முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் பயணம்

இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் பயணம் 1952 முதல், இந்திய சர்வதேச திரைப்பட விழா (ஐஎப்எப்ஐ),  சர்வதேச திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு 


அங்கீகாரம் பெற்ற தெற்காசியாவின் ஒரே விழாவாக இருந்து வருகிறது. இது உலகளாவிய சினிமா  அந்தஸ்தைக் குறிக்கிறது. உலகின் சிறந்த திரைப்படங்களை இந்திய பார்வையாளர்களுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சியாகத் தொடங்கிய இது, பல தசாப்தங்களாக, கண்டங்கள் முழுவதிலுமிருந்து திரைப்படத் தயாரிப்பாளர்கள், சினிமா ஆர்வலர்கள் மற்றும் படைப்பாற்றல் நிபுணர்களுக்கான துடிப்பான சந்திப்புக் களமாக மாறியுள்ளது.

இந்த ஆண்டு, நவம்பர் 20 முதல் 28 வரை விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இது கோவாவில் மற்றொரு துடிப்பான பதிப்பை உயிர்ப்பிக்கிறது.

ஐஎப்எப்ஐ 2025- புதுமை, உள்ளடக்கம் மற்றும் ஒரு உலகளாவிய சினிமா காட்சி:


இந்த ஆண்டு, நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறும் 56-வது சர்வதேச திரைப்பட விழா, ஐஎப்எப்ஐ-யின் வளர்ந்து வரும் உலகளாவிய அந்தஸ்தைப் பிரதிபலிக்கும் ஒரு விரிவான விழாவாக அமையும்.  இந்தப் பதிப்பு,  ஜப்பானுடனான விழாவின் சர்வதேச கூட்டாண்மைகளை ஆழப்படுத்துகிறது. ஸ்பெயின் கூட்டாளர் நாடாக இணைகிறது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியா ஸ்பாட்லைட் நாடாக விழாவில் நுழைகிறது. ஒவ்வொன்றும் உலகளாவிய உரையாடலை வளப்படுத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்புகள், நிறுவன ஒத்துழைப்புகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளைக் கொண்டுவருகின்றன.

இந்த ஆண்டின் இந்திய சர்வதேச திரைப்பட விழா, 13 உலக பிரீமியர்கள், 5 சர்வதேச பிரீமியர்கள் மற்றும் 44 ஆசிய பிரீமியர்கள் உட்பட 81 நாடுகளிலிருந்து 240+ படங்களின் மிகச்சிறப்பான வரிசையை வழங்குகிறது. 127 நாடுகளிலிருந்து 2,314 சமர்ப்பிப்புகள்  விழாவின் சிறப்பம்சமாகும்.


பிரேசிலிய எழுத்தாளர் கேப்ரியல் மஸ்காரோவின் தி ப்ளூ டிரெயில் தொடக்கப்படமாக திரையிடப்படுகிறது.  மூன்று முக்கிய சர்வதேச போட்டிகளில் ஐந்து கண்டங்களில் இருந்து 32 படங்கள் இடம்பெறும், இது முதல் முறையாக இந்திய பார்வையாளர்களுக்கு ஆண்டின் மிகவும் பிரபலமான தலைப்புகளில் சிலவற்றைக் கொண்டுவருகிறது.

இந்திய சினிமாவின் மையப் பாரம்பரியங்களைக் கொண்டாடும் வகையில்,  குரு தத், ராஜ் கோஸ்லா, ரித்விக் கட்டக், பி. பானுமதி, பூபன் ஹசாரிகா, சலீல் சவுத்ரி ஆகியோரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும். மீட்டெடுக்கப்பட்ட தலைசிறந்த படைப்புகள் திரையிடப்படும்.

நடிகர் ரஜினிகாந்தின் பொன்விழா:


இதில், புகழ்பெற்ற நடிகர் திரு ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக கௌரவிக்கப்படுகிறார். இது இந்திய திரைப்பட கலாச்சாரத்தில் அவரது நீடித்த செல்வாக்கைக் கொண்டாடும் ஒரு மைல்கல்லாகும். நிறைவு விழாவில் அவர் பாராட்டப்படுவார், அவரது புகழ்பெற்ற படைப்புகள், பரவலான புகழ் மற்றும் பல தசாப்தங்களாக இந்திய கதைசொல்லலை வடிவமைப்பதில் அவரது பங்களிப்பு அங்கீகரிக்கப்படும்.


இந்திய பனோரமா 2025-ல்  25 கதைத் திரைப்படங்கள், 20 கதை  அல்லாத படங்கள் மற்றும் 5 அறிமுக திரைப்படங்கள் இடம்பெறும். தொடக்க திரைப்படம் அமரன் (தமிழ்), கதை அல்லாத படம் ககோரி.

முன்னர் பிலிம் பஜார் என்று அழைக்கப்பட்டு இப்போது வேவ்ஸ் பிலிம் பஜார் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்தியாவின் முதன்மை திரைப்படச் சந்தை 2007 முதல் ஆசியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க இணை தயாரிப்பு மற்றும் உள்ளடக்க-கண்டுபிடிப்பு தளங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் இது, இந்திய கதைசொல்லிகள், உலகளாவிய தயாரிப்பாளர்கள், விழா கண்காணிப்பாளர்கள், தொழில்நுட்ப கூட்டாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் நாளைய திரைப்படங்களை வடிவமைக்க ஒன்றிணைக்கும் சந்திப்பு மைதானமாக மாறியுள்ளது.


கலைஞர்கள், பார்வையாளர்கள், படைப்பாளிகள் மற்றும் சமூகங்களை ஒன்றிணைப்பதில், எல்லைகள், மொழிகள் மற்றும் கற்பனைகளுக்கு அப்பால் மக்களை இணைக்கும் சினிமாவின் நீடித்த சக்திக்கு ஐஎப்எப்ஐ ஒரு சான்றாக உள்ளது. கோவா மற்றொரு மறக்கமுடியாத பதிப்பை நடத்தத் தயாராகி வரும் நிலையில், நம்பிக்கை, படைப்பாற்றல் மற்றும் இன்னும் சொல்லப்படாத கதைகளில் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் திரைப்பட விழா எதிர்நோக்குகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...