தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா கண்ணந்தங்குடி அருகிலுள்ள கீழையூர் தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எல்.கணேசன், (வயது 91), உடல் நலக்குறைவால் காலமானார்.
அவரது மறைவுக்கு முதல்வர் மு. க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்த அறிக்கையில்: தி.மு.க., உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் எல்.கணேசன் மறைந்த செய்தி அறிந்து துயரமடைந்தேன். மொழிப்போர்க் களத்தில் ஹிந்தி ஆதிக்கத்திற்கு எதிராகப் புறப்பட்ட தளகர்த்தர்களில் ஒருவர் எல்.கணேசன், சட்டசபை, பார்லிமென்ட் என முழங்கிய எல்.கணேசனை இனிக் காண முடியாது என்பதை எண்ணும் போதே வேதனை அளிக்கிறது. மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். எல்.கணேசன் என்றும் நம் நெஞ்சங்களில் நிறைந்திருப்பார் எனக் கூறியுள்ளார். 1965 ஆம் ஆண்டில் நடந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தளகர்த்தர்களில் முதன்மையானவர்.1971 ஆம் ஆண்டில் திமுகவின் மாநில மாணவரணிச் செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.
1993 ஆம் ஆண்டில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வை. கோபால்சாமி என்ற வைகோ தலைமையில் உருவான போது இவர் அதன் அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது திமுகவில் இணைந்து தேர்தல் பணிக்குழுச் செயலாளராக பணியாற்றினார். தற்போது தஞ்சாவூரில் காலமானார். மொழிப்போர் தளபதி என அழைக்கப்படும் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் எல்.கணேசன் 2 முறை ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ., எம்.எல்.சி., மாநிலங்களவை எம்.பி. என பதவிகளை வகித்துள்ளார் எல்.கணேசன் சில ஆண்டுகள் கழித்து மீண்டும் திமுகவில் இணைந்து, தேர்தல் பணிக்குழுச் செயலாளராக செயல்பட்டார். அரசியல் வட்டாரங்களில் “எல்.ஜி.” என்றே அறியப்பட்டார். வெற்றிலைப் பெட்டி சகிதம் இருக்கும் அவரை பலமுறை நாம் சந்தித்து பேசியுள்ளோம். அவர் பிரபல சமூகத்தில் பிறந்த போதிலும் சீர்திருத்தக் கொள்கை கொண்ட அரசியல் தலைவராவார்.கடந்த ஒரு வருடமாகவே எல்.ஜி உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் வெளியில் செல்லாமல் பெரும்பாலும் வீட்டிலேயே இருந்தார். சமீபத்தில் தஞ்சாவூர் வந்த முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, எல்.ஜி வீட்டுக்குச் சென்று நலம் விசாரித்துவிட்டு சென்றனர்.
அப்போது ஸ்டாலின் எல்.ஜியின் கைகளைப் பற்றிக்கொண்டு தன் அன்பை வெளிப்படுத்தி தைரியம் கொடுத்தாராம். என்னை முதன் முதலில் இளந்தலைவர் என அழைத்தவர் எல்.ஜி அண்ணன்தான். இதை நான் பல மேடைகளில் பேசியிருக்கிறேன். தன் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசக்கூடியவர் என்றாராம் ஸ்டாலின்.தஞ்சாவூர் பாலாஜி நகரில் வசித்து வந்தார். இவரது மனைவி கமலா தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
இன்ஜீனியரான முதல் மகன் எல்.ஜி.அண்ணா திமுக-வில் தஞ்சை மத்திய மாவட்டப் பொருளாளராக இருக்கிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் தஞ்சாவூர் அல்லது ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட சீட்டுக் கேட்டு வருகிறார். மகள் எல்.ஜி.மாதவி, இருவரும் டாக்டர்
கடந்த ஒரு வருடமாகவே எல்.ஜி உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் வெளியில் செல்லாமல் பெரும்பாலும் வீட்டிலேயே இருந்தார். சமீபத்தில் தஞ்சாவூர் வந்த முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, எல்.ஜி வீட்டுக்குச் சென்று நலம் விசாரித்துவிட்டு சென்றனர்.
அப்போது ஸ்டாலின் எல்.ஜியின் கைகளைப் பற்றிக்கொண்டு தன் அன்பை வெளிப்படுத்தி தைரியம் கொடுத்தாராம். என்னை முதன் முதலில் இளந்தலைவர் என அழைத்தவர் எல்.ஜி அண்ணன்தான். இதை நான் பல மேடைகளில் பேசியிருக்கிறேன். தன் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசக்கூடியவர் என்றாராம் ஸ்டாலின்.
திமுக-வில் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினராகப் பதவி வகித்த நிலையில் வயது மூப்பு மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் மருத்துவக்கல்லூரி சாலை, பாலாஜி நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
திமுகவினர் மட்டுமின்றி பலரும் அவரது உடலுக்கு அணைத்து கட்சி நபர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். எல்.ஜியின் மறைவு தஞ்சாவூர் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்.ஜி குறித்து திமுக தரப்பைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் சிலர்
''கண்ணந்தங்குடியில் விவசாயத்தைப் பின்னணியாகக் கொண்ட எளிய குடும்பத்தில் பிறந்தவர் எல்.கணேசன். சென்னையில் தங்கிப் படித்தபோது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு தீவிரமாகச் செயல்பட்டார்.
மறைந்த எல்.கணேசன் ஏராளமான மாணவர்களை ஒருங்கிணைத்து இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கெடுக்க செய்தார். திமுகவில் மாணவரணி செயலாளராக இருந்தார். இந்தி எதிர்ப்பை வலுவாகப் பின்பற்றி, தொடர் போராட்டத்தை முன்னெடுத்தது, மொழிப்போர் தியாகி என்ற பெயர் கிடைக்க காரணமானது.
அந்தச் சமயத்தில், அண்ணாவிடம் இந்தி எதிர்ப்பு குறித்து கேட்டபோது, 'என் கையில் எதுவும் இல்லை, எல்லாம் எல்.ஜியிடம் உள்ளது' என்றாராம். 1967 சட்டமன்றத் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் எல்.கணேசன் போட்டியிடுகிறார். சென்னையிலேயே வலம் வந்த எல்.ஜியை மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி சொந்த ஊரில் போட்டியிடச் சொல்லி அனுப்பினார்.
அப்போது, மதுக்கூர் ஒரத்தநாடு தொகுதியில் இருந்தது. காங்கிரஸ் கட்சியில் செல்வந்தரான தண்டாயுதபாணி போட்டியிட்டார். எளியவரான எல்.ஜி அவரை எதிர்த்து போட்டியிட்டார். எல்.ஜியிடம் தேர்தல் செலவிற்குப் பணம் இல்லை.
இதையறிந்த கருணாநிதி, மதுக்கூரில் காகிதப்பூ நாடகம் போட்டு அதில் வசூல் ஆன ரூபாய்.4,000 பணத்தை எல்.ஜி கையில் கொடுத்து பிரசாரம் செய்ததுடன், ஜெயிச்சுட்டு வாய்யானு சொல்லிட்டு போனாராம். எல்.ஜியும், எம்.ஜி.ஆர், மாதவனுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எல்.ஜியின் வளர்ச்சியில் கருணாநிதி தனி கவனம் செலுத்தினார்.
1987 ஆம் ஆண்டில் திமுக ஆட்சி அமைகிறது. எல்.ஜி அமைச்சர் ஆவார் எனப் பரவலாகப் பேசப்பட்டது. ஆளுநரைச் சந்தித்து அமைச்சரவைப் பட்டியலை கொடுக்கச் சென்றபோது, 'நீ சட்டத்துறை அமைச்சர்யா'னு சொல்லிவிட்டுப் போனாராம் கருணாநிதி. ஆனால் சில காரணங்களால் அமைச்சர்கள் பட்டியலில் எல்.ஜி பெயர் இடம் பெறவில்லை.
உடனே, காரில் ஊருக்குக் கிளம்பி விட்டார் எல்.ஜி. கார் திண்டிவனத்தைக் கடந்து சென்ற போது காவல்துறை ஆய்வாளர் காரை மறைத்து, முதல்வர் உங்களைத் திரும்பி வரச் சொன்னார் என்றுள்ளனர்.
பதைபதைத்து நேரில் சென்ற எல்.ஜியிடம், 'உன்னை முதலமைச்சரின் பேரவை செயலாளராக்கியுள்ளேன்' என்றாராம். தன் மனம் வருந்தக் கூடாது என்பதை உணர்ந்து கருணாநிதி செய்த செயலை எண்ணி கைகளைப் பற்றிக் கொண்டாராம் எல்.ஜி.
கட்சி பொதுக்குழுக்களில் முரசொலி மாறன் சில கருத்துக்களை முன்வைப்பார். முரசொலி மாறன், கருணாநிதியின் எண்ணத்தைப் பேசக்கூடியவர் என்பதால் எதிர் கருத்தை யாரும் முன்வைக்க மாட்டார்கள். ஆனால் எல்.ஜி, முரசொலி மாறன் பேசியதில் உள்ள நிறைகுறைகளை வெளிப்படையாக எடுத்து வைப்பாராம்.
மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசக்கூடியவர். கருணாநிதியுடன் ஏற்பட்ட சில மனக்கசப்பு காரணமாக வைகோவுடன் சென்று மதிமுகவில் இருந்தார். எதிர் அணியில் இருந்தாலும் கருணாநிதி, எல்.ஜி மீது தனிப்பட்ட முறையில் பாசம் காட்டினார்.
பின்னர் மீண்டும் கலைஞர் கருணாநிதியின் கைகளைப் பற்றிக் கொண்டவருக்கு உரிய அங்கீகாரம் தந்தார் கருணாநிதி. கல்வி ஆற்றல், பேச்சாற்றல் மிக்க எல்ஜியின் பேச்சை கருணாநிதியே பலமுறை ரசித்து பாராட்டியிருக்கிறார்.மொழிப்போர் நடத்திய எல்.கணேசனுக்கு இதய அஞ்சலி செலுத்தும் பலரில்
1986 ஆம் ஆண்டு நிகழ்வு இது மாதத்தில் ஐந்தாறு நாட்கள் தஞ்சாவூர் அசோகா விடுதியில் தங்குவது நமது பத்திரிகை நண்பர் ஒருவரது வழக்கம். அங்கே எல்.ஜி க்கு நிரந்தரமாகவே ஒரு அறை இருந்தது. வெற்றிலைப் பெட்டி சகிதம் காட்சியளிப்பார். கட்சிக் காரர்களும் ,அப்போது நகர திமுக செயலாளராக இருந்த பூபதியும் ( அஞ்சுகம் பூபதி அவர் மகள் எனக் கருதுகிறேன் ) அவரைச் சந்திக்க வழமையாக வருவதுண்டு.
அப்போது அந்த விடுதியில் ஒரு அய்யர் மேலாளராக இருந்துள்ளார். அவரைப் பொறுத்த வரை பூபதியும் எல்.ஜி யும் 'அப்போது அவருக்கு தீய சக்திகள் ஆனால் அரசியல் என்பது சிலரை மட்டுமே வளப்படுத்தி பலரை கீழே தள்ளி விடும் அதில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் உள்ளிட்ட பலர் உண்டு ஆனால் எல்ஜி இல்லாமல் தஞ்சாவூர் அரசியல் கடந்த 40 ஆண்டுகள் நடக்கவில்லை என்பதே உண்மை.'.






கருத்துகள்