முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஹமாஸ் அமைப்பினருடன் இஸ்ரேல் நேற்று முதல் தொடரும் பேச்சுவார்த்தை

ஹமாஸ் அமைப்பினருடன் இஸ்ரேல் நேற்று முதல் பேச்சுவார்த்தை

20 அம்ச அமைதி திட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கான கெடு முடிந்தநிலையில் ஹமாஸ் அமைப்பினருடன் இஸ்ரேல் தரப்பு நேற்று திங்கட்கிழமை துவங்கி பேச்சுவார்த்தை இரண்டாம் நாளாக நடக்கிறது.; பாலஸ்தீனத்தை நிர்வகிக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்குமிடையே 2 ஆண்டுகளாக போர் நீடிக்கிறது. அதை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 20 அம்சம் கொண்ட அமைதித் திட்டத்தை பரிந்துரைந்தார்.




காசாவை ஒரு பயங்கரவாதமற்ற, அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல் இல்லாத அமைதிப் பூங்காவாக மாற்றுவதை முக்கிய அம்சமாக இந்தத் திட்டம் கொண்டுள்ளது. செப்டம்பர் மாதம் 30- ஆம் தேதி வெள்ளை மாளிகையில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்தத் திட்டத்திற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒப்புதல் தெரிவித்தார். ஹமாஸ் அமைப்பினர் ஒப்பந்தத்தை ஏற்க 72 மணிநேர கெடுவும் விதிக்கப்பட்டு கெடு முடிந்தநிலையில் ஹமாஸ் அமைப்பினர் 20 அம்ச திட்டத்தை ஏற்றுக் கொண்டதாக அறிவித்தது. குறித்து விரிவாகப் பேச மத்தியஸ்த நாடுகளில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தது. அதைத் தொடா்ந்து காசாவில் உள்ள சில பகுதிகளிலிருந்து படைகளைத் திரும்ப பெறுவதாக நெதன்யாகு அறிவித்தார். டொனால்ட் டிரம்பின் அமைதித் திட்டத்தை செயல்படுத்தத் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


நெதன்யாகுவின் இந்த நடவடிக்கையை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வரவேற்றுள்ளார்.  சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, இஸ்ரேல் தனது படைகளை வெளியேற்ற ஒப்புக்கொண்டுள்ளது. இதனை ஹமாஸ் அமைப்பினரிடம் பகிர்ந்துள்ளோம். ஹமாஸ் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியதும், போர் நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வரும். பணயக் கைதிகள் பரிமாற்றம் தொடங்கும். அமைதி நிலவும். 3 ஆயிரம் ஆண்டு பேரழிவின் முடிவு நெருங்குகிறது. அனைவருக்கும நன்றி. நல்ல செய்திக்காக காத்திருங்கள்” எனக் கூறியுள்ளார் .அனைத்துப் பணயக் கைதிகளையும் விடுப்பதாக ஹமாஸ் ஒப்புக்கொண்டதையடுத்து அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடத்த டிரம்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.


அதனை தொடர்ந்து எகிப்து தலைநகர் கெய்ரோவில் பேச்சுவார்த்தை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் 20 அம்ச திட்டம் குறித்து விரிவாக பேசப்பட இருக்கிறது. இதில் இஸ்ரேல் தரப்பில் மூலோபய மந்திரி ரான் டோமர், கைதிகள் பரிமாற்ற விவகார மந்திரி கால் ஹிர்ஸ்ச் மற்றும் மொசட் உயரதிகாரிகள் கலந்து கொண்டார்கள். ஹமாஸ் தரப்பில் முக்கிய தளபதிகள் கலந்து கொண்டனர். மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்காக மத்திய கிழக்காசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்கோப், டிரம்பின் மருமகனும் அவரின் தனி ஆலோசகரான ஜேரட் குஷ்னர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர், சர்வதேச அளவில் கடும் கண்டனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இதனையடுத்து போர் நிறுத்த பேச்சுவார்த்தை எகிப்தில் நேற்று தொடங்கியது. இன்று இரண்டாவது நாளாக பேச்சுவார்த்தை நீடிக்கிறது.இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய பிரதிநிதிகளுக்கு இடையிலான மறைமுகப் பேச்சுவார்த்தைகள் ஷர்ம் எல்-ஷேக்கில் நேற்று தொடங்கியது. அமெரிக்கா முன்மொழிந்த போர்நிறுத்தத் திட்டத்தின் நிபந்தனைகளை இரு தரப்பும் விவாதிக்கத் தொடங்கின.ஹமாஸ் கைது செய்து வைத்திருக்கும் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பது, பதிலுக்கு இஸ்ரேல் கைது செய்து வைத்திருக்கும் பாலஸ்தீனக் கைதிகளை விடுதலை செய்வது, என இரு தரப்பும் கைதிகள் பரிமாற்றம் செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக எகிப்து உளவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தையை எகிப்து மட்டுமல்லாது கத்தார் தலைவர்களும் வழி நடத்தி வருகின்றனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்வைத்த போர்நிறுத்தம் மற்றும் பரந்த அமைதி செயல்முறையைத் தொடங்குவதற்கான திட்டத்தின் அடிப்படையில் இந்த பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிடுவது, காசாவிலிருந்து இஸ்ரேலிய படைகளை கொஞ்சம் கொஞ்சமாக வாபஸ் பெறுவது, பணயக்கைதிகள் விடுதலைக்கு பதிலாக, காசாவில் அரசியல் மாற்றம் ஏற்படுத்துவது ஆகியவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முன்வைத்துள்ள திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஹமாஸின் பேச்சுவார்த்தைக் குழுவை மூத்த தூதர் கலீல் அல்-ஹய்யா வழிநடத்துகிறார். இவர் சமீபத்தில் தோஹாவில் நடந்த இஸ்ரேலிய தாக்குதலிலிருந்து தப்பினார். பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன் அவர் எகிப்திய உளவுத்துறை அதிகாரிகளைச் சந்தித்தார். பாலஸ்தீனம் இஸ்லாமியர்களின் நிலப்பரப்பாகும். ஆனால் இங்கு குறிப்பிட்ட அளவுக்கு நிலத்தை வாங்கிக் குடியேறிய இஸ்ரேலியர்கள், கொஞ்சம் கொஞ்சமாக பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்தனர். குறிப்பாக காசாவை ஒரு திறந்தவெளிச் சிறையாக மாற்றினர். இதற்கு எதிராகக் குரல் எழுப்பியவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில்தான் கடந்த 2023 ஆம் ஆண்டு இஸ்ரேல் மீது, பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. அன்று துவங்கி இன்று வரை இஸ்ரேல் ராணுவம், பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் 60,000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். போர் நிறுத்தம் தொடர்பாக சர்வதேச நாடுகள் பல வகையில் வலியுறுத்தியும் இஸ்ரேல் ராணுவம் அதை ஏற்கவில்லை  என்பதே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...