சௌதி அரேபியா மெக்காவிலிருந்து மதீனா நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹஜ் உமாரா யாத்ரீகர்கள்
பயணித்த பேருந்து, மதீனாவில் இருந்து 25 கிலோ மீட்டர். தொலைவில் டேங்கர் லாரியுடன் மோதிய கோர விபத்தானது நவம்பர் 17, 2025 அதிகாலை ஒன்று முப்பது மணிக்கு தீப்பிடித்ததில், ஹைதராபாத்தைச் சேர்ந்த 45 இந்திய ஹஜ் பயணிகள் உயிரிழந்தனர். முப்ரிஹாட் அருகே இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணி அளவில் இந்தக் கோர விபத்து நிகழ்ந்தது.
பேருந்தில் மொத்தம் 46 பேர் பயணித்ததாகவும், மோதிய வேகத்தில் பேருந்து தீப்பிடித்ததால், ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்ததாகவும் தகவல்கள் உறுதிப்படுத்தும் விபத்தில் பலியானவர்களில் பெரும்பாலானோர் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரைச் சேர்ந்தவர்களாவர்.
விபத்து குறித்து ஹைதராபாத் காவல்துறை ஆணையர் வி.சி. சஜ்ஜனார் பேசுகையில், "நவம்பர் 9ஆம் தேதி ஹைதராபாத்திலிருந்து சௌதி அரேபியாவுக்கு 54 பேர் ஹஜ் பயணப்பட்டனர். இவர்களில் 8 பேர் தனியாகப் பயணிக்க முடிவெடுத்ததால் தப்பினர். மீதமுள்ள 46 பேர் மக்காவிலிருந்து மதீனாவுக்குப் பேருந்தில் புறப்பட்டனர். அந்தப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்தனர்," என்றார்.
விபத்தில் சிக்கியவர்கள் ஹைதராபாத்தின் மல்லேபள்ளி, ஆசிப்நகர் மற்றும் ஃபாலக்னுமா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்தது. பிரதமர் மற்றும் முதல்வர் வேதனை
இந்தத் துயரச் சம்பவம் குறித்து நாட்டுத் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலையும் அதிர்ச்சியையும் தெரிவித்தனர் பிரதமர் நரேந்திர மோடி தனது 'எக்ஸ்' பக்கத்தில், "இந்த விபத்து குறித்து மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன். ரியாதில் உள்ள எங்கள் தூதரகமும், ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகமும் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றன. சவுதி அரேபிய உயர் அதிகாரிகளுடன் நமது வெளியுறவு அதிகாரிகள் நெருங்கிய தொடர்பில் உள்ளனர்," என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
தெலங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி அதிர்ச்சி தெரிவித்து, விபத்து குறித்த முழு விவரங்களையும் உடனடியாகக் கண்டறிந்து, தேவையான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி-க்கு உத்தரவிட்டார். மத்திய வெளியுறவுத் துறை மற்றும் சௌதி அரேபியத் தூதரக அதிகாரிகளுடன் உடனடியாகத் தொடர்பு கொள்ளவும் அவர் அறிவுறுத்தினார். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், "மதீனாவில் இந்தியர்கள் சம்பந்தப்பட்ட விபத்து குறித்து நான் ஆழ்ந்த அதிர்ச்சியடைந்துள்ளேன். துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்" என்று தனது X பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குத் தகவல் அளிக்கவும், உதவவும் உடனடியாக இரண்டு இடங்களில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன:
தெலங்கானா தலைமைச் செயலகம் (ஹைதராபாத்):
உதவி எண்கள்: +91 79979 59754 மற்றும் +91 99129 19545
தெலங்கானா பவன் (டெல்லி):
உதவி எண்கள்: +91 98719 99044, +91 99583 22143, மற்றும் +91 96437 23157
இந்தியத் தூதரகம் (ஜெட்டா):
ரியாதில் உள்ள இந்தியத் தூதரகமும், ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகமும் முழு ஆதரவை வழங்குகின்றன. ஜெட்டாவில் 8002440003 என்ற கட்டணமில்லா உதவி எண்ணுடன் 24x7 கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்திலிருந்து சென்றவர்களில் 20 பேர் பெண்கள், 11 பேர் குழந்தைகள்.
ஒரு விபத்தில் உயிர் பிழைத்தால் அது கடவுளின் அருளால் தப்பியதாகச் சொல்கிறார்கள்.
ஆனால் இது போன்ற சம்பவங்களில் 'கடவுளை' கேட்க, சார்ந்தோர் இருப்பதே இல்லை. 45 நபர்கள் பேருந்தில் பயணித்தவர்களின் முழுமையான பட்டியல்
பலியானவர்கள் அனைவரும் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள். இறந்தவர்களில் மல்லேப்பள்ளி பஜார் காட் பகுதியைச் சேர்ந்த 16 பேர் உள்ளனர். பஜார் காட்டில் இறந்தவர்கள் ரஹிமுன்னிசா, ரஹ்மத் பி, ஷெஹ்னாஸ் பேகம், கௌசியா பேகம், காதர் முகமது, முகமது மௌலானா, சோயிப் முகமது, சோஹைல் முகமது, மஸ்தான் முகமது, பர்வீன் முகமது, ஜாகியா முகமது, ஷௌகத் முகமது, முகமது, ஜாகத் முகமது, ஃபர்ஹெமன் முகமது, ஃபார்ஹெமன் முகமது, முகமது அலி. என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
45 நபர்கள் பட்டியல்:
1.இர்பான் அகமது – ஆண்
2.ஹுமேரா நஸ்னீன் – பெண்
3.சபிஹா சுல்தானா – பெண்
4.அகமது ஹம்தான் – ஆண்
5.அகமது இசான் – ஆண்
6.ஷேக் நசீருதீன் – ஆண்
7.பாத்திமா உமைசா – பெண்
8.மரியம் பாத்திமா – பெண்
9.ஷேக் ஜான் உதீன் – ஆண்
10.பாத்திமா மெஹ்ரிஷ் –பெண்
11.ஷாசான் அகமது முகமது – ஆண்
12.ரிடா தசீன் – பெண்
13.ஷேக் உசைருதீன் – ஆண்
14.அக்தர் பேகம் –பெண்
15.அனீஸ் பாத்திமா – பெண்
16 அமீனா பேகம் – பெண்
17.சாரா பேகம் – பெண்
18.கான் சலீம் – ஆண்
19.ஷபானா பேகம் – ஆண்
20.சையத் ஹுசைஃபா ஜாஃபர் – ஆண்
21.ரிஸ்வானா பேகம் – பெண்
22.ஷேக் சலாவுதீன் – ஆண்
23.ஃபரானா சுல்தானா – பெண்
24.தஸ்மியா தஹ்ரீன் – பெண்
25.சுல்தானா சனா – பெண்
26.முகமது அப்துல் காதீர் –ஆண்
27.கௌசியா பேகம் – பெண்
28.பேகம் ஷெனாஸ் – பெண்
29 முகமது அலி – ஆண்
30.ரஹ்மத்தேப் – ஆண்
31.ரஹீம் உன்னிசா – பெண்
32.உர் ரஹ்மான் முகமது சோயப் – ஆண்
33.ராயீஸ் பேகம் – பெண்
34.பேகம் ஷாஜஹான் – பெண்
35.அல் அமுதி சாரா மஹ்மூத் –பெண்
36.முகமது மஞ்சூர் –ஆண்
37.ஜாஹீன் பேகம் –பெண்
38.ஃபர்ஹீன் பேகம் – பெண்
39.பேகம் ஷௌகத் – பெண்
40.பேகம் ஜக்கியா – பெண்
41. பர்வீன் பேகம் – பெண்
42. முகமது மஸ்தான் –ஆண்
43.முகமது சோஹைல் – ஆண்
44.முகமது மௌலானா –ஆண்
45.அப்துல் கனி அகமது சஹீர் ஷிரஹட்டி –ஆண்




























கருத்துகள்