முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உத்தராகண்ட் மாநிலம் உருவானதன் வெள்ளி விழாவில் பிரதமர் உரை

உத்தராகண்ட் மாநிலம் உருவானதன் வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

ரூ.8140 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் புதிய திட்டப் பணிகளுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்

தேவபூமியான உத்தராகண்ட் இந்தியாவின் ஆன்மீக இதயத்துடிப்பாக உள்ளது: பிரதமர்

உத்தராகண்ட் மாநிலம் உருவானதன் வெள்ளி விழா கொண்டாட்டம் டேராடூனில் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின் போது, ​​பிரதமர் ரூ.8140 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு நரேந்திர மோடி,  தேவபூமியான உத்தராகண்ட் மக்களுக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.



நீண்ட, அர்ப்பணிப்பு மிக்க போராட்டத்தின் விளைவாக இதே  நவம்பர் 9-ம் தேதி உத்தராகண்ட் தனி மாநிலமாக உருவானது என்றும், இந்த நாள் நம் அனைவருக்கும் பெருமையை ஏற்படுத்துகிறது என்றும் பிரதமர் கூறினார். 25 ஆண்டுகளுக்கு முன்பு திரு அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசில், உத்தராகண்ட் மக்களின் நீண்ட காலக் கனவு நனவானது என்று அவர் எடுத்துரைத்தார். கடந்த 25 ஆண்டுகால பயணத்தை நினைவுகூர்ந்த திரு நரேந்திர மோடி, உத்தராகண்ட் இப்போது பெரிய உயரங்களை எட்டியுள்ளது என கூறினார். இதைப் பார்த்து இந்த அழகான மாநிலத்தை உருவாக்குவதற்காக ஒரு காலத்தில் பாடுபட்ட ஒவ்வொருவரும் மகிழ்ச்சி அடைவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

உத்தராகண்டின் திறன்களை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்ல மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள அரசுகள் உறுதிபூண்டுள்ளன என்று திரு நரேந்திர மோடி கூறினார். உத்தராகண்ட் மாநிலத்துடனான தமது ஆழமான பிணைப்பைப் பகிர்ந்து கொண்ட திரு நரேந்திர மோடி, இந்தப் பகுதியில் தாம் மேற்கொண்ட ஆன்மீகப் பயணங்களின் போது, ​​மலைகளில் வசிக்கும் மக்களால் உத்வேகம் பெற்றதாக குறிப்பிட்டார். இந்த மாநிலம் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில், இது உத்தராகண்டின் எழுச்சியையும் முன்னேற்றத்தையும் வரையறுக்கும் சகாப்தம் என்று அவர் கூறினார்.


25 ஆண்டுகளுக்கு முன்பு, உத்தராகண்ட் புதிதாக உருவாக்கப்பட்டபோது ​​இருந்த சவால்கள் மிகப்பெரியவை என்று நினைவு கூர்ந்த திரு நரேந்திர மோடி, நிதி ஒதுக்கீடு குறைவாக இருந்தது என்றும் வருமான ஆதாரங்கள் குறைவாக இருந்தன என்றும் கூறினார். பெரும்பாலான தேவைகள் மத்திய உதவி மூலம் பூர்த்தி செய்யப்பட்டன என்று அவர் கூறினார். இப்போது நிலை முற்றிலும் மாறிவிட்டது என்று அவர் குறிப்பிட்டார். உள்கட்டமைப்பு, கல்வி, தொழில், சுற்றுலா, சுகாதாரம், மின்சாரம், கிராமப்புற மேம்பாடு போன்ற துறைகளில், உத்தராகண்டின் வெற்றி உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது என்று அவர் கூறினார். 25 ஆண்டுகளுக்கு முன்பு, உத்தராகண்டின் நிதி நிலை அறிக்கை ரூ.4,000 கோடியாக மட்டுமே இருந்தது எனவும், அது இப்போது ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தக் காலகட்டத்தில், மாநிலத்தில் மின் உற்பத்தி நான்கு மடங்கு அதிகரித்துள்ளது எனவும், சாலைகளின் நீளம் இரட்டிப்பாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். முன்பு, ஆறு மாதங்களில் 4,000 விமானப் பயணிகள் மட்டுமே இங்கு வந்தனர் எனவும் ஆனால் இப்போது, ஒரே நாளில் 4,000-க்கும் மேற்பட்ட பயணிகள் வருவதாகவும் அவர் கூறினார்.


கடந்த 25 ஆண்டுகளில் உத்தராகண்டில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை பத்து மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதைப் பிரதமர் சுட்டிக் காட்டினார். இம்மாநிலத்தில் முன்பு ஒரே ஒரு மருத்துவக் கல்லூரி மட்டுமே இருந்தது எனவும் இப்போது பத்து மருத்துவக் கல்லூரிகள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். அனைத்து பரிமாணங்களிலும் உத்தராகண்ட் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.  இந்த மாற்றத்திற்கு உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரது கூட்டு உறுதிப்பாடுதான் காரணம் என்று அவர் கூறினார்.

உத்தராகண்டின் வளர்ச்சிப் பயணத்தை விரைவுபடுத்துவதற்காக இன்று பல திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாக திரு நரேந்திர மோடி கூறினார். கல்வி, சுகாதாரம், சுற்றுலா, விளையாட்டு தொடர்பான இந்தத் திட்டங்கள் இந்தப் பகுதியில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் தெரிவித்தார். டேராடூன், ஹல்த்வானி பகுதிகளின் குடிநீர் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஜம்ரானி, சாங் ஆகிய அணைத் திட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை அவர் எடுத்துரைத்தார். இந்தத் திட்டங்களில் ரூ.8,000 கோடிக்கும் மேல் செலவிடப்படும் எனவும் அவர் கூறினார்.

தேவபூமியான உத்தராகண்ட் இந்தியாவின் ஆன்மீக வாழ்வின் இதயத்துடிப்பு என்று அவர் கூறினார். கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத், ஜாகேஷ்வர், ஆதி கைலாஷ் ஆகியவை நமது நம்பிக்கையை அடையாளப்படுத்தும் புனித யாத்திரைத் தலங்களாக உள்ளன என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். ஒவ்வொரு ஆண்டும், லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த புனித தலங்களுக்கு பயணங்களை மேற்கொள்கின்றனர் என்றும் இது பக்தியை அதிகரிப்பதோடு, உத்தராகண்டின் பொருளாதாரத்தில் புதிய ஆற்றலையும் வழங்குகிறது எனவும் அவர் கூறினார்.

மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து இணைப்பு, உத்தராகண்ட் மாநிலத்தின் வளர்ச்சியை அதிகரிக்கிறது என்பதை எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, தற்போது மாநிலத்தில் ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகமான போக்குவரத்து இணைப்புத் திட்டங்கள் நடைபெற்று வருவதாகக் கூறினார். இந்தத் திட்டங்கள் உத்தராகண்டின் வளர்ச்சியை துரிதப்படுத்தும் என அவர் தெரிவித்தார்.

கடந்த 25 ஆண்டுகளில் உத்தராகண்ட் ஒரு நீண்ட முன்னேற்றப் பயணத்தை கடந்து வந்துள்ளது என்பதை பிரதமர் நினைவு கூர்ந்தார். எதிர்கால இலக்குகள் குறித்து சிந்திக்க இந்த நவம்பர் 9-ம் தேதியை விட சிறந்த நாள் இருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

உத்தராகண்டின் உண்மையான அடையாளம் அதன் ஆன்மீக வலிமையில் உள்ளது என்பதை மீண்டும் எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, வரும் ஆண்டுகளில் இம்மாநிலம் "உலகின் ஆன்மீக மையமாக" தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்று கூறினார். மாநிலத்தில் உள்ள கோயில்கள், ஆசிரமங்கள், தியான மையங்கள், யோகா மையங்கள் ஆகியவற்றை உலகளாவிய கட்டமைப்புடன் இணைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

எல்லைப் பகுதிகளில் துடிப்பான கிராமங்கள் திட்டத்திற்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர், உத்தராகண்டில் உள்ள ஒவ்வொரு துடிப்பான கிராமமும் ஒரு சிறிய சுற்றுலா மையமாக மாற வேண்டும் என்று கூறினார். உத்தராகண்ட் தற்போது ஒரு திரைப்பட படப்பிடிப்பு மையமாக வளர்ந்து வருகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

உத்தராகண்ட் மாநிலம் தனது வெள்ளி விழாவைக் கொண்டாடும் வேளையில், வரும் ஆண்டுகளில் அந்த மாநிலம் வளர்ச்சியின் புதிய உயரங்களைத் தொடும் என்று பிரதமர் முழு நம்பிக்கை தெரிவித்தார். உத்தராகண்ட் தனது கலாச்சாரத்தையும் அடையாளத்தையும் பெருமையுடன் தொடர்ந்து முன்னேற்றும் என்று அவர் கூறினார். அடுத்த 25 ஆண்டுகளுக்கான தொலைநோக்குப் பார்வையை கருத்தில் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் உறுதியாக முன்னேறிச் செல்ல வேண்டும் என்று திரு நரேந்திர மோடி வலியுறுத்தினார். வளர்ச்சியில் உத்தராகண்ட் அரசுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்று கூறி, மாநில மக்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துத் தமது உரையைப் பிரதமர்  திரு நரேந்திர மோடி நிறைவு செய்தார்.

உத்தராகண்ட் ஆளுநர் திரு குர்மித் சிங், உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி, மத்திய இணையமைச்சர் திரு அஜய் தம்தா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...