வியட்நாம் நீதி அமைச்சகத்தின் தூதுக்குழுவினர் இந்தியா வருகை
வியட்நாம் சோசலிசக் குடியரசு மற்றும் சட்ட விவகாரங்கள் துறை பிரதிநிதிகளுக்கு இடையேயான அனுபவப் பகிர்வு இருதரப்பு சந்திப்பு, சட்ட விவகாரங்கள் துறையால் 23.12.2025 அன்று புதுதில்லியின் சாஸ்திரி பவனில் ஏற்பாடு செய்யப்பட்டது.
சட்ட விவகாரங்கள் துறை இணைச் செயலாளர் டாக்டர் ஆர்.ஜே.ஆர் காஷிபட்லா தலைமையிலான குழு, வியட்நாம் நீதி அமைச்சகத்தின் துணைத் தலைமை இயக்குநர் திருமதி டிரான் தி புவோங் ஹோவா தலைமையிலான பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தியது.
சட்ட விவகாரங்கள் துறை மற்றும் நீதித் துறை ஆகியவை செயல்விளக்கக் காட்சியை வழங்கின. சந்திப்பின் முடிவில், இரு தரப்பு அதிகாரிகளும், வெளிநாட்டுத் தீர்ப்புகள், விருதுகள் போன்றவற்றைச் செயல்படுத்துவது உட்பட சட்டத் துறையில் ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக வசதி ஒப்பந்தங்கள் தொடர்பாக 31 ஜூலை 2024 அன்று கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விதிகளைப் பயன்படுத்த ஒப்புக்கொண்டனர்


கருத்துகள்