முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிலுவம்பாளையம் பழனிச்சாமிக்கு குள்ளம்பாளையம் செங்ஙோட்டையன் வைத்த செக்மேட்

கோபிச்செட்டிப்பாளையத்தில், நேற்று செய்தியாளர் சந்திப்பில் முன்னால் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறிய தகவல் ,:

"முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா இருந்த போதும், மறைவுக்குப் பின்பும் மூன்று முறையும் ஓ.பன்னீர்செல்வமே முதல்வராக்கப்பட்டார். தகுதி உள்ளவர் என்றால், இந்த சிலுவம்பாளையம் பழனிச்சாமியை ஏன் முதல்வராக்கவில்லை? அந்தளவுக்கு நம்பிக்கையானவர் இந்தப் பழனிச்சாமி.

அ.தி.மு.க., ஒன்றுபட வேண்டுமென குரல் எழுப்பிய என்னை, கட்சியிலிருந்து நீக்கியுள்ளார் இந்த பழனிச்சாமி.

என்னையெல்லாம் கட்சியில் இருந்து நீக்கும் இந்த பழனிச்சாமியை பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா நீக்கினார். கடந்த 2012 ஆம் ஆண்டில் ஜெ.ஜெயலலிதா என்னையும் நீக்கினார்.

அ.தி.மு.க.,வில் அனைவரையும் அரவணைத்துச் சென்றவர் ஜெ.ஜெயலலிதா.  இப்போது அந்த நிலை இல்லை. இது கட்சியை பலவீனப்படுத்தும்.



என்னை டில்லிக்கு அழைத்ததும் பாரதிய ஜனதா  கட்சி தான். அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்கச் சொன்னதும், பாரதிய ஜனதா கட்சி தான். நானும் அதைத்தான் சொன்னேன். அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்கவும், ஆட்சியைப் பிடிக்கவும் உதவ வேண்டுமென, பாரதிய ஜனதா கட்சியின்  தலைமையிடம் வேண்டுகோள் விடுத்தேன்.

ஆனால், முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா வாழ்ந்த, நீலகிரி மாவட்ட ம் கோடநாடு எஸ்டேட் இல்லத்தில் நடந்த கொலையில், சி.பி.ஐ., விசாரணை கேட்கவில்லை. இதற்கான காரணத்தை, சிலுவம்பாளையம் பழனிச்சாமியிடமிருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

கொச்சைப்படுத்தியவர் என்னை அமைச்சராக்கியதாக இந்தப் பழனிச்சாமி கூறுகிறார். ஆனால், என்னைப் போன்றவர்கள் முன்மொழியவில்லை என்றால், அவர் முதல்வராகி இருக்க முடியாது. கொல்லைப்புறமாக முதல்வரானவர் இந்த பழனிச்சாமி. தன்னை முதல்வராக்கிய வி. கே. சசிகலாவையே கொச்சைப் படுத்தியவர்.

'கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில், 45 ஆண்டுகள் சிற்றரசர் போல வாழ்ந்தார். தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை' என, என் மீது இந்த பழனிச்சாமி குற்றஞ்சாட்டியிருக்கிறார்.



'ஆனால், 'எடப்பாடியில் இல்லாத அளவுக்கு, கோபிசெட்டிபாளையத்தில்  சாலைகள் சிறப்பாக அமைத்துள்ளீர்கள்' என, அவரே என்னைப் பாராட்டியுள்ளார்.

கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், கட்சிக்காக உழைத்தவர்களை மறந்து விட்டு, வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்கள், பணக்காரர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தவர் தான் இந்த பழனிச்சாமி.



நாமக்கல் பிரச்சாரத்தில் பேசிய பழனிசாமி, 'கொடி பறக்குது. பிள்ளையார் சுழி போடப்பட்டு விட்டது' என்றார். ஆனால், த.வெ.க., பொதுக்குழுவில் விஜய் என்ன பேசினார் என்பதை, அனைவரும் அறிவோம்.

ஒற்றுமை உணர்வுடன் வலிமையாக இருந்தால், நம்மை தேடி மற்றவர் வருவர். ஒருவர் முன்னேற வேண்டுமானால், தன்னுடைய காலில் நடந்து செல்ல வேண்டும். பிறர் முதுகில் ஏறி சவாரி செய்யக் கூடாது. அப்படி செய்தால், இந்த நிலைதான் ஏற்படும்.

சிலுவம்பாளையம் பழனிச்சாமியின் மகன், மருமகன், மைத்துனர் ஆகியோர் தான் கட்சியை நடத்துகின்றனர். அவரது அக்கா மகன் தான் எல்லாம். கட்சிக்காக உழைத்தவர்கள், அவர்களிடம் மண்டியிடும் சூழல் ஏற்பட்டுள்ளது."

எனத் தெரிவித்தார். இந்த நிலையில் முன்னாள் எம்.பி., உட்பட 14 பேர் நீக்கம்



 கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் நடந்து கொண்டதால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், நம்பியூர் வடக்கு ஒன்றியம் தம்பி சுப்பிரமணியன், கோபி குறிஞ்சிநாதன், செந்தில் என்கிற கோடீஸ்வரன், அருள் ராமச்சந்திரா, கந்தவேல்முருகன், முத்துசாமி, ரமேஷ், அந்தியூர் மோகன்குமார், நாராயணன், கோட்டுபுள்ளாம்பாளையம் மௌதீஸ்வரன், சத்தியமங்கலம் செல்வம், தமிழ்ச்செல்வி, காமேஷ் ஆகியோர், அ.தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகின்றனர். அ.தி.மு.க.,வினர் யாரும், இவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. என- பழனிச்சாமி பொதுச்செயலர், அ.தி.மு.க., என  அறிவித்துள்ளார். ஆனால் பழனிச்சாமி அவருக்கு தற்போது நெருங்கி வரும் ஆபத்து அறிந்தாலும் வெகுவாக சமாளித்து பேசுகிறார். கோடநாடு கொலை கொள்ளை வழக்கு கோப்புகள் அந்த பங்களாவுலே இருக்கும்னு நினைச்சித் தான்  கொடநாடு கொள்ளை மற்றும் 7 கொலைகள் நடந்திருப்பதாக பேசப்படும் நிலையில்... ஆனால் அதெல்லாம் அதிமுக பொதுச்செயலாளர் வி. கே.சசிகலா நடராஜன் கஸ்டடியிலே  போயஸ் தோட்டத்து வீட்டில் இருந்தது..அதை டாக்டர் வெங்கடேஷ். மற்றும் TTV தினகரன் ன்ன செய்தனர் என நேற்று முன்தினம் பொடி வைத்து ப் பேசிய போதே அவருக்குப் புரிஞ்சிக்க வேணடாமா..


இப்போது கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சிபிஐ விசாரணைக்கு  அனுப்பனும்னு கே. ஏ.செங்கோட்டையன் கொடி புடிச்சிட்டாரு. துவக்கம் நன்றாகவே இருக்கு.



ஆக. பழனிச்சாமி பைல் எல்லாத்தையும் கொடநாடு பங்களாவிலிருந்து ரெக்கவரி செய்து வைச்சிருக்கேன்னு மாஜிக்களை பழனிச்சாமி மிரட்டிக்கொண்டு இருந்ததால் தான் பலருக்கு அவரிடமிருந்து வெளியே வரப்பயம் காரணம் துவக்க நிலையில் வைக்கப்படும் செக் மேட்

அந்தக் கோப்புகள் எல்லாம் இனிமேல்  சிபிஐ வசப்படும் சாமுவேல் மாத்யூ செய்தி உண்மை வெளிவரும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...