தகப்பன் செய்த தொழிலை மகன் செய்த காலம் ஒன்றுண்டு
அது விவசாயம் மற்றும் சில குலத்தின் பரம்பரைத் தொழிலாக நடந்த இந்தியா சுதந்திரமடைந்து மக்கள் 1947 ஆம் ஆண்டு கடந்து 1985 ஆம் ஆண்டு வரை 30 சதவீதமிருந்த கிராமத்து மக்கள் செய்த நிலை என்பது தற்போதில்லை காரணம் கல்வி சுதந்திரம், சமத்துவம், சட்டம் உள்ளிட்ட தற்சார்பு நிலை, ஆனால் விவசாயமற்றுப்போய் புஞ்சை நிலங்களை மனையிடமாக மாற்றி தற்போது இடப்பற்றாக்குறை காரணமாக நஞ்சை நிலங்களையும் மனையிடமாக மாற்றும் நிலை வந்த பின்னர் இன்னும் கதாநாயகன் தகப்பன் அவித்த அதே இட்லிச் சட்டியில் அவிக்கும் ஆவி பறக்கும் இட்லி என்ற நிலை என்பது கிராமத்தில் தற்போது எங்குமில்லை திண்டுக்கல் தலைப்பாக்கட்டி நாயுடு கடை தகப்பன் காலத்தில் சிறியது மகன் காலத்தில் விரிவடைந்து உலகம் முழுவதும் பரவியது வியாபாரத் தந்திரம் மூலம் ஒரு கார்பொரேட் வர்த்தக முறை விற்பனை
தந்தை காலத்தில் முதலில் இருந்த தொழில் தர்மமோ ருசியோ இப்போதில்லை. அதே போல் தான் மதுரை அண்ணாமலை பிள்ளை ஆரம்பித்து நடத்தி பின்நாளில் பல கிளைகள் உள்ள முருகன் இட்லி கடை ஆனால் அவர்கள் நியாயம் தர்மம் இல்லாமல் தற்போது பணம் பார்க்கிறார்கள், தந்தை காலத்தில் ஒரு தர்மமிருந்தது. அசைவ உணவை தர்ம நியாயப்படி வழங்கிய சுவை மனம் கொண்டு நடத்திய சென்னை வேலு மிலிட்டரி மற்றும் பொன்னுச்சாமி ஹோட்டல், தந்தை காலத்தில் சிறப்பாக இயங்கி மகன் காலத்தில் மறைந்து போனதே வடக்கம்பட்டி முனியாண்டி விலாஸ் ஹோட்டல் நிலை மறந்து தற்போது அஞ்சப்பர் ஹோட்டல் ஆரம்பித்து கார்ப்பரேட் விலை முன் காணாமல் போகக் காரணம், மன்வாசனை மறந்துபோன அடுத்த தலைமுறை தான். எனது உறவினரில் கூட தந்தை செய்த உணவகத்தை மகன் நடத்தும் நிலையில் அதே அடுப்பு அதே ஆட்டுக்கல் எனக் கிடையாது ஏதோ கிராமம் அறியாமல் நகர வாழ்வியல் கொண்ட மக்களை ஏமாற்றி காதில் பூ சுற்றி ராஜ்கிரண் அவித்த இட்லியை பல முறை வேகவைத்த தனுஷ் திரைக்கதையில் எதார்த்தமில்லை. தென்மாவட்டங்களில் வாஜ்பாய் வெளியுறவு அமைச்சராகி சாமானிய மக்களுக்கு கடவுச் சீட்டு வழங்கி பிழைத்து வந்த மக்கள் தான் கூரை வீடு ஓட்டு வீட்டுக்கும் ஓட்டு வீடு தார்சாவும் மாறியது தான் உண்மை காரணம் உழைப்பு யாரும் வெளிநாடே போகக்கூடாதா? அப்படி வெளிநாடு சென்றுவிட்டு வந்தால் தாய் மறந்துவிடுவாரா?.. அப்பா செய்யும் தொழிலைத்தான் மகன் செய்ய வேண்டுமா? யாருமே அந்தக் கிராமத்தை விட்டு நகரக்கூடாதா? இந்த படத்தை தயாரித்தவரின் தாத்தா வாங்கியவரின் தாத்தா நடித்தவரின் தாத்தா எல்லோரும் கிராமத்தில் இருந்து புறப்பட்டு வந்நவர்களே
இந்தப் படத்தில் யார்தான் மாவாட்டவில்லை: கதை நடக்கும் ஊரில் 40 பேர்கூட இல்லை. ஆனால் எஞ்சாமி பாடலுக்கு 4,000 பேர் திருவிழா என ஆடுகிறார்கள். அவர்கள் யார் கதைக்கு தொடர்பில்லை கட்டப்பாவாக நடித்த சத்யராஜ் இப்போதெல்லாம் இந்தாப்பா என்று கொடுத்தால் நடித்துவிடுகிறார். அந்தப் படத்தில் வரும் ஆட்டுக்கல்லில் நடிகர் சமுத்திரகனியைத் தவிர்த்து எல்லோருமே மாவாட்டுகிறார்கள். மாவாட்டாத ஆளே இல்லை. இட்லி ஆறிப் போய்விட்டது. ஷோவெல்லாம் இனி பட்டினி கிடக்கும் என்ற விமர்சனம். படம் எப்படி இருக்கிறது என்று என்னை கேட்டால் இந்த இரண்டு இட்லிக்கு எதற்காக நான்கு வகை சட்னி" என்கிறார் ஒரு நடிகர். தகப்பன் மகன் கதைப்படி இனக்கமான காட்சி அமைப்பு இல்லை, இருந்தாலும் புரிந்து கொள்ளாமல் வாழும் பணம் படைத்த அயல் நாட்டு வாழ்வில் திளைத்த ஒரு குடும்பத்தின் உறவுக்கும் கிராமத்தில் ஏழை தகப்பன் மகன் உறவுக்கும் பாசத்திற்குமான நிலையில் எது இறுதி அளவுகோள் என கதை உணர்த்தும் நிலை. பார்த்திபன் பாத்திரம் நிறைவு இந்தப்படம் தற்போது அணைத்து மக்கள் பார்க்கும் வகையில் எடுத்து அது வெற்றி பெற்றால் தொடர்ந்து மற்றவர்கள் தோசைக்கடை, இடியப்பக் கடை. வடநாட்டு சப்பாத்திக் கடை எனப் பெயர் கொண்ட படங்கள் இனி வரும். இட்லி கடையில் கன்றுக் குட்டி கூட நடிப்பில் நித்யா மேனன் போல வாழ்கிறது "என் அப்பா இறந்து 1வருடம்,அம்மா இறந்து 6மாதம் ஆகிறது.அவங்க இன்னும் என் வீட்டில் வாழ்கிறார்கள்.
"இட்லி கடை" என்னை இன்னும் என்னை எனர்ஜியாக ஓட வைக்கறது" தனுஷ் வார்த்தை 90s கிராமத்தில் இருந்து புலம் பெயர்ந்த கிட்ஸ்க்கு இட்லி கடை’யில் தானும் ஒரு பாத்திரமாக அதுவும் கைதட்டல் வாங்கும் ஒரு கதாபாத்திரமாக உள்ள நிலையில் அஹிம்சை வெல்லும் என இன்று அக்டோபர் 2 மக்கள் நினைவில் வாழும் மகாத்மா காந்தி கூட இப்படி ஒரு திரைப்படத்தை எடுக்கத் தயங்குவார். காரணம் ரிவேஞ் இரத்தம்தான் box office-ன் வண்ணமாகவே உள்ளது.
பூவிற்கு நாரின் பெருமையை விட தன் வேரின் பெருமை தெரிய வேண்டும் தற்காலத்தில் சொந்த அப்பத்தா பெயர் கூடத் தெரியாத பிள்ளைகள் பலர் வந்து விட்ட நிலைமயில் அதுபோல பிள்ளைகளுக்கு தங்களின் பெற்றோரையும் பூர்வீகத்தையும், குலதெய்வத்தையும் அடையாளப்படுத்தும் விதமாய் செய்திருப்பது பேசு பொருள். கண்கலங்கியது பல இடங்களில். நம் மண்ணின் கலைஞன் இளவரசு பாத்திரமாகவே பிரகாசிப்பார். அதுபோல நித்யா மேனன் நடிப்பு சிறப்பு.
அன்பால் வளர்க்கப்பட்ட மகனுக்கும், வசதியாய் வளர்த்து அடம் பிடிக்கும் மகனுக்குமான மோதலை மையமாக உள்ள கதை மொத்தத்தில் கருத்து வசனம் கொஞ்சம் குறைவாக, காட்சிகள் மூலம் திரைக்கதை சற்று தெளிவாக நிறைவாக இருந்திருந்தால் படம் குறை கூற முடியாது
இட்லி ஆவி போல் ஜீவி இசை நன்று ஒரு தலைமுறையாக கிராம வாழ்வியல் மறந்து போன மக்களுக்கு ஏதோ அறைகுறையாக பண்பாட்டை கலாச்சாரத்தை அறைத்து இட்லி கடை மாவுகள் வந்து கொண்டிருக்கும். இதில் கதைக் களத்தில் ஒரு உண்மை மறைந்து போனது இட்லிக் கடை ராஜ்கிரண் நடத்தும் காலத்தில் கிராமத்தில் மக்கள் ஹோட்டல் செல்லும் பழக்கம் போன தலைமுறை மக்கள் மத்தியில் அறவே இல்லை என்பதை தடம் பதிவு செய்யத் தவறியது தான் இயக்குனர் செய்த பிழை, மொத்தத்தில் இது வேகாத இட்லி வியாபார இட்லி.







கருத்துகள்