பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமன வழக்கு டிசம்பர் மாதம் 2 ஆம் தேதிக்கு தடை விதிக்காமல் தள்ளி வைத்தனர்.
உச்ச நீதிமன்றத்தில் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர் நியமன சட்டமன்ற மசோதா தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடையை நீக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்களை நியமனம் செய்ய மாநில வேந்தரான ஆளுநருக்குப் பதில், மாநில அரசே முதல்வரே நியமிக்கும் மசோதா தமிழ்நாடு சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் தரப்பில் ஒப்புதல் வழங்கபடாமல் இருந்தது.
இதனையடுத்து இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத் தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்து உத்தரவிட்டது. மேலும் ஆளுநர் நிலுவையில் வைத்திருந்த 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றமே தனது தனி அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் வழங்கியது.
இதனிடையே, துணைவேந்தர் நியமனம் தொடர்பான சட்டத்தை தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டது. இது பல்கலைக்கழக மானியக் குழுவின் UGC விதிகளுக்கு எதிராக இருப்பதாக வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தமிழ்நாடு அரசின் சட்டத்துக்கு தடைவிதித்தது.
இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி சூரியகாந்த் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழ்நாடு அரசு தரப்பில், ஆஜரான வழக்கறிஞர்களின் வாதங்களைக் கேட்காமலேயே பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்களை நியமிக்கும் சட்டத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் 14 பல்கலைக்கழகங்களில் இன்று துணை வேந்தர்களை நியமிக்க முடியவில்லை என வாதிடப்பட்டது.
மத்திய அரசு தரப்பில் செய்த வாதமானதில், குடியரசுத் தலைவரின் கேள்வி வழக்கில் முடிவு வெளியான பிறகு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என வாதிட்டனர்.
உடனடியாக தமிழ்நாடு அயசு தரப்பில், இந்த வழக்கத்திற்கும் குடியரசுத் தலைவர் கேள்வி வழக்கிற்கும் எந்தத் தொடர்புமில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தடையை உடனடியாக நீக்கி உத்தரவிட வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை டிசம்பர் மாதம் 2 ஆம் தேதிக்கு தடை விதிக்காமல் தள்ளி வைத்தனர்.


கருத்துகள்