இளைஞர்கள் தங்களது அடிப்படை கடமைகளை நிறைவேற்ற வேண்டும் – குடியரசுத் துணைத்தலைவர்
திருவனந்தபுரத்தில் உள்ள மர் இவானியோஸ் கல்லூரியின் 75-ம் ஆண்டு தின கொண்டாட்டத்தில் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது பேசிய குடியரசுத் துணைத்தலைவர், மர் இவானியோஸ் கல்லூரி போன்ற நிறுவனங்கள் கல்வியின் மாற்றத்தக்க சக்திக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றன என்று தெரிவித்தார். கல்வி என்பது அறிவை வழங்குவது மட்டுமின்றி, சமூகத்தை அறியாமை மற்றும் ஏற்றத்தாழ்வுகளிலிருந்து விடுவிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
அரசியல் சாசன மாண்புகளையொட்டி, கல்வி மற்றும் ஆன்மீக நிறுவனங்கள் நாட்டின் ஒற்றுமையையும் சமூக நல்லிணக்கத்தையும் வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று அவர் கூறினார்.
உலக நாடுகள் தலைமைத்துவம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளுக்காக இந்தியாவை உற்றுநோக்கியுள்ள நிலையில், வரலாற்றில் இந்தியா ஒரு திருப்புமுனையான தருணத்தில் உள்ளதாக குடியரசுத் துணைத் தலைவர் குறிப்பிட்டார். இளைஞர்கள் தங்களுடைய அரசியலமைப்பு உரிமைகளுக்காக மட்டுமின்றி, பன்முகத்தன்மையை மதித்தல், அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளல், நாட்டின் ஒற்றுமைக்கான அர்ப்பணிப்பு உள்ளிட்ட தங்களுடைய அடிப்படைக் கடமைகளையும் உறுதி செய்ய வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார். தேசிய கல்விக் கொள்கை 2020, நாட்டின் கற்றல் சூழலை மாற்றியமைப்பதாக குடியரசுத் துணைத்தலைவர் குறிப்பிட்டார். மேலும்
ஸ்ரீ நாராயண குருவின் போதனைகள் மூலம் இளைஞர்கள் உத்வேகம் பெறவேண்டும் – குடியரசுத் துணைத்தலைவர்
கேரள மாநிலம் வர்க்கலாவில் உள்ள சிவகிரி மடத்தில் 93-வது சிவகிரி யாத்திரையை குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், சிவகிரியை வெறும் ஒரு புனித யாத்திரைத் தலமாக மட்டுமின்றி, ஸ்ரீ நாராயண குருவால் கற்பனை செய்யப்பட்ட ஒரு வாழும் தத்துவமாகவும், சமூக விழிப்புணர்வின் பயணமாகவும் திகழ்வதாக விவரித்தார்.
சிவகிரி, ஆன்மீகத் தேடலையும் சமூகப் பொறுப்பையும் இணக்கமாக ஒருங்கிணைப்பதன் அடையாளமாகத் திகழ்கிறது என்றும் குடியரசுத் துணைத் தலைவர் கூறினார்.
சிவகிரி யாத்திரை ஒரு சடங்கு சார்ந்த செயலாக மட்டுமின்றி, கல்வி, தூய்மை, அமைப்பு, உழைப்பு, சுயமரியாதை ஆகியவற்றின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு இயக்கமாகவே கருத்தாக்கம் செய்யப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீ நாராயண குருவால் எழுப்பப்பட்ட ஒரு சக்திவாய்ந்த கேள்வி சமூகத்தை மாற்றியமைத்தது என்று குடியரசுத் துணைத் தலைவர் குறிப்பிட்டார். ஒரு மனிதனை மற்றொரு மனிதனை விடத் தாழ்வாக ஏன் நடத்த வேண்டும்? என்ற அநீதிக்கும், பல நூற்றாண்டுகால பாகுபாட்டிற்கும் பதிலளிக்கும் விதமாக "மனித சமுதாயத்திற்கு ஒரே சாதி, ஒரே மதம், ஒரே கடவுள்." என்று அவர் குறிப்பிட்டதாக திரு சி பி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
குருவின் புரட்சி அமைதி நிறைந்ததாகவும், கருணை மிக்கதாகவும், மாற்ற முடியாததாகவும், கண்ணியம், சமத்துவம் மற்றும் மனிதநேயத்தில் வேரூன்றியதாகவும் இருந்தது என்று அவர் கூறினார்.
ஆன்மீகம் மற்றும் பகுத்தறிவின் இந்த ஒருங்கிணைப்பு, குருவை ஒரு துறவியாக மட்டுமின்றி, எதிர்காலத்திற்கான ஒரு வழிகாட்டியாகவும் ஆக்கியது என்று அவர் கூறினார்.
இந்தியாவின் நாகரிகப் பண்புகளை எடுத்துரைத்த குடியரசுத் துணைத் தலைவர், இந்திய ஆன்மீகம் எப்போதும் அன்பையே மிக உயர்ந்த வழிபாட்டு வடிவமாக வைத்துள்ளது என்று தெரிவித்தார். ஸ்ரீ நாராயண குரு இந்தத் தத்துவத்தை செயல்கள் மூலம் வாழ்ந்து காட்டினார் என்றும், சமூகத்திற்குச் செய்யும் சேவையே சடங்குகளை விடச் சிறந்தது என்றும், சக மனிதர்கள் மீதான அன்பே பக்தியின் உண்மையான வடிவம் என்றும் அவர் நிரூபித்தார் என்றும் குறிப்பிட்டார்.
கேரளா உலகிற்கு அளித்த மாபெரும் பங்களிப்புகள் ஆதி சங்கராச்சாரியார் மற்றும் ஸ்ரீ நாராயண குரு ஆவர் என்றும், அவர்களின் தத்துவங்கள் மனித சமூகத்திற்குத் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருவதாகவும் குடியரசுத் துணைத் தலைவர் கூறினார்.
இந்தியாவில் யாத்திரை என்பது சுற்றுலா அல்ல, அது ஒரு மாற்றத்திற்கானது என்று குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர், சிவகிரி இந்த நாகரிக உண்மையை எடுத்துக்காட்டுவதாக குறிப்பிட்டார். பல நூற்றாண்டுகளாகத் துறவிகள் பிராந்தியங்கள் மற்றும் மொழிகளைக் கடந்து சுதந்திரமாகப் பயணம் செய்து, மதங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தில் வேரூன்றிய இந்தியாவின் நீடித்த வலிமையை வலுப்படுத்தினர் என்று அவர் குறிப்பிட்டார். ஸ்ரீ நாராயண குருவின் போதனைகள் மூலம் இளைஞர்கள் உத்வேகம் பெறவேண்டும் என்றும் குடியரசுத் துணைத்தலைவர் வலியுறுத்தினார். காசியில் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கிய காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்தது. அதன் நிறைவு விழா ராமேஸ்வரத்தில் இன்று நடைபெற்றது.இதில், இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.நிகழ்வில் தலைமையுரையாற்றிய இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்," புனித பாரத அண்னையின் பாதத்தை தொட்டு தொடங்குகிறேன். அப்துல் காலம் பிறந்த மண்ணில் காசி தமிழ் சங்கமம் நிறைவு விழா நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. காசிக்கும் ராமேஸ்வரத்திற்கும் பந்தத்தை யாராலும் பிரிக்க முடியாத உறவை கொண்டது. அதனால் தான் காசியில் தொடங்கிய காசி தமிழ் சங்கமத்தின் நிறைவு விழா ராமேஸ்வரத்தில் நடைபெற்று வருகிறது.சி.பி.ராதாகிருஷ்ணன் உரை
நாம் நாட்டிற்கு இழுக்கு ஏற்படும் போது அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். பாரதி கண்ட கனவு பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களால் நிறைவேறி வருகிறது. தமிழ் கலாச்சாரம் உயர்வானது, தமிழ் மொழி மேன்மையானது என கடைசி மனிதனின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார். தமிழகத்தில் யார் சொத்துக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. என்றும் மக்களில் ஒருவராக உங்களில் ஒருவராக இருப்பேன்.இன்றைக்கும் என்றைக்கும் பாரத தேசத்தை யாராலும் பிளவு படுத்த முடியாது. இந்த தேசம் வாழ்க என்று சொல்லும் நாம் தமிழுக்கு எதிரானவர்களா? இல்லை. எப்படி தேசம் ஒரு கண் தேசன் என்று சொன்னால், இன்னொரு கண் தங்க தாய் மொழி நம் தமிழ் தான். அதனை யாராலும் மாற்ற முடியாது. மோடி அழகாக சொன்னார். தொன்மையான காசி நகரமும் உலகத்தின் தொன்மையான மொழியான தமிழும் இணைகிறது என்று சொன்னால் தான் அது காசி தமிழ் சங்கமம் என்று சொன்னார்கள்.அப்துல் கலாமை தந்த மண்ணில் இந்த விழாவை கொண்டாடுவது நம் அனைவருக்குமே பெருமை. ராமேசுவரம் மண்ணில் இந்த இரண்டு ஒளி விளக்குகள் காசியும், தமிழும் சங்கமிக்கும் விழாவாக இது நடைபெறுகிறது. தமிழகத்தின் வீதியில் இருந்து தேசியத்தை பற்றி யோசித்து பாடியவர் பாரதியார். எத்தனை மொழிகளை நாம் பேசிநாலும் தர்மத்தின் பிரகாரம் நாம் வாழ வேண்டும் என்கிற உயர்த தத்துவம் தான் இன்று இந்திய தேசத்தை ஒருங்கிணைந்த தேசியமாக மாற்றி இருக்கிறது. காசியும், ராமேசுவரமும் யாராலும் பிரிக்க முடியாத புனித நகரங்கள். உலகில் பாரதம் உச்சம் தொடும்போது, பாரதத்தில் தமிழகம் உச்ச நிலையை தொட வேண்டும். வளமான தமிழகம், வளமான இந்தியா. பாரதத்தை எந்த தீய சக்தியாலும் பிளவுபடுத்த முடியாது." என்றார்.










கருத்துகள்