணையற்றது' எனும் பொருள். இவ்வூரைத் தலைநகராக்கி ஆட்சி செய்த நரஹாசுரன். வைகுண்டத்தில், ஜெயன், விஜயன் என்ற காவலர்கள் இருந்தனர். ஒருமுறை பணியில் செய்த தவறால், ஹிரணியன், ஹிரண்யாட்சன் என்ற பெயரில் பூலோகத்தில் பிறந்தனர். இதில் இரணியனை, நரசிம்ம அவதாரம் எடுத்துக் கொன்றார், திருமால். பிரம்மாவிடமிருந்த வேதச்சுவடிகளை எடுத்தபடி பாதாள லோகத்தில் மறைந்தான் இரண்யாட்சன். அந்த சுவடிகளை மீட்க, வராக அவதாரம் எடுத்து பூமியைத் தோண்டினார் திருமால். அப்போது, பூமாதேவிக்கு பிறந்தவன் தான் பௌமன். இதற்கு, 'பூமியின் பிள்ளை' எனும் பொருள். பொறுமைக்கு இலக்கணமானவள் பூமாதேவி. திருமாலின் பிள்ளை என்ற மமதையுடன், தேவர்களைகளை கொடுமைப்படுத்தினான் பௌமன். நடுநடுங்க வைத்தவனை, நரகாசுரன் என்றனர். இந்த பெயரை, நரன் + அசுரன் எனப் பிரிக்கலாம். நரன் என்றால் மனிதன். மனிதனாய் பிறந்து, அசுர குணங்களைக் கொண்டிருந்ததால், இப் பெயர் நிலைத்து விட்டது. தாயைத் தவிர யாராலும், தன்னைக் கொல்ல முடியாத வரத்தைப் பெற்றிருந்த நரகாசுரன். புராண காலத்தில், சத்தியபாமாவாகப் பிறந்து, கிருஷ்ணரைத் திருமணம் செய்திருந்த பூமாதேவி. அம்பு எய்வதிலும், தேரோட்டுவதிலும் பெரும் திறமைசாலி. 'உங்கள் மகனென்ற மமதையில், நரகாசுரன் எங்களை எல்லாம் வதைக்கிறானே...' என கிருஷ்ணரிடம் முறையிட்டனர் தேவர்கள். இதற்கு முடிவு கட்ட, நரகாசுரனின் இருப்பிடம் சென்ற கிருஷ்ணர். மனிதப்பிறப்பெடுத்த பூமாதேவி, முந்தைய பிறவி ஞாபகத்தை மறந்து விட்டாள். எதிரில் நிற்கும் நகரகாசுரன், மகன் என அறியாமலேயே அம்பு எய்து கொன்றாள். அவன் இறப்பை அறிந்து, தீபம் ஏற்றிக் கொண்டாடினர் தேவர்கள்.பின்னரே, அம்பு பட்டு இறந்தது தன் மகனே என தெரியவந்தது. துக்கம் தாங்காமல் தவித்தாள் பூமாதேவி. மகன் கெட்டவனே என்றாலும், இறப்பன்று எல்லாரும் எண்ணெய் தேய்த்து, வெந்நீரில் குளித்து மகிழ வேண்டும். புத்தாடை அணிய வேண்டும். உலகெங்கும் தீபம் ஏற்ற வேண்டும். எண்ணெயில் வாசம் செய்யும் லட்சுமி கடாட்சம், அனைவருக்கும் கிடைக்க வேண்டும். எனவே, இந்த நாளை விழாவாகக் கொண்டாட வரம் பெற்றாள், பூமா. அதன்படியே, வண்ணமயமாகக் கொண்டாடப்படுகிறது தீபாவளி.தீபம் + ஆவளி என்பதே தீபாவளி. ஆவளி என்றால், 'வரிசை' என்று பொருள் தரும். வரிசையாக தீபம் ஏற்றி மகிழ்ந்திருப்பதை குறிப்பதற்கே இந்த சொல் பயன்படுகிறது. பட்டாசு என்பதும் பட்டுடை என்பதம் நமக்கு சீனாவின் கொடை பிற்காலத்தில் விழாவில் இணைந்தது, குளிர் பருவக் காலத்தில் தான் வருகிறது,தவறு செய்பவர் யாராக இருந்தாலும் உரிய தண்டனை உண்டு என்பதை, உலகுக்கு உணர்த்தும் பண்டிகை தான், தீபாவளி. தவறுகளை தவிர்த்து வாழப் பழகுவோம். பிடிவாதகாரர்களிடம் வாதாடக்கூடாது, முடிவெடுத்தவரிடம் விவாதிக்க கூடாது, புரிந்து கொள்ளாதவரிடம் பேசவே கூடாது.

எந்நிலையிலும் உதவாமல் ஓரமாக ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பவர்களைவிட ஓடிச்சென்று உதவுபவர்களுக்கே பழியும் பாவமும் நிறைய சேருகிறது.

எல்லா இடங்களிலும் நேர்மையாக இருக்க நினைப்பவர்கள் பணத்தை விட பகையைத் தான் வேகமாகச் சம்பாதிக்கிறார்கள்.      காலத்திடம் விட்டுவிடுங்கள் உங்களிடம் நடித்தவர்கள் விரைவில் மேடையை விட்டு ஓடிவிடுவார்கள்.இதுவரையில் கற்பித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் இடரில்லாத மாணவனாக இருப்பதே சிறு வயது ஒழுக்கம்.  தற்போதய நிலையில் லஞ்சம் லாவண்யம் ஊழல் முறைகேடு இவை தான் நரகாசுரன் அதற்கு எதிராக நமது இதழ்  என்றும் தீபமாக ஒளிக்கும் ஜொலிக்கும் நமது வாசகர்கள் செய்தியாளர்கள், சென்னை ஆப்செட் அச்சகத்தினர், பப்ளிக் ஜஸ்டிஸ் உலக வெளியீட்டாளர் கூகுள் நவ்லீஹா மற்றும் இதழ் விற்பனை முகவர்கள், விளம்பரதாரர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...